Skip to main content

லாபம் கொழிக்கும் சீனர்களின் கரப்பான் பூச்சி பண்ணைகள்... இந்தியாவில் சாத்தியமா?

வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தாலே பதறிப்போய் அதை அடித்துக் கொன்றுவிடுவோம். கரப்பான் பூச்சியை வேண்டாத உயிரினமாகவே பார்க்கும் தன்மை மனிதனுக்கு இயல்பிலேயே வந்துவிட்டது. பல்லிக்குப் பயப்படுகிறவர்களைவிட கரப்பான் பூச்சிக்கு பயப்படுகிறவர்கள் அதிகம். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் விதிவிலக்கு என்பதை சீனர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். கரப்பான் பூச்சிபூச்சி மேலாண்மை: 20 - நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்! அவற்றையெல்லாம் தன்னுடைய இடது கையில் தட்டிவிட்டு, கரப்பான் பூச்சியின் டேஸ்ட் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனச் சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணையை வைத்து நடத்தி வருகின்றனர் பலர். இங்கு நாம் பார்த்து அருவருக்கும் ஒரு விஷயம், அவர்களுக்குப் பணம் கொழிக்கும் பிஸினஸாக மாறியிருக்கிறது. சாதாரணமாகவே சீனர்கள் ஊர்வன, பறப்பன, மிதப்பன என அனைத்தையும் வறுத்துப் பொரித்து ருசித்துச் சாப்பிடும் பழக்கமுடையவர்கள். இதில் பூச்சிகளும் விதிவிலக்கல்ல. ஆனால், கரப்பான் பூச்சிகளில் லாபம் கொழிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். கரப்பான் பூச்சிகளை உணவுக்காக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். மருத்துவத் துறையில் கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ரசம், அல்சர் வயிற்றுவலி, வாய் மற்றும் வயிற்றுப்புண், சரும காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றன. அழகு சாதன பொருள்கள் தயாரிப்பிலும், ப்யூட்டி மாஸ்க், உணவு மாத்திரைகள் மற்றும் முடி உதிர்வு சிகிச்சைகளிலும் கரப்பான் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.  மீன் பண்ணைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் தேவை நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ஐ.டி வேலையை விட்டு பலர் இயற்கை விவசாயத்தைத் தேர்வு செய்வதுபோல, சீனாவில் லாபம் அள்ளித் தரும் கரப்பான் பூச்சியைத் தேர்வு செய்து வருகின்றனர். வெளிச்சம் இல்லாத பகுதி, வெதுவெதுப்பான வெப்பநிலை, ஈரப்பதம், சமையல் அறையில் வீசப்படும் கழிவுகள் இவை இருந்தால் போதும், கரப்பான் பூச்சி பண்ணை அமைத்து விடலாம். இதனால் கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணையும் அதன் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.  பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் | பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023இந்தப் பூச்சி கடித்தால் தொடர்ச்சியாகத் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்; காடுகளைக் காக்கும் பூச்சிகள்..! இந்நிலையில், தமிழகத்திலும் இது போன்ற கரப்பான் பூச்சிகள் வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, கரப்பான் பூச்சியின் இயல்பு என்ன என்பதைக் குறித்து பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ``கரப்பான் பூச்சியைச் சீனர்கள் சாப்பிடுவார்கள். இங்கே வளர்த்து என்ன செய்ய முடியும். எந்த வேலை செய்வதற்கு முன்பும், அது பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தெரியாமல் வளர்க்கக் கூடாது.  சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கறுப்பு சிப்பாய் ஈ (Black Soldier Fly) வளர்ப்பையே இன்னும் நாம் சரியாகச் செய்யாமல் இருக்கிறோம். கரப்பான் பூச்சி நமக்குத் தேவை இல்லை. அவர்கள் பூச்சியை உணவாக உண்டு, மருத்துவத் துறையிலும் பயன்படுத்துகிறார்கள். வீட்டின் சமையல் அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் கரப்பான் பூச்சி வராது. கிச்சன் சிங்க், கழிப்பறையின் அடிப்பக்கத்தில் இருந்து வந்து, வீட்டில் சிந்துகிற சாப்பாட்டுக் கழிவுகளைச் சாப்பிடுவதே அதன் வேலை. அதைச் சாப்பிட்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகும். சொல்லப்போனால், கழிவுகளை காலி செய்யும் ஒரு நல்லது செய்யும் பூச்சி… ஆனால், அதை நாம் வேண்டாத விருந்தாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கருப்பு சிப்பாய் ஈ`காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்கலாம்' - கனடா உயிரியல் பூங்காவின் புது யோசனை! சீனாவில் ரொம்ப காலமாகவே வெவ்வேறு விதமான பூச்சிகளைப் பண்ணையில் வளர்க்கிறார்கள். கரப்பான் பூச்சியை வேறுவிதமாக வளர்க்கிறார்கள். அவர்கள் ஊரில் தேங்கியுள்ள குப்பை கூளங்களை எல்லாம் கொண்டு வந்து, அதை காலி செய்வதற்குரிய ஆயுதமாகக் கரப்பான் பூச்சியை வளர்க்கிறார்கள். அதோடு இதை உணவுக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காயைப் போல..! இங்கே நாம் அதைச் செய்யப்போவதில்லை. முதலில் அதைச் சாப்பிடும் எண்ணமே நம்மிடம் இல்லை'' என்று கூறினார். 
http://dlvr.it/SprX29

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...