Skip to main content

RCBvKKR: `KGF -ல் ராக்கி பாய் மட்டும் போதுமா?' - அதே ஆர்சிபி அதே பிரச்சனைகள்; என்ன நடந்தது?

எட்டு பேட்டிங் வீரர்களுடன் வரும் அணிகளே வெற்றிக்கு தத்தித் தடுமாறும் நிலையில் இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே மூன்று வீரர்களை மட்டும் நம்பி வந்து கொண்டிருக்கிறது பெங்களூரு. மூன்றில் இரண்டு பேர் நேற்று கொஞ்சம் வேகமாக நடையைக் கட்ட கொல்கத்தாவிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது பெங்களூரு.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முந்தைய ஸ்குவாடுகளில் இருந்து ஒரே ஒரு மாற்றமாக கொல்கத்தா அணியில் கெஜ்ரோலியாவுக்கு பதிலாக வைபவ் அரோரா வந்திருந்தார். டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய்‌ மற்றும் தமிழகத்தின் ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் தந்தனர். சின்னசாமி மைதானத்தின் அளவுகள் ஜேசன் ராய்க்கு மிகவும் பிடித்துப் போக எடுத்த எடுப்பிலிருந்தே பவுண்டரிகள் பறந்தன.

அதுவும் ஆறாவது ஓவர் வீசிய ஷபாஷ் அகமத் ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ரன்களை ஒரே ஓவரில் எடுத்தார் ராய்.
RCBvKKR

ஒரு பக்கம் ராய் அதி வேகத்தில் ரன்கள் எடுக்க மறுபக்கம் ஜெகதீசனோ அமைதியின் உருவமாய் ஆடினார். வேகமாக ஆடி பந்துக்கு எதுவும் வலித்து விடுமோ என்று எண்ணி அத்தனை அழகாக பந்தை தட்டிக் கொண்டிருந்தார். சின்னசாமி மைதானத்தில் அதுவும் பவர்பிளேயில் இறங்கி, அதுவும் பெங்களூர் பந்துவீச்சாளர்களை சந்தித்து 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் ஜெகதீசன். அன்னை தெரேசா போல அமைதியை விதைத்து விட்டு ஜெகதீசன் அவுட் ஆக அவருக்கும் சேர்த்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அடிக்க நினைத்து அவுட் ஆனார் ராய்.

அதன் பிறகு வெங்கடேஷ் மற்றும் கேப்டன் ராணா இணைந்தனர். ராணா இரண்டு ரன்களில் இருக்கும்போதே மிக சுலபமான கேட்ச் வாய்ப்பு ஒன்றை கொடுத்தார். சிராஜ் அதை பிடிக்கவில்லை. அடுத்து சிராஜ் ஓவரிலேயே மற்றொரு வாய்ப்பையும் கொடுத்தார் ராணா. அதையும் பெங்களூர் பிடிக்கவில்லை. எங்கு ராணா அவுட் ஆனால் ரசல் வந்து பேயாட்டம் ஆடிவிடுவாரோ என்று நினைத்தார்களோ என்னமோ... கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கொல்கத்தாவை வாழவைத்து அழகு பார்த்தது பெங்களூரு.

ரசல் வரும் வரை எல்லாம் நேரமில்லை என்று ஆட்டத்தை தன் கையில் எடுத்தார் கேப்டன் ராணா. ஹர்சல் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள், விஜயகுமார் ஓவரின் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என ரன்களை பெங்களூரு தட்டு இட்லி மீது தூவப்படும் பொடி போல சின்னசாமி மைதானத்தின் அத்தனை பக்கங்களிலும் தூவிவிட்டார் ரானா. இருந்தாலும் ஹசரங்கா பதினெட்டாவது ஓவரில்‌ ராணா மற்றும் வெங்கடேஷ் என இருவரையும் அடுத்தடுத்து அவுட் ஆக்க, கொல்கத்தா சற்று தடுமாறியது. ஆனால் கொல்கத்தாவின் சூப்பர் ஸ்டார் ரிங்க்கு சிங் மற்றும் நமீபியா அணியின் வீசா இருவரும் இணைந்து கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் எடுக்கவும் கொல்கத்தா சரியாக 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது.

200 ரன்களை துரத்திய பெங்களூரு மிகச்சிறப்பாக பவர்பிளேயை ஆரம்பித்தது. முதல் இரண்டு ஓவர்களிலேயே 30 ரன்கள் வந்தது பெங்களூருக்கு. அதிலும் இரண்டாம் ஓவரில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்த உமேஷ் எல்லாம் ஆட்டம் முடியும் வரை அடுத்து பந்து வீசவே இல்லை. டூப்ளெசிஸ் மற்றும் கோலி என இருவருமே தனியாக ஆட்டத்தை முடிக்கும் அளவுக்கு இன்னிங்ஸை ஆரம்பித்தனர். ஆனால் மூன்றாவது ஓவரில் சுயாஷ் பந்தில் டூப்ளெசிஸ் ஆட்டமிழந்தார். தான் வீசிய அடுத்த ஓவரிலேயே ஷபாஷ் அகமதையும்‌ அவுட் ஆக்கினார் சுயாஷ். ஆறாவது ஓவரில் மேக்ஸ்வெலும் அவுட் ஆக பெங்களூருவின் பிரதான மூன்று பேட்டர்களில் இரண்டு பேட்டர்கள் வேகமாக வெளியேறிவிட்டனர்.

KGFல் G மற்றும் F சீக்கிரம் கிளம்பியதும் K மட்டும் களத்தில் இருந்தார்.‌ கோலியின் பலவீனத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த கொல்கத்தா அணியினர் தொடர்ந்து ஸ்பின்னர்களுக்கே ஓவர்களை வழங்கினர். கேப்டன் ராணா கூட ஒரு ஓவரை வீசினார்.

லோம்ரோர் மூன்று சிக்சர்கள் அடித்து அசத்தினாலும் சரியான நேரத்தில் அவரை அவுட் ஆக்கினார் வருண். ஒரு கட்டத்தில் 15 பந்துகளின் 30 என்று இருந்த கோலி ஸ்பின்னர்கள் வந்தவுடன் அடுத்த 22 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.‌ இதை ஈடு செய்ய ரசல் ஓவரில் அடிக்க நினைத்து வெங்கடேஷின் அற்புதமான கேட்ச் காரணமாக‌ 54 ரன்களில் அவுட் ஆனார் கோலி‌.

இதன் பிறகு வழக்கமான பெங்களூரு கதை தான். மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், பிரபுதேசாய், ஹசரங்கா என அனைவரும் சொதப்பினர்.‌ அதிலும் பிரபுதேசாய் ரன் அவுட் ஆன போதெல்லாம் எந்த ஒரு பெங்களூர் ரசிகரும் களத்திற்குள் புகுந்து தினேஷ் கார்த்திக்கின் சட்டையை பிடிக்காதது எல்லாம் பொறுமையின் உச்சம். முக்கியமான நேரத்தில் எல்லாம் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த‌ பெங்களூரு 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மீண்டும் ஒருமுறை கோலி மேக்ஸ்வெல் மற்றும்டூ ப்ளெஸ்சிஸ் ஆகிய மூவரில் இருவர் வேகமாக அவுட் ஆகிவிட்டால் பெங்களூரு நிலை பரிதாபம் தான் என்பதை எதிரணிகளுக்கு உணர்த்தியுள்ளது‌. இந்த மூவரைக் கடந்து மற்றொருவர் கடைசி வரை நின்று எதாவது ஒரு போட்டியில் வென்று கொடுத்தால் தான் ஈ சாலா கப் நம்தே என்பதையெல்லாம் நினைத்து பார்க்க முடியும்.

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...