Skip to main content

புரையோடிப்போன சிந்தனைகள்; புரிந்து கொள்ளப்படாத மாதவிலக்கு துயரங்கள்! |#MHDay2023

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும்கூட மாத விலக்கு என்பது முற்றிலும் ``பொம்பிளைங்க சமாச்சாரமாக”வே நீடிக்கிறது. பாலியல் கல்வியின் பகுதியாக நம் குழந்தைகளிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இந்த இயற்கை நிகழ்வு பற்றிய தெளிவு, பாலியல் கல்வியை ஏற்காத நம் கல்விமுறையால் முடக்கப்பட்டுவிட்டது. புற வாழ்க்கையை மிக நவீனமாக வடிவமைத்துக் கொண்டுள்ள நம் சமூகம், உள்ளுக்குள் மிகவும் பழைய சிந்தனைகளால் புரையோடிப்போய் இருக்கிறது.

periods blood

மாதவிலக்கு குறித்த எண்ணற்ற புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன என்றாலும், அவற்றை நம் சமூகம் வாசிக்கவில்லை. பொதுவாகவே நம் சமூகம் புத்தக வாசிப்பில் ஆகக்கடைநிலையில் நிற்கும் சமூகம்தான். அதிலும் மாதவிடாய் பற்றி எங்கே வாசிக்கும்? ஆகவே ஆண்களுக்குத் திருமணமான பிறகுதான், மனைவி வழியாக மாதவிலக்கு பற்றிய சிறு அறிமுகம் கிடைக்கிறது. தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு ஆண் சிறுகதை எழுத்தாளர்களில் யாரேனும் மாதவிலக்கு பற்றி எழுதியிருக்கிறார்களா என்று துருவிப் பார்க்கும் ஆவல் எழுந்து பார்த்தபோது, இரண்டே இரண்டு கதைகள் கிடைத்தன.

பிரபஞ்சன் எழுதிய `3 நாட்கள்' என்கிற அற்புதமான கதை ஒன்று...

``மாதம்தோறும் விலக்கு ஏற்படும் 3 நாள்களும், சுமதி அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பது மாமியாரின் கட்டளை. அவ்வளவு ஆச்சாரமும் மடியுமாக வாழ்பவர் மாமியார். மட்டும ன்றி வீடும் சின்னது. மாதவிலக்கு நாள்களில் அவளைத் தூரமாக உட்கார வைக்கத் தனி அறையோ பின்பக்கத் தோட்டமோ ஏதும் இல்லாத சிறு வீடு. ஆகவே மாதாமாதம் சுமதி ரயிலேறி அம்மா வீட்டுக்குப் போகிறாள். குளித்துவிட்ட நான்காம் நாள் கிளம்பி, மீண்டும் கணவன் வீடு. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. குளிச்சிட்டுத்தான் இருக்கிறாள் என்பதை, மாதாமாதம் அண்டை வீட்டாருக்கெல்லாம் அறிவிப்பதாக இருக்கின்றன அவளது மாதாந்தரப் பயணங்கள். அதில் அவள் மிகவும் கூசிப்போகிறாள். படுக்கையில் கணவனிடம் முறையிடுகிறாள்:

Period cramps

"இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியற விஷயமா? என் ரகசியத்துல உங்களுக்குப் பங்கில்லையா.. எனக்கு அவமானம்னா அது உங்களுக்கும் இல்லையா... மாசாமாசம் அதை நினைச்சாலே பகீர்னு வருதுங்க. அவமானத்தால செத்துக்கிட்டு இருக்கேன். நீங்களாவது மாமிக்கு இதை எடுத்துச்சொல்லக்கூடாதா?"

``….."

``ஏண்ணா…" இலேசான குறட்டை ஒலி அவனிடமிருந்து வெளிப்பட்டது. நிர்கதியாகிவிட்டது போல் இருந்தது அவளுக்கு.."

பெண்களின் உள்காயங்களுக்கு மருந்திடுவது இரண்டாவது பிரச்னை. அவர்கள் காயம்பட்டு நிற்பதை, அது என்னவென்றே கூட அறிந்து கொள்ளத் துப்பற்றவர்களாகக் குறட்டைவிடும் ஜீவராசிகளாக ஆண்கள் இருப்பதைச் சுளீர் எனக் கூறும் கதை இது.

இன்னொரு கதை ச. சுப்பாராவ் எழுதிய ``தாத்தாவின் டைரி"...

கணவனை இழந்தவளான தன் மருமகள் கற்போடு இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவள் விலக்காகும் தேதிகளை மாதம் தவறாமல் தன் டைரியில் குறித்து வைத்துக் கண்காணிக்கும் பெரியவரை பற்றிய கதை இது. நம் சமூகத்தில் ஆண்களுக்கு இதெல்லாம் தெரியாததால்தான் இலக்கியத்திலும் பெரிசாக ஒண்ணும் வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆண், பெண்

ஆண்கள் பெண்களுக்கிடையிலான உரையாடல்களே அரிதாக இருக்கும் நம் கட்டுப்பெட்டிச் சமூக வாழ்வில் பெண்களின் எந்தத் துயரம்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது? கல்வித்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்ப்பது ஓரளவுக்கு ஆண்கள் மனங்களில் புரிந்துணர்வை ஏற்படும்.

கீதா இளங்கோவனின் மாதவிடாய் என்கிற ஆவணப்படம், திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் ஆண்கள் தங்கள் அறியாமை குறித்து வெட்கப்படுவதையும் குற்ற உணர்வு கொண்டு பேசுவதையும் ஒவ்வொரு திரையிடலின்போதும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற முயற்சிகளும் தொடர வேண்டும்.

- ச.தமிழ்ச்செல்வன்


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...