Skip to main content

``தமிழகத்தில் ​அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்!" - மத்திய இணை அமைச்சர்​​ குற்றச்சாட்டு

​திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டப் பணிகளை, மாநிலங்களுக்கான சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை இணையமைச்சர் ​​நா​ரா​​யணசாமி ஆய்வுமேற்கொண்டார். ​அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ​நாராயணசாமி​, ​``மதுரையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வுசெய்தேன். குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.  ஆய்வு ​பெங்களூருவில் முதல் தரமான கட்டடத்தைக் கட்டுவதற்கு சதுர​ அ​டிக்கு 2,​000 ​ரூபாய்​ முதல்​ ​2,100 ​ரூபாய் ​வரை செலவு ஏற்படுகிறது. ஆனால், ​​தமிழகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற கட்டுமானப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 13​​ லட்ச​ம் ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. இதனால் கட்டடத்தின் மதிப்பு 2 மடங்கு உயர்த்த​ப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. ​தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. கடனுதவி திட்டங்கள் குறித்து வங்கியாளர்களிடம் புள்ளிவிவரங்கள் இல்லை. மதிப்பாய்வுக் கூட்டம் இதனால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியரைக் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தினேன்"​ என்றார். ​கம்யூனிஸ்ட் கவுன்சிலருடன் மல்லுக்கட்டிய திமுக கவுன்சிலர்கள்- திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்ட சலசலப்பு
http://dlvr.it/SrPQFN

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...