Skip to main content

Yashasvi Jaiswal: 6,6,4,4,2,4 `பார்த்தேன். வியந்தேன்...' யாஷஸ்வியைக் கொண்டாடும் கிரிக்கெட் உலகம்!

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக வென்றிருக்கிறது. 150 ரன்கள் டார்கெட்டை 13.1 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி சேஸ் செய்திருக்கிறது. இந்த அதிரடி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான்.

47 பந்துகளில் 98 ரன்களை எடுத்து அகத்தியிருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். யாஷஸ்வியின் இந்த அதிரடியை பார்த்து கிரிக்கெட் உலகை சார்ந்த பலருமே வியப்போடு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கும் போதே விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருந்தார். அதில்,

'சமீபத்தில் நான் பார்த்து வியந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. யாஷஸ்வி, ஒரு பெரும் திறமையாளன்' என பதிவிட்டு யாஷஸ்வியின் புகைப்பட்டத்தையும் போட்டிருந்தார்.

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், 'மிகச்சிறப்பான இன்னிங்ஸ். மிகச்சிறப்பான வீரர். தலைவணங்குகிறேன்' என யாஷஸ்வியை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் சூர்யா.

யாஷஸ்வியின் அதிரடியை பற்றியும் பட்லரின் ரன் அவுட் பற்றியும் பதிவிட்டிருந்த ஹர்ஷா போக்லே, 'இந்தளவுக்கு ட்ராமா நிறைந்த 3 ஓவர்களை நான் பார்த்ததே இல்லை.' என பதிவிட்டிருந்தார்.

கிரிக்கெட் விமர்சகரான ஜாய் பட்டாச்சார்யா, 'யாஷஸ்வி இந்திய அணிக்காக ஆட ஏற்கனவே தயாராகிவிட்டார்.' என பதிவிட்டிருந்தார்.

போட்டி முடிந்த உடனேயே கொல்கத்தா அணியின் டிவிட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் வந்தது. அதில், 'இது யாஷஸ்வியின் இரவு. நீங்கள் அருமையாக ஆடினீர்கள் யாஷ்!' என அடி வாங்கிய கொல்கத்தா அணியே யாஷை வாழ்த்தியிருந்தது. கொல்கத்தா அணியின் அட்மினை போன்றேதான் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவும் பேசியிருந்தார். 'யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டியே ஆக வேண்டும். அவர் என்ன நினைத்தாலும் நிஜமாகும் நாளாக இது அமைந்துவிட்டது.' என நிதிஷ் ராணா பேசியிருந்தார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில்,

சஞ்சு சாம்சன்
'எனக்கு இன்றைக்கு செய்ய வேண்டிய வேலை எதுவுமே இல்லை. பந்துக்கு பேட்டை விட்டு சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து எதிர்முனைக்கு சென்று யாஷஸ்வியை வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் என்னுடைய வேலையாக இருந்தது.' என்றார்.

யாஷஸ்விக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, 'இந்த அதிவேக அரைசதத்திற்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது. உங்களின் திறன் உங்களை இன்னும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு கூட்டிச் செல்லும்.' என ட்வீட் செய்திருக்கிறார்.

யாஷஸ்வியின் அதிரடி இன்னிங்ஸை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...