Skip to main content

2050-ம் ஆண்டுக்குள் 84 கோடி மக்களுக்கு அடிமுதுகுவலி பாதிக்கலாம்!- ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

வர்ம் 2050-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் சுமார் 84.3 கோடி பேர் அடி முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

Lancet Rheumatology ஜர்னல் தகவலின் படி,

  • 2017-ம் ஆண்டு சுமார் 50 கோடி பேர் அடிமுதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

  • 2020-ம் ஆண்டு 61.9 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தினர்.

  • தற்போது இந்த நோய் பாதிப்பு 36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அடி முதுகுவலி

இந்த ஆய்வு, இனி வரும் காலத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அடி முதுகுவலி பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறது. 1990-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை உள்ள 204 நாடுகளின் தரவுகளின் படி, 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 84.3 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நோயில் முக்கிய காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பும், வயது முதிர்ந்த மக்கள்தொகையும் கூறப்படுகிறது. மேலும் இந்த நோய் சர்க்கரைநோய், இதய நோய், மனநலம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகவும் அமையலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வு குறித்து சென்னையைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் தினேஷ் சவுத்ரியிடம் பேசினோம்.

``இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் அடி முதுகுவலி பரவலாக இருந்து வருகிறது. நீண்ட நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், ஐ.டி வேலை போன்று நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போன்றோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஆய்வில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அடி முதுகுவலியால் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் இளைய வயதுள்ள மக்கள்தொகை கொண்ட நாடுகள். மேலும் இந்த நாடுகளில் தற்போது ஐ.டி போன்ற தொழில்களில் தான் மக்கள் அதிகம் வேலை செய்து வருகிறார்கள்.

எலும்பியல் நிபுணர் தினேஷ் சவுத்ரி

2050-ம் ஆண்டின் போது, இவர்கள் கிட்டத்தட்ட முதுமையைத் தொட்டுவிடுவார்கள். இதனால் இவர்கள் இப்போது செய்துவரும் தொழில்கள், அப்போது முதுகுவலியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

உடல் எடையைக் குறைப்பது, புரோட்டின் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக் கொள்வது, யோகா செய்வது, வயிற்றுப் பகுதியில் இருக்கும் தசைகள் மற்றும் தண்டுவட தசைகளை பலப்படுத்துதல், நீண்ட நேரம் அமரும்போது சரியாக அமருதல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் இந்த வலியைக் குறைக்கலாம்'' என்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...