Skip to main content

CSKvMI: வெயிலோடு உறவாடிய மும்பை; தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்; பயிற்சியில் என்ன நடந்தது?

ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பயிற்சி செஷனில் என்னெவெல்லாம் நடந்தது?
Ishan Kishan

முன்னதாக மும்பை அணிக்கான பயிற்சி செஷன் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சி செஷனுக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் வந்திருந்தார். சென்னை பிட்ச் பற்றியும் அடுத்தடுத்து தாங்கள் செய்த 200+ சேஸ் பற்றியும் சில நிமிடங்கள் பத்திரிகையாளர்களிடம் உரையாடிவிட்டு இஷான் கிஷன் பயிற்சிக்குக் கிளம்பினார்.

வழக்கமாக சேப்பாக்கத்திற்கு வரும் அணிகள் எப்போதுமே ஐந்து அல்லது ஐந்தறை மணிக்கு மேல்தான் பயிற்சியையே ஆரம்பிப்பார்கள். ஆனால், மும்பை அணி 4 மணிக்கு முன்னதாகவே பயிற்சியைத் தொடங்கியதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரித்தோம். அப்போது இது சார்ந்து சில தகவல்களும் அணியின் தரப்பிலிருந்து கிடைத்தன.

"போட்டி மூன்றரை மணிக்கு தொடங்குவதால் சென்னையின் வெயிலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்கள் அணியில் சில வீரர்கள் வெயிலுக்குப் பழக்கப்படாதவர்களாக இருக்கின்றனர்.

Tim David
குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள் வான்கடேவில் மாலை நேரத்தில் நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியிலேயே கொஞ்சம் திணறிவிட்டார்கள். அதன் காரணமாகவே இந்த சென்னை வெயிலுக்கு கொஞ்சம் பழக்கப்பட வேண்டிதான் வீரர்களை கொஞ்சம் சீக்கிரமாகவே பயிற்சிக்கு அழைத்து வந்தோம்" என்றனர்.

மெயின் கிரவுண்ட்டுக்கு அருகே உள்ள MAC B கிரவுண்ட்டில் அர்ஜுன் டெண்டுல்கர் தீவிரமாகப் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இவரைத் தவிர மிக முக்கியமாக வெகு சமீபத்தில் மும்பை அணியில் இணைந்த கிறிஸ் ஜோர்டனும் இங்கேதான் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு இஷன் கிஷனும் நேராக இங்கேதான் வந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Arjun Tendulkar

உள்ளே மெயின் கிரவுண்ட்டில் முக்கியமான வீரர்கள் பலரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். தோனியும் ரோஹித்தும் அருகருகே வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோவை சென்னை அணியே டிவிட்டரில் பகிர்ந்திருந்ததைப் பார்த்திருப்போம். தோனி வழக்கம் போல ஏறக்குறைய முக்கால் மணி நேரத்திற்கும் அதிகமாகவே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தோனியுடன் ஒரே நெட்டில் சிவம் துபேவும் அம்பத்தி ராயுடுவும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சேப்பாக்கத்தில் நடந்த பஞ்சாபுக்கு எதிரான கடந்த போட்டியின் கடைசி பந்தில் தோனி ஒரு மிரட்டலான சிக்சரை அடித்திருந்தார். அதற்கு முந்தைய நாள் அதேமாதிரியான 'No look' வகை சிக்ஸர்களை தோனி அதிகம் பயிற்சி செய்திருந்தார். இன்றும் அதே மாதிரியான சிக்ஸர்களை அடிக்க அதிகம் பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதுபோக வழக்கமான அந்த லாங் ஆன், மிட் விக்கெட் சிக்சர்களையும் அடிக்கத் தவறவில்லை.

Dhoni
இடையில் ஒன்றிரண்டு முறை வின்டேஜ் தோனியாக மாறி ஹெலிகாப்டர் ஷாட்களையும் ஆடினார். ஆக, மும்பைக்கு எதிராக தோனியிடமிருந்து ஹெலிகாப்டர் ஷாட்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

இதைத் தாண்டி கடந்த சேப்பாக் போட்டிக்கான பயிற்சியிலேயே தோனி ஸ்கூப் ஷாட்டையெல்லாம் ஆட முயற்சி செய்திருந்தார். கடந்த போட்டியில் அந்த ஷாட்டை அவர் ஆடவில்லை. ஆனால், வருகிற போட்டிகளில் தோனியிடம் நாம் இதுவரை பார்க்காத ஸ்கூப், ரேம்ப் ஷாட்களையும் கூட பார்க்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

தோனியும் ரோஹித்தும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தோழர்களான பொல்லார்டும் பிராவோவும் நீண்ட நேரம் நின்றுகொண்டே ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

தோனி தனது பயிற்சியை முடித்துக் கொண்ட பிறகு, ரஹானே, ஜடேஜா போன்றோர் தங்களின் பயிற்சியைத் தொடங்கினர்.

மும்பை அணியினர் திட்டமிட்டப்படி சரியாக 7 மணிக்குள் பயிற்சியை முடித்துக் கொண்டனர். சென்னை அணியின் பயிற்சி செஷன் 9 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னை அணியால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

Chepauk
7:15 மணிக்கே கொஞ்சம் ஈரப்பதமிக்க காற்றுவீசி லேசாக சாரல் தூறுவதைப் போன்ற சூழல் ஏற்படவே முன்னெச்சரிக்கையாக பிட்ச்சைப் பாதுகாக்கும் பொருட்டு மைதான ஊழியர்கள் கவரை விரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சென்னை அணியும் அத்தோடு பயிற்சியை முடித்துக் கொண்டது.

இன்று மாலை போட்டி நடைபெறும் சமயத்தில் இப்படி எதுவும் கவர் விரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...