Skip to main content

How To: எளிதாக GSTIN எண் பெறுவது எப்படி? | How to Get GSTIN Number Easily?

நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட வரிவிதிப்புக் கொள்கையை உருவாக்க, ஜிஎஸ்டி (GST) என்ற வரி முறை, 2017-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. GST விதிமுறைகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது வணிக நிறுவனத்திற்கு GSTIN எண் அவசியம். இது வணிகங்களுக்கு வரி விதிக்கப்படும் முறையை எளிதாக்குகிறது.

நீங்கள் வணிகம் அல்லது தனிநபராக இருந்தால், குறிப்பிட்ட வணிகத்திற்கு நீங்கள் ஜிஎஸ்டி எண் மற்றும் ஜிஎஸ்டியை தாக்கல் செய்வது கட்டாயமாகும். அப்படியான முக்கிய எண்ணை பெறுவது எப்படி என்பது பற்றி சென்னையை சேர்ந்த வரி ஆலோசகர் பொன்சிவசுப்பிரமணியன் விளக்குகிறார்...

GSTIN எண் பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்கள்

* வணிகம் அல்லது தனிநபரின் பான் கார்டு (ஜிஎஸ்டிஐஎன் எண் பான் கார்டு எண்ணின் அடிப்படையில் இருப்பதால் கட்டாயம்)

*ஆதார் அட்டை

* வணிகத்தின் பதிவு அல்லது ஒருங்கிணைப்புச் சான்றிதழ்

* வணிகம் அல்லது தனிநபருடன் தொடர்புடைய கணக்கிற்கான - வங்கி விவரங்கள்

* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

* வணிக முகவரிக்கான சான்று

* டிஜிட்டல் கையொப்பம்

பதிவு செய்வது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், https://www.gst.gov.in/ என்ற ஜிஎஸ்டியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை திறக்கவும். அதில் இருக்கும் ‘Services’ என்ற பகுதியை கிளிக் செய்து, அடுத்ததாக Registration என்ற பகுதியை சொடுக்கவும். அதனுள் New Registration-ஐ தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

New Registration -ல் அங்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து, Register செய்ய உங்களுடைய பெயர், பான் எண், தொடர்பு எண், மின்னஞ்சல் ஐடி, மாநிலம் மற்றும் உங்களுக்குப் பொருந்தும் நிறுவன வகை (வரி கழிப்பவர், செலுத்துபவர் அல்லது வரி வசூலிப்பவர், ஜிஎஸ்டி பயிற்சியாளர், குடியுரிமை பெறாதவர், வெளிநாட்டுத் தூதரகம் அல்லது தூதரகம் அல்லது குடியுரிமை பெறாத சேவை வழங்குநர்) போன்றவற்றை எல்லாம் நிரப்பவும்.

உங்களுடைய தகவல்களை நிரப்பிய பின் உங்களுடைய தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சலுக்கு, OTP அனுப்பப்படும். அனுப்பப்பட்ட சரியான OTP ஐ உள்ளீடு செய்யவும். அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சலில், தற்காலிக விண்ணப்ப குறிப்பு எண் (Temporary Registration Number) அனுப்பி வைக்கப்படும்.

அடுத்து, அந்த Temporary Registration Number-ஐ கொண்டு, உள்ளீட்டு விண்ணப்ப செயல்முறையின் பகுதி B-ஐ முடிக்க வேண்டும். இதை உள்ளீடு செய்தவுடன் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அடுத்து விண்ணப்பத்தின் பகுதி B-ஐ Submit செய்யவேண்டும்.

சமர்ப்பித்த பிறகு, Aadhar authentication link உங்கள் மெயிலுக்கு அனுப்பப்படும். அதனை சரிபார்த்து உள்ளிட்டபின், உங்களுடைய ஆதார் டேட்டாவும், பான் டேட்டாவும் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

ஜி.எஸ்.டி

இதையடுத்து, உங்களுக்கு ARN எண் வைக்கப்படும். GST அதிகாரி உங்கள் விவரங்களை 3 வேலை நாள்களுக்குள் சரிபார்த்து, ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்வார். இல்லையெனில் 7 வேலை நாள்களுக்குள் GSTIN எண் வழங்கப்படும்.

அனைத்து விவரங்களும் ஆவணங்களும் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், படிவம் GST-REG 05-ன் படி வழங்கப்பட்ட காரணங்களுக்காக அதிகாரத்தின்படி, விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம். கொடுக்கப்பட்ட ARN எண் கொண்டு உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...