Skip to main content

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!" - ஆபரேஷன் SABS - கிசுகிசு: அடுக்குமாடி வீடு: கவனிக்க...

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!" வைகோ அண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. '30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுகவுடன் இணைப்பதே நல்லது' என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இக்கடிதம் குறித்து நம்மிடம் பேசிய சு.துரைசாமி, " எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுகவில் இன்று குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது" எனக் குற்றம் சாட்டி உள்ளார். வைகோ மீதான அதிருப்திக்கு சு.துரைசாமி கூறும் காரணங்களையும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க... மேலும், வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன? படிக்க இங்கே க்ளிக் செய்க... ஆபரேஷன் SABS... டீ குடித்தவரைத் தூக்கிய திருச்சி டீம்! ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்? "வருமான வரித்துறையின் திடீர் அதிரடி ரெய்டால், ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ஜி ஸ்கொயர்' ஆடிப்போயிருக்கிறது. தொடக்கத்தில், 40 இடங்களில் நடந்த ரெய்டு, அடுத்த 48 மணி நேரத்தில் 90 இடங்களாக விரிந்து, கடைசியில் 140 இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இந்த ரெய்டில், வருமான வரித்துறைக்கு ஜாக்பாட்டாகச் சிக்கியவர் ஆடிட்டர் சண்முகராஜாதான். சபரீசனின் ஆடிட்டரான இவரின் மேற்பார்வையில்தான், பல்வேறு தொழில்களும் பரிவர்த்தனைகளும் நடந்ததாகச் சந்தேகிக்கிறது வருமான வரித்துறை. ஆபரேஷன் SABS' ஏன், எப்படி நடந்தது..? விசாரணை வளையத்தில் யாரெல்லாம் சிக்கியிருக்கிறார்கள்... சிக்குகிறார்கள்..? - விரிவான, விறுவிறுப்பான தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில்... படிக்க இங்கே க்ளிக் செய்க... கிசுகிசு: மெர்சல் நடிகருடன் மோதும் சேனல்! கிசுகிசு ஜூன் மாதம்தான் கோட்டையின் உச்ச அதிகாரி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், 'மூன்று மாதங்கள் மட்டும் அந்த உச்ச பதவியில் உட்கார்ந்துகொள்கிறேன். அதன் பிறகு வி.ஆர்.எஸ் கொடுத்துவிடுகிறேன்' எனச் சொல்லி, வடக்கத்திய அதிகாரி ஒருவர் பேசுகிற பேரம் கோட்டையையே திகைக்க வைக்கிறதாம். கிசுகிசு பகுதியில் மேலும்... * மெர்சல் நடிகருடன் மோதும் சின்ன தலைவியின் சேனல்! * முதன்மையானவர் குறித்து பேசிய அமைச்சர்களின் பட்டியல்! * பணிவானவர் மாநாடு குறித்து டெல்லிக்கு சொல்லப்பட்ட விஷயங்கள்..! * அண்ணன் தலைவரின் திடீர் அமைதிக்கு காரணம்... என அனைத்து அரசியல் கிசுகிசுக்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க... உச்ச நீதிமன்றத்துக்கே உத்தரவிட்ட ஹைகோர்ட் நீதிபதி! - நடந்தது என்ன...? உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஊடகத்தில் தான் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையை நள்ளிரவு 12 மணிக்குள் தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றச் செயலாளருக்கு உத்தரவு போட்ட நிகழ்வு பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு உச்ச நீதிமன்றம் ஆற்றிய எதிர்வினை என்ன..? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க... மூடப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில்! - என்ன காரணம்? ஷீர்டி சாயிபாபா கோயில் மகாராஷ்டிராவில் ஷீர்டி சாயிபாபா கோயில் மிகவும் புகழ்பெற்ற புனிதஸ்தலமாகக் கருதப்படுகிறது. விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில், வரும் 1-ம் தேதியிலிருந்து காலவரையற்று சாயிபாபா கோயிலை மூடப்போவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம்..? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க... அடுக்குமாடி வீடு... கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்..! அடுக்குமாடி குடியிருப்புக்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகரங்களில் வீட்டுமனைகளின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், பலரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வாறு அடுக்குமாடி வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்களை இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் தெரிவிக்கிறார் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன். படிக்க இங்கே க்ளிக் செய்க... வியர்க்குரு... இயற்கை முறையில் எளிய தீர்வுகள்! வியர்வை, வியர்க்குரு கோடைக்கால நோய்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. இதனை, நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; தடுக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். அவர் பகிர்ந்த வியர்க்குரு பிரச்னைக்கான தீர்வுகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க... Ponniyin Selvan 2: 'நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன்?' - மணிரத்னம் சொல்வது என்ன? பொன்னியின் செல்வன் 2 மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்-2' நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நாவலில் இல்லாத விஷயங்களைப் படத்தில் சேர்த்ததும், நாவலில் இருந்ததை மாற்றியது குறித்தும் விவாதங்கள் எழுந்திருப்பதை பார்க்கமுடிகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஆனந்த விகடன் பேட்டியில் (26/04/2023) இயக்குநர் மணிரத்னம் சொன்னதை படிக்க இங்கே க்ளிக் செய்க... மேலும், மிஸ்டர் மியாவ்: பெரிய தொகை கேட்கும் விஜய்! படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/SnJ8wG

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...