Skip to main content

கர்ப்பிணிகளுக்கு மிளகு, மஞ்சள் பால் அவசியமா... மருத்துவர்கள் சொல்வதென்ன?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கர்ப்பம்

புரதச்சத்து, மாவுச்சத்து, தேவையான அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் என சமச்சீரான உணவியல் முறையினைப் பின்பற்ற வேண்டும். இது, உடலில் உள்ள உபாதைகளைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றில் உள்ள சிசுவிற்கு ஊட்டத்தையும் அளிக்கும்.

ஆனால் உடல் சூட்டினை சீராக வைத்துக் கொள்ள, மிளகு -மஞ்சள் பாலினை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது கட்டாயம் என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாகவே மஞ்சளினால் கிடைக்கும் நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் மனிதர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பொருள் மஞ்சள்தூள். மஞ்சள்தூள் இல்லாமல் உணவு சமைக்க முடியாது. குறிப்பாக குழம்பு, கிரேவிகளில் சுவைக்கும் நிறத்துக்கும் காரணம் மஞ்சள்தூள் தான்.

கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் தூள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. மஞ்சளில் உள்ள Curcumin என்னும் பொருள்,வீக்கம் தடுக்கவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் இருக்கிறது. அதேபோல் மிளகிலும் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளன. உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ள மஞ்சளையும், மிளகையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் மிளகு- மஞ்சள் பால் செய்யும் பக்குவம் பற்றியும், அதனை பருகுவதன் விதிமுறை பற்றியும் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் கூறியதாவது...

``ஷீர கஷாயம் என்று சொல்லப்படும் இந்த மிளகு -மஞ்சள் பாலினை தயாரிப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதாவது 1:8:32 என்ற அளவு கணக்கில் செய்ய வேண்டும். அதாவது, ஒருமடங்கு மிளகு மற்றும் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டால் 8 மடங்கு பால் 12 மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையினை கொதிக்க வைத்து, பாலின் அளவுக்கு சுண்டக் காய வைக்க வேண்டும். இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், இதனை அனைத்து கர்ப்பிணிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூற இயலாது. சிலருடைய உடலின் தன்மைக்கேற்ப இது மாறுபடும். எனவே மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப இதனைப் பருகுதவதே நன்மை தரும்" என்றார்.

மல்லிகா, சித்த மருத்துவர்

இந்த மிளகு- மஞ்சள் பாலினை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது அவசியமா என்பது பற்றி, சித்த மருத்துவர் மல்லிகாவிடம் கேட்டோம்... அவர் ``மிளகு- மஞ்சள் பாலினை கர்ப்பிணிகள் தினமும் பருக வேண்டிய தேவை இல்லை. பொதுவாகவே பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு தூளைச் சிறிதளவு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும். ஏனெனில், மஞ்சள் மற்றும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும் சிலருடைய உடலின் வாகிற்கேற்ப மாறுபடும். அதனால், தினமும் பருகக்கூடாது. வாரத்திற்கு இரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளுமபோது சளி, இருமல் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்" என்றார்.

- சொர்ண மீனா ராமநாதன்


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...