Skip to main content

3 வயத கழநதயன நககல பரசன... ஆணறபபல அறவ சகசச சயத மரததவமன: உரமம ரதத!

நாக்கில் பிரச்னை என மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 வயது சிறுவனுக்கு, ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (circumcision surgery) செய்த மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

உத்தரப்பிரதேச மாநிலம், பிரேலி மாவட்டத்தில் உள்ள எம் கான் மருத்துவமனைக்கு (M Khan Hospital), மூன்று வயதுக் குழந்தையை சிகிச்சைக்கு ஜூன் 23 அன்று கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, அங்குள்ள மருத்துவர்கள் குழந்தைக்கு ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர்.

இதனை அறிந்த உறவினர்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பல இந்துத்துவ அமைப்புகள், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரேலி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்குக்கு உத்தரவிட்டார்.

புகார் சரியானது என கண்டறியப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், அந்த மருத்துவமனையின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்யவும், முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

சிகிச்சை

இதனிடையே டாக்டர்கள் குழு ஒன்று, மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தியது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களின் வாக்குமூலமும், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் சேகரிக்கப்பட்டன. 

மருத்துவமனையின் அனைத்து ஆவணங்களும் கஸ்டடியில் எடுக்கப்பட்டதோடு, மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...