Skip to main content

2050-ம் ஆண்டுக்குள் 84 கோடி மக்களுக்கு அடிமுதுகுவலி பாதிக்கலாம்!- ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

வர்ம் 2050-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் சுமார் 84.3 கோடி பேர் அடி முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

Lancet Rheumatology ஜர்னல் தகவலின் படி,

  • 2017-ம் ஆண்டு சுமார் 50 கோடி பேர் அடிமுதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

  • 2020-ம் ஆண்டு 61.9 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தினர்.

  • தற்போது இந்த நோய் பாதிப்பு 36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அடி முதுகுவலி

இந்த ஆய்வு, இனி வரும் காலத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அடி முதுகுவலி பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறது. 1990-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை உள்ள 204 நாடுகளின் தரவுகளின் படி, 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 84.3 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நோயில் முக்கிய காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பும், வயது முதிர்ந்த மக்கள்தொகையும் கூறப்படுகிறது. மேலும் இந்த நோய் சர்க்கரைநோய், இதய நோய், மனநலம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகவும் அமையலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வு குறித்து சென்னையைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் தினேஷ் சவுத்ரியிடம் பேசினோம்.

``இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் அடி முதுகுவலி பரவலாக இருந்து வருகிறது. நீண்ட நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், ஐ.டி வேலை போன்று நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போன்றோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஆய்வில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அடி முதுகுவலியால் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் இளைய வயதுள்ள மக்கள்தொகை கொண்ட நாடுகள். மேலும் இந்த நாடுகளில் தற்போது ஐ.டி போன்ற தொழில்களில் தான் மக்கள் அதிகம் வேலை செய்து வருகிறார்கள்.

எலும்பியல் நிபுணர் தினேஷ் சவுத்ரி

2050-ம் ஆண்டின் போது, இவர்கள் கிட்டத்தட்ட முதுமையைத் தொட்டுவிடுவார்கள். இதனால் இவர்கள் இப்போது செய்துவரும் தொழில்கள், அப்போது முதுகுவலியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

உடல் எடையைக் குறைப்பது, புரோட்டின் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக் கொள்வது, யோகா செய்வது, வயிற்றுப் பகுதியில் இருக்கும் தசைகள் மற்றும் தண்டுவட தசைகளை பலப்படுத்துதல், நீண்ட நேரம் அமரும்போது சரியாக அமருதல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் இந்த வலியைக் குறைக்கலாம்'' என்கிறார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...