Skip to main content

Yashasvi Jaiswal: `பானிபூரி விற்ற சிறுவன் டு பயமறியா தொடக்க வீரன்'- ஜெய்ஸ்வால் குட்டி கங்குலியான கதை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்களை 43 பந்துகளில் எடுத்து அசத்தினார், யாஷஸ்வி ஜெய்ஸ்வால். தனது 21வது வயதில் இப்படியொரு வியக்கத்தக்க இன்னிங்ஸை ஆடியிருக்கின்றார். இவரின் அதிரடியால் பவர்-பிளே ஓவர்களில் ரன்கள் தாறுமாறாக வந்தது.

குட்டி கங்குலியைப் போல காட்சியளித்த ஜெய்ஸ்வால் ஏறக்குறைய கங்குலி எதிரணியினருக்கு எந்தளவுக்கு மிரட்சியை கொடுப்பாரோ அதே அளவுக்கான மிரட்சியை கொடுத்திருந்தார். ஐ.பி.எல் எனும் பெரும் வெளிச்சத்தில் இன்று மிளிரும் ஜெய்ஸ்வாலின் பின்னணி அத்தனை பிரகாசமானது கிடையாது. இந்த இடத்தை அவர் அடைய கடந்து வந்த பாதை கரடு முரடானது.
Yashswi

மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து வந்த ஜெய்ஸ்வால், கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியாக பற்றிக் கொண்டு தன்னம்பிக்கையுடனும் பெரும் உந்துதலுடனும் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர், 28 டிசம்பர் 2001 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் சூரியவான் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையான பூபேந்திர ஜெய்ஸ்வால் ஒரு சிறிய ஹார்டுவேர் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது தாயார் கஞ்சன் ஜெய்ஸ்வால். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிறந்தார்.

தனது பத்து வயதில், ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக மும்பையில் உள்ள தாதர் பகுதியில் குடிபெயர்ந்தார். பிறகு, கல்பாதேவி என்ற இடத்திற்கு மீண்டும் இடம்பெயர்ந்தார். கிரிக்கெட் பயிற்சிக்கு பணம் சேர்ப்பதற்காக, ஒரு பால் நிலையத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார். ஒருபுறம் வறுமை அதிகரித்துக் கொண்டே செல்ல, மறுபுறம் இவருக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

கடையில் தங்கி வேலை செய்து வந்த இவர், இதற்கிடையில் கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதனால், கடையில் அதிக நேரம் வேலை செய்ய முடியாமல் போனது. அதனால் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ஜெய்ஸ்வால் கம்பீருடன்

எங்கே செல்வதென தெரியாமல் சாலைகளில் அலைந்து திரிந்த இவர், ஆசாத் மைதானத்தில் உள்ள மைதானப் பராமரிப்பாளரின் கூடாரத்தில் தங்கினார். இங்கு தங்கிய படியே, பகுதி நேரமாக பானிபூரி விற்பனையும் செய்து வந்துள்ளார். மூன்று வருடங்கள் இதே இடத்தில் தங்கி கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார். சிறுவயதிலிருந்து தனக்கு கிடைக்கக்கூடிய சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டே, தனது கனவுப் பயணமான கிரிக்கெட்டையும் தொடர்ந்துள்ளார். இவரது கிரிக்கெட் திறமையை ஜ்வாலா சிங் கண்டறிந்ததார். இவர், நடத்தும் மும்பையில் உள்ள கிரிக்கெட் அகாடமியில்தான் ஜெய்ஸ்வால் எனும் வைரம் பட்டை தீட்டப்பட்டது. ஜ்வாலா சிங், தனது பராமரிப்பின் கீழ் பயிற்சி கொடுத்ததுடன் தங்குவதற்கான இடத்தையும் வழங்கியுள்ளார். ஜ்வாலா சிங், இந்த சிறுவனுக்கு கிரிக்கெட் வழிகாட்டியாக மாறினார். ஜெய்ஸ்வால், முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இதே போட்டியில் 99 ரன்களை விட்டுக் கொடுத்து 13 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். ஆல்-ரவுண்டராக இவர் படைத்த இச்சாதனை, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது.

ஜெய்ஸ்வால்

இவர், 2016 ஆம் ஆண்டு, 16 வயதிற்குட்பட்ட மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் தேதியன்று 2018-19 ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக தனது முதல் அறிமுகப் போட்டியில் விளையாடினார். அதே 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடினார். இதில்,

ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து வியக்கவைத்தார். இதன் மூலம், இரட்டை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அப்போது அவருக்கு வயது, 17 வருடங்கள் 292 நாட்கள் ஆகும். மேலும், இதே தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, 564 ரன்கள் எடுத்து அசத்தினார்.

2019-20 ஆண்டுக்கான தியோதர் டிராபி தொடரில் இந்தியா B அணியில் இடம் பெற்றார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

உலகக்கோப்பை தொடரில் கலக்கிய இவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. 2020 ஐபிஎல் ஏலத்தில் 2.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
ஜெய்ஸ்வால்

அறிமுகவீரரான இவருக்கு ஐபிஎல் ஏலத்திலும் கடும் போட்டி நிலவியது. செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறிமுக வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். ஆனால் இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. 2020 ஐபிஎல் தொடரில் வெறும் 3 போட்டியில் மட்டுமே களமிறங்கி 40 ரன்கள் அடித்தார்.

2021 ஐபிஎல் தொடரில் அதே விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். இந்தத் தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கி 249 ரன்கள் அடித்தார். இவரின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் 2022 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தது. 2022 ஐபிஎல் ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வாங்கியது. இத்தொடரிலும் தனது சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கினார். இதில் 10 போட்டிகளில் விளையாடிய இவர், 258 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த 2023 ஐபிஎல் சீசனில் இவர் எடுத்த விஸ்வரூபம் வேறு. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 304 ரன்களை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இத்தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான, ராஜஸ்தான் ராயல்ஸின் முதல் போட்டியிலேயே 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வியக்கவைத்தார். இந்த சீசனில் இதுவரை 3 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

ஜெய்ஸ்வால்
பசி மட்டுமே அன்றாட சிக்கலாக இருக்கும் ஒரு சிலந்தி வலை போன்ற வாழ்விலிருந்து தன் முயற்சியினால் மட்டுமே தப்பிப்பிழைத்து இப்படி ஒரு நிலையை எட்டியிருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சாமானியர்கள் அத்தனை பேருக்குமான இன்ஸ்பிரேஷன்!

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...