Skip to main content

How To: சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுப்பது எப்படி? | How To Prevent Urinary Tract Infection?

சிறுநீர்ப்பாதைத் தொற்று (Urinary Tract Infection) என்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சிறுநீர்ப்பாதை சார்ந்த முக்கியப் பிரச்னை. இதன் விளைவாக, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம். சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது எப்படி என விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷ்…

சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷ் | சென்னை.

``சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரை உள்ளதுதான் சிறுநீர்ப்பாதை. இந்தப் பாதையில் ஏற்படும் தொற்றினைத்தான் சிறுநீர்ப்பாதை என்கிறோம். சிறுநீர்ப் பாதையில் இத்தொற்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரகத்திலேயே கூட ஏற்படும். இது யாருக்கெல்லாம் பொதுவாக ஏற்படுகிறது என்று பார்த்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு மருந்துகள் உட்கொள்கிறவர்கள், ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது.

சிலருக்குப் பிறப்பிலேயே சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இருக்கும், சிறுநீரக வளர்ச்சியில் குறைபாடு இருக்கும். அவர்களுக்கும் இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்தொற்று உடலுக்குள்ளேயே ரத்தத்தில் உண்டாகி, சிறுநீர்ப் பாதைக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வெளியே உள்ள கிருமிகள் சிறுநீர் வெளியேறும் துவாரத்தின் வழியாக உட்புகவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் கழிப்பறையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும், பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

சிறுநீர்ப்பாதைத் தொற்றானது பால்வினை நோய்களுக்குள் வராது என்றாலும், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடனான உடலுறவின் விளைவாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்வது அவசியம். உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்பை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மெனோபாஸ் ஆன பெண்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதையில் எரிச்சல் இருக்கும்.

மெனோபாஸ்

மெனோபாஸுக்கு முன்புவரை, அவர்கள் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் சிறுநீர்ப் பாதையை ஈரத்தன்மையோடு வைத்திருக்கும். மெனோபாஸுக்குப் பிறகு ஹார்மோன் உற்பத்தி இல்லாமல் போவதால் சிறுநீர்ப்பாதை வறண்டு போய் விடுகிறது. இதனால் அவர்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். அது சிறுநீர்ப்பாதைத் தொற்றின் காரணமாக ஏற்படும் எரிச்சலாகவும் இருக்கலாம் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களில் 60 சதவிகிதம் பேர், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சிறுநீர்ப்பாதைத் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். 40 சதவிகிதப் பெண்கள், பலமுறை இத்தொற்றுக்கு ஆட்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆசனவாயும், சிறுநீர்ப்பாதையும் மிக நெருக்கமாக இருப்பதால் ஆசனவாயில் உற்பத்தியாகும் கிருமிகள் சிறுநீர்ப்பாதைக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு வயதான பிறகு விதைப்பையில் இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

சிறுநீரகம்

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலும் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் அதுவும் சிறுநீர்ப்பாதைத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். 5 வயதுக்கு மேலும் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் சிறுநீர்ப் பாதையில் அடைப்போ, தொற்றோ ஏற்பட்டிருக்கலாம். அதை பரிசோதிக்க வேண்டும். சிறுநீர்ப்பாதைத் தொற்று தொடர்ச்சியாக ஏற்படும் நிலையில், அது சிறுநீரக பாதிப்புக்கும் வழி வகுக்கும். எனவே, இத்தொற்றுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்வது அவசியம்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் நாளொன்றுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததன் மூலம், சிறுநீர் உள்ளேயே தேங்கியிருக்கும். அதன் மூலம் கிருமிகள் உண்டாகித் தொற்றினை ஏற்படுத்துகிறது. தண்ணீர் குடித்து முறையாக சிறுநீர் கழித்து வந்தாலே போதுமானது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை உள்ளேயே அடக்கி வைத்திருக்கக்கூடாது. அதனாலும் கிருமிகள் உண்டாகி தொற்று ஏற்படும்.

வயதான ஆண்களுக்கு விதைப்பையில் தொற்று அல்லது Bladder தளர்ந்து போவதால் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும். எப்போது சிறுநீர் வரும் என்கிற பயத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை இருக்கிறது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை சிறுநீர்ப் பாதையை அழுத்துவதால் கூட சரியாக சிறுநீர் வெளியேறாமல் இருக்கும். அதை கவனத்தில் கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

மருந்து மாத்திரைகளால் இத்தொற்றுக்கு ஆளாகுபவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் மருந்துகள் இருக்கின்றன. ஆக, சிறுநீர்ப்பாதைத் தொற்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்னை அல்ல என்பதால் அனைவரும் இதை கவனமாகக் கையாள வேண்டும்” என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...