Skip to main content

``செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை!" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும் அவரை நீக்குவதும் தமிழக முதலமைச்சரின் விருப்பம். ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான விளக்கங்களைத் தருவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா... என்று 2024 தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். அந்த அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. நாங்கள் சொல்லும் விதிமுறைகளின்படிதான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். அமைச்சரவையில் ஒருவரை நீக்குவதற்கு அவருக்கு உரிமை இருக்கா என்றால், கிடையாது. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை. செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும் வைத்துக்கொள்ளாததும் முதலமைச்சரின் விருப்பமே, தவிர அது ஆளுநரின் விருப்பம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள் ஒவ்வொருத்தரையும் விலக்கிக்கொண்டு போகிறேன் என்று சொன்னால்... அப்படிச் செய்ய முடியுமா, முடியாது. இது ஜனநாயக நாடு, ஆளுநரின் சர்வாதிகார நாடு இல்லை. அ.தி.மு.க போன்ற பா.ஜ.க-வுக்கு அடிமைகளாக இருக்கும் கட்சியினர்மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்து மிரட்டி பணியவைக்க செய்யும். அவர்களின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை இருக்குமே தவிர காவல்துறையாகவோ பாதுகாப்புத் துறையாகவோ இருக்காது. அமலாக்கத்துறை வழக்குகளின் நிலைமைகளை நாட்டு மக்கள் இன்று நன்றாகக் கவனித்து வருகின்றனர். அமலாக்கத்துறைக்காக நாங்கள் பயப்படப்போவது கிடையாது. நீதிமன்றம் இருக்கிறது, இன்னும் ஜனநாயகம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி இருக்கின்றது என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் இருக்கிறார்கள். அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களைக் கைவைக்காது. ஐந்தாண்டுகள் மட்டுமல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே நிலைதான். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது சில ஆவணங்களைத் தூக்கி வெளியே எறிந்தார்கள். அன்றைக்கு ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார். ஆவணத்தை வெளியே வீசுவதும், அப்படி வீசும்போது ஒருவர் எடுத்துக்கொண்டு ஓடும் வீடியோவும் வைரலானது. அதையே சாட்சியமாக வைத்து அப்போது விஜயபாஸ்கரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா.. என்பதை 2024-ல் மக்கள் முடிவுசெய்வார்கள்" என்றார்.
http://dlvr.it/SrSBML

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...