Skip to main content

மளககடட... 100% கணபபடதத மடயம? மரததவர தரம நமபகக!

மூளையில் ஏற்படும் கட்டிகள் (Brain tumor) குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பெரிய அளவில் இல்லை. மூளைக்கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகளும் அடங்கும் என்றாலும், அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய்க் கட்டியாகிவிடாது. சாதாரண கட்டிகள்தான் இதில் பெரும்பான்மை.

மூளைக்கட்டிக்கான அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மதுசூதனன் விரிவாக விளக்குகிறார்...

Dr. K. Madhusuthan Neurology & Neuroscience M.B.B.S., M.S., M.Ch. Trichy - Cantonment

``ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைப்போல் மூளைப் புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் அதிகளவில் கலந்திருப்பது, பல்வேறு வகையான கதிர்வீச்சு, மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மரபு இதற்கு அடிப்படை காரணங்களாக உள்ளன.

குறிப்பாக பெரும்பாலான மூளைக்கட்டி பாதிப்பிற்கு மரபணு தொடர்பான மாற்றங்களே காரணமாக இருக்கின்றன. இந்த மரபணு பாதிப்பிற்கு விண்ணில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் வீச்சுகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கதிர்வீச்சுகள் அடிப்படையானவை. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகள், ரசாயனங்களும் மூளைக்கட்டிகளை ஏற்படுத்துவதில் அதிக பங்கு பெறுகின்றன.

அறிகுறிகள் என்ன?

மூளையில் கட்டி ஏற்பட்டாலே அதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், மூளையில் ஏற்படும் 80% கட்டிகள் சாதாரண கட்டிகள், 20% கட்டிகள் மட்டுமே புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கின்றன. சாதாரண கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.

இன்றைய நவீன மருத்துவ வசதிகள் காரணமாக அறுவை சிகிச்சை மூலமோ, ஃபோக்கஸ்டு ரேடியேஷன் (Focused Radiation) சிகிச்சை மூலமாகவோ மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளைக்கூட, 100% முழுமையாக குணப்படுத்திவிட முடியும். அதனால், மக்களுக்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மூளைக் கட்டி

மூளையில் கட்டி ஏற்பட்டாலே அது புற்றுநோய்க் கட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக யாருக்கும் மூளைப் புற்றுநோய் வருவதில்லை. மூளைக்கட்டி ஒருவருக்கு இருந்தால் அவருக்கு தீராத தலைவலி ஏற்படும். காலையில் தூங்கி விழிக்கும்போது தலைவலி ஏற்ட்டாலோ, தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டாலோ, வலிப்பு நோய் இல்லாதவர்களுக்கு திடீரென வலிப்பு ஏற்படுவது, உடல் மரத்துப்போதல், கண் பார்வை குறைதல், கேட்கும் திறன் குறைதல் போன்றவை ஏற்பட்டாலோ மூளைக்கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம்.

நீண்ட காலமாக ஒருவருக்கு தலைவலியோ, ஒற்றைத்தலை வலியோ இருந்தால் அது மூளைக்கட்டியாக இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து அதிகாலையில் தலைவலியும், வாந்தியும் சேர்ந்து ஏற்படும்போது, அது மூளைக்கட்டிக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்

மூளையில் ஏற்படும் கட்டிகளுக்கான சிகிச்சை, முதலில் அந்தக் கட்டியின் தன்மை என்ன என்பதைக் கண்டறிவதில் தொடங்குகிறது. மூளைக்கட்டிக்கான அறிகுறிகள் தென்பட்டால், முதலில் சி.டி ஸ்கேன் செய்து கட்டியை உறுதி செய்யலாம். 80% பேருக்கு சி.டி. ஸ்கேன் மூலமே கட்டி உறுதி செய்யப்படும். 20% பேருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் தேவைப்படலாம்.

சி.டி. ஸ்கேன்

சாதாரண கட்டியை தேவையைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கீ ஹோல் (Key-Hole) அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபிக் (Endoscopy) சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியும். சில காலம் முன்பு வரை, மூளைக்கட்டி சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு, உடல் செயலிழந்து போதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது நவீன ரோபாட்டிக் தொழில்நுட்பங்கள் வந்த பிறகு, மூளையில் உள்ள கை, கால் நரம்புகள், செவி மற்றும் கண்களுக்குள் செல்லும் நரம்புகளுக்கு அருகே கட்டி இருந்தாலும் அந்த உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கைகொடுக்கும் நவீன மருத்துவம்!

அறுவை சிகிச்சை மட்டுமல்லாது புற்றுநோய்க் கட்டிகளுக்கு கீமோ கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையிலும்கூட தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டிக்கு அருகில் உள்ள எந்த நரம்புக்கும் பாதிப்பு ஏற்படாமல், கட்டியை மட்டும் கதிர்வீச்சு மூலம் சரிசெய்ய முடியும். பிறந்த குழந்தைகளில் இருந்து முதியோர் வரை பலருக்கும் மூளைக்கட்டிகள் தற்போது காணப்படுகின்றன. இதில் குழந்தைகளுக்கு மரபு வழியாக இந்தக் கட்டிகள் ஏற்படுகின்றன.

குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் மூளைக்கட்டிகள் வீரியமிக்கதாகக் காணப்படுகின்றன. 30 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் கட்டிகள் பெரும்பாலும் தீவிரம் குறைந்ததாக இருப்பதோடு, எளிதில் குணப்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

சிகிச்சை

ரத்தப்புற்று நோய், மார்பகப் புற்றுநோய் போன்றவை பரவி மூளைக்கட்டியாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. இப்படிப் பரவக்கூடிய கட்டிகளை இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களது வாழ்நாளை நீட்டிக்கவும் முடியும்.

இன்றைய நவீன மருத்துவ சூழலில், மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டர்களின் நோய் தீர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகையும் செய்யப்படும்" என்கிறார் மருத்துவர் மதுசூதனன்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...