Skip to main content

How To: எளிதாக GSTIN எண் பெறுவது எப்படி? | How to Get GSTIN Number Easily?

நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட வரிவிதிப்புக் கொள்கையை உருவாக்க, ஜிஎஸ்டி (GST) என்ற வரி முறை, 2017-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. GST விதிமுறைகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது வணிக நிறுவனத்திற்கு GSTIN எண் அவசியம். இது வணிகங்களுக்கு வரி விதிக்கப்படும் முறையை எளிதாக்குகிறது.

நீங்கள் வணிகம் அல்லது தனிநபராக இருந்தால், குறிப்பிட்ட வணிகத்திற்கு நீங்கள் ஜிஎஸ்டி எண் மற்றும் ஜிஎஸ்டியை தாக்கல் செய்வது கட்டாயமாகும். அப்படியான முக்கிய எண்ணை பெறுவது எப்படி என்பது பற்றி சென்னையை சேர்ந்த வரி ஆலோசகர் பொன்சிவசுப்பிரமணியன் விளக்குகிறார்...

GSTIN எண் பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்கள்

* வணிகம் அல்லது தனிநபரின் பான் கார்டு (ஜிஎஸ்டிஐஎன் எண் பான் கார்டு எண்ணின் அடிப்படையில் இருப்பதால் கட்டாயம்)

*ஆதார் அட்டை

* வணிகத்தின் பதிவு அல்லது ஒருங்கிணைப்புச் சான்றிதழ்

* வணிகம் அல்லது தனிநபருடன் தொடர்புடைய கணக்கிற்கான - வங்கி விவரங்கள்

* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

* வணிக முகவரிக்கான சான்று

* டிஜிட்டல் கையொப்பம்

பதிவு செய்வது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், https://www.gst.gov.in/ என்ற ஜிஎஸ்டியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை திறக்கவும். அதில் இருக்கும் ‘Services’ என்ற பகுதியை கிளிக் செய்து, அடுத்ததாக Registration என்ற பகுதியை சொடுக்கவும். அதனுள் New Registration-ஐ தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

New Registration -ல் அங்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து, Register செய்ய உங்களுடைய பெயர், பான் எண், தொடர்பு எண், மின்னஞ்சல் ஐடி, மாநிலம் மற்றும் உங்களுக்குப் பொருந்தும் நிறுவன வகை (வரி கழிப்பவர், செலுத்துபவர் அல்லது வரி வசூலிப்பவர், ஜிஎஸ்டி பயிற்சியாளர், குடியுரிமை பெறாதவர், வெளிநாட்டுத் தூதரகம் அல்லது தூதரகம் அல்லது குடியுரிமை பெறாத சேவை வழங்குநர்) போன்றவற்றை எல்லாம் நிரப்பவும்.

உங்களுடைய தகவல்களை நிரப்பிய பின் உங்களுடைய தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சலுக்கு, OTP அனுப்பப்படும். அனுப்பப்பட்ட சரியான OTP ஐ உள்ளீடு செய்யவும். அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சலில், தற்காலிக விண்ணப்ப குறிப்பு எண் (Temporary Registration Number) அனுப்பி வைக்கப்படும்.

அடுத்து, அந்த Temporary Registration Number-ஐ கொண்டு, உள்ளீட்டு விண்ணப்ப செயல்முறையின் பகுதி B-ஐ முடிக்க வேண்டும். இதை உள்ளீடு செய்தவுடன் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அடுத்து விண்ணப்பத்தின் பகுதி B-ஐ Submit செய்யவேண்டும்.

சமர்ப்பித்த பிறகு, Aadhar authentication link உங்கள் மெயிலுக்கு அனுப்பப்படும். அதனை சரிபார்த்து உள்ளிட்டபின், உங்களுடைய ஆதார் டேட்டாவும், பான் டேட்டாவும் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

ஜி.எஸ்.டி

இதையடுத்து, உங்களுக்கு ARN எண் வைக்கப்படும். GST அதிகாரி உங்கள் விவரங்களை 3 வேலை நாள்களுக்குள் சரிபார்த்து, ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்வார். இல்லையெனில் 7 வேலை நாள்களுக்குள் GSTIN எண் வழங்கப்படும்.

அனைத்து விவரங்களும் ஆவணங்களும் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், படிவம் GST-REG 05-ன் படி வழங்கப்பட்ட காரணங்களுக்காக அதிகாரத்தின்படி, விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம். கொடுக்கப்பட்ட ARN எண் கொண்டு உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...