Skip to main content

4 ஆண்டுகளுக்கு முன் புதைத்த கன்னியாஸ்திரி உடல்... அப்படியே இருந்த அதிசயம்! - படையெடுக்கும் மக்கள்!

அமெரிக்காவின் மிசோரி (Missouri) நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் (Sister Wilhelmina Lancaster) மே 29, 2019 அன்று 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க மே 18, 2023 அன்று தோண்டி எடுக்கப்பட்டது.சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால் பகுதி தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால் பகுதி அப்படியே இருந்திருக்கிறது. அதன் பிறகு சவப்பெட்டியைத் திறந்து பார்த்திருக்கின்றனர். அவர் புதைக்கப்பட்டபோது எப்படி இருந்தாரோ அப்படியே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் இருந்திருக்கிறார். உடனே இந்தச் செய்தி நகரம் முழுவதும் பரவியிருக்கிறது. இது குறித்து மிசோரி தேவாலய மற்றொரு கன்னியாஸ்திரி, "அவரது உடல் இருக்கும் சவப்பெட்டியைத் தோண்டி எடுக்கும்போதே, அந்தப் பெட்டியில் எதுவும் இருக்காது. வெறும் எலும்புகள் மட்டும்தான் இருக்கும் எனக் கூறினார்கள். ஆனால், முழு உடலும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. மண் விழுந்ததால் அவரது ஒரு கண் பகுதி மட்டும் சற்று அழுகியிருக்கிறது. மற்ற உடல் பாகங்கள் அப்படியே இருக்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் இந்தச் செய்தி பரவியைதையடுத்து மிசோரி தேவாலயத்துக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். நீண்ட வரிசையில் நின்று சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் உடலைப் பார்த்துச் செல்கின்றனர். இது குறித்து வெஸ்டர்ன் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், தடயவியல் மானுடவியல் இயக்குநருமான நிக்கோலஸ் வி பாசலாக்வா (Nicholas V Passalacqua) பேசுகையில், “அடக்கம் செய்யப்பட்ட பிறகு உடல்கள் அரிதாகவே தோண்டி எடுக்கப்படுவதால் இது எந்த அளவு பொதுவானது என்று சொல்வது கடினம்.நீண்ட வரிசையில் மக்கள் மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் சேதமடையாத மனித உடல்கள் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டுமென்றே பாதுகாக்கப்பட்ட எகிப்திய மம்மிகள் போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் போக் பாடிகள் போன்றவையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே, குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட சூழலில் இருக்கும் உடல்கள் பாக்டீரியா வளர்ச்சியையும் அதன் அணுக்களையும் கட்டுப்படுத்தும்" எனத் தெரிவித்திருக்கிறார். சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டரின் உடல் மே 29-ம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும், பின்னர் அது தேவாலயத்தில் கண்ணாடியில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்று பிறப்புறுப்பில் தீ வைத்த மேஸ்திரி - போலீஸ் விசாரணையில் `பகீர்'
http://dlvr.it/Spnn05

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...