Skip to main content

லாபம் கொழிக்கும் சீனர்களின் கரப்பான் பூச்சி பண்ணைகள்... இந்தியாவில் சாத்தியமா?

வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தாலே பதறிப்போய் அதை அடித்துக் கொன்றுவிடுவோம். கரப்பான் பூச்சியை வேண்டாத உயிரினமாகவே பார்க்கும் தன்மை மனிதனுக்கு இயல்பிலேயே வந்துவிட்டது. பல்லிக்குப் பயப்படுகிறவர்களைவிட கரப்பான் பூச்சிக்கு பயப்படுகிறவர்கள் அதிகம். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் விதிவிலக்கு என்பதை சீனர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். கரப்பான் பூச்சிபூச்சி மேலாண்மை: 20 - நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்! அவற்றையெல்லாம் தன்னுடைய இடது கையில் தட்டிவிட்டு, கரப்பான் பூச்சியின் டேஸ்ட் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனச் சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணையை வைத்து நடத்தி வருகின்றனர் பலர். இங்கு நாம் பார்த்து அருவருக்கும் ஒரு விஷயம், அவர்களுக்குப் பணம் கொழிக்கும் பிஸினஸாக மாறியிருக்கிறது. சாதாரணமாகவே சீனர்கள் ஊர்வன, பறப்பன, மிதப்பன என அனைத்தையும் வறுத்துப் பொரித்து ருசித்துச் சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இதில் பூச்சிகளும் விதிவிலக்கல்ல. ஆனால், கரப்பான் பூச்சிகளில் லாபம் கொழிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். கரப்பான் பூச்சிகளை உணவுக்காக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். மருத்துவத் துறையில் கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ரசம், அல்சர் வயிற்றுவலி, வாய் மற்றும் வயிற்றுப்புண், சரும காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றன. அழகு சாதன பொருள்கள் தயாரிப்பிலும், ப்யூட்டி மாஸ்க், உணவு மாத்திரைகள் மற்றும் முடி உதிர்வு சிகிச்சைகளிலும் கரப்பான் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.  மீன் பண்ணைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் தேவை நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ஐ.டி வேலையை விட்டு பலர் இயற்கை விவசாயத்தைத் தேர்வு செய்வதுபோல, சீனாவில் லாபம் அள்ளித் தரும் கரப்பான் பூச்சியைத் தேர்வு செய்து வருகின்றனர். வெளிச்சம் இல்லாத பகுதி, வெதுவெதுப்பான வெப்பநிலை, ஈரப்பதம், சமையல் அறையில் வீசப்படும் கழிவுகள் இவை இருந்தால் போதும், கரப்பான் பூச்சி பண்ணை அமைத்து விடலாம். இதனால் கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணையும் அதன் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.  பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் | பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023இந்தப் பூச்சி கடித்தால் தொடர்ச்சியாகத் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்; காடுகளைக் காக்கும் பூச்சிகள்..! இந்நிலையில், தமிழகத்திலும் இது போன்ற கரப்பான் பூச்சிகள் வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, கரப்பான் பூச்சியின் இயல்பு என்ன என்பதைக் குறித்து பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ``கரப்பான் பூச்சியைச் சீனர்கள் சாப்பிடுவார்கள். இங்கே வளர்த்து என்ன செய்ய முடியும். எந்த வேலை செய்வதற்கு முன்பும், அது பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தெரியாமல் வளர்க்கக் கூடாது.  சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கறுப்பு சிப்பாய் ஈ (Black Soldier Fly) வளர்ப்பையே இன்னும் நாம் சரியாகச் செய்யாமல் இருக்கிறோம். கரப்பான் பூச்சி நமக்குத் தேவை இல்லை. அவர்கள் பூச்சியை உணவாக உண்டு, மருத்துவத் துறையிலும் பயன்படுத்துகிறார்கள். வீட்டின் சமையல் அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் கரப்பான் பூச்சி வராது. கிச்சன் சிங்க், கழிப்பறையின் அடிப்பக்கத்தில் இருந்து வந்து, வீட்டில் சிந்துகிற சாப்பாட்டுக் கழிவுகளைச் சாப்பிடுவதே அதன் வேலை. அதைச் சாப்பிட்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகும். சொல்லப்போனால், கழிவுகளை காலி செய்யும் ஒரு நல்லது செய்யும் பூச்சி… ஆனால், அதை நாம் வேண்டாத விருந்தாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கருப்பு சிப்பாய் ஈ`காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்கலாம்' - கனடா உயிரியல் பூங்காவின் புது யோசனை! சீனாவில் ரொம்ப காலமாகவே வெவ்வேறு விதமான பூச்சிகளைப் பண்ணையில் வளர்க்கிறார்கள். கரப்பான் பூச்சியை வேறுவிதமாக வளர்க்கிறார்கள். அவர்கள் ஊரில் தேங்கியுள்ள குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு வந்து, அதை காலி செய்வதற்குரிய ஆயுதமாகக் கரப்பான் பூச்சியை வளர்க்கிறார்கள். அதோடு இதை உணவுக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காயைப் போல..! இங்கே நாம் அதைச் செய்யப்போவதில்லை. முதலில் அதைச் சாப்பிடும் எண்ணமே நம்மிடம் இல்லை'' என்று கூறினார். 
http://dlvr.it/SprX29

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...