Skip to main content

How To: சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுப்பது எப்படி? | How To Prevent Urinary Tract Infection?

சிறுநீர்ப்பாதைத் தொற்று (Urinary Tract Infection) என்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சிறுநீர்ப்பாதை சார்ந்த முக்கியப் பிரச்னை. இதன் விளைவாக, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம். சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது எப்படி என விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷ்…

சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷ் | சென்னை.

``சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரை உள்ளதுதான் சிறுநீர்ப்பாதை. இந்தப் பாதையில் ஏற்படும் தொற்றினைத்தான் சிறுநீர்ப்பாதை என்கிறோம். சிறுநீர்ப் பாதையில் இத்தொற்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரகத்திலேயே கூட ஏற்படும். இது யாருக்கெல்லாம் பொதுவாக ஏற்படுகிறது என்று பார்த்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு மருந்துகள் உட்கொள்கிறவர்கள், ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது.

சிலருக்குப் பிறப்பிலேயே சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இருக்கும், சிறுநீரக வளர்ச்சியில் குறைபாடு இருக்கும். அவர்களுக்கும் இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்தொற்று உடலுக்குள்ளேயே ரத்தத்தில் உண்டாகி, சிறுநீர்ப் பாதைக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வெளியே உள்ள கிருமிகள் சிறுநீர் வெளியேறும் துவாரத்தின் வழியாக உட்புகவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் கழிப்பறையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும், பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

சிறுநீர்ப்பாதைத் தொற்றானது பால்வினை நோய்களுக்குள் வராது என்றாலும், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடனான உடலுறவின் விளைவாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்வது அவசியம். உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்பை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மெனோபாஸ் ஆன பெண்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதையில் எரிச்சல் இருக்கும்.

மெனோபாஸ்

மெனோபாஸுக்கு முன்புவரை, அவர்கள் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் சிறுநீர்ப் பாதையை ஈரத்தன்மையோடு வைத்திருக்கும். மெனோபாஸுக்குப் பிறகு ஹார்மோன் உற்பத்தி இல்லாமல் போவதால் சிறுநீர்ப்பாதை வறண்டு போய் விடுகிறது. இதனால் அவர்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். அது சிறுநீர்ப்பாதைத் தொற்றின் காரணமாக ஏற்படும் எரிச்சலாகவும் இருக்கலாம் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களில் 60 சதவிகிதம் பேர், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சிறுநீர்ப்பாதைத் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். 40 சதவிகிதப் பெண்கள், பலமுறை இத்தொற்றுக்கு ஆட்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆசனவாயும், சிறுநீர்ப்பாதையும் மிக நெருக்கமாக இருப்பதால் ஆசனவாயில் உற்பத்தியாகும் கிருமிகள் சிறுநீர்ப்பாதைக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு வயதான பிறகு விதைப்பையில் இத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

சிறுநீரகம்

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலும் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் அதுவும் சிறுநீர்ப்பாதைத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். 5 வயதுக்கு மேலும் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் சிறுநீர்ப் பாதையில் அடைப்போ, தொற்றோ ஏற்பட்டிருக்கலாம். அதை பரிசோதிக்க வேண்டும். சிறுநீர்ப்பாதைத் தொற்று தொடர்ச்சியாக ஏற்படும் நிலையில், அது சிறுநீரக பாதிப்புக்கும் வழி வகுக்கும். எனவே, இத்தொற்றுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்வது அவசியம்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் நாளொன்றுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததன் மூலம், சிறுநீர் உள்ளேயே தேங்கியிருக்கும். அதன் மூலம் கிருமிகள் உண்டாகித் தொற்றினை ஏற்படுத்துகிறது. தண்ணீர் குடித்து முறையாக சிறுநீர் கழித்து வந்தாலே போதுமானது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை உள்ளேயே அடக்கி வைத்திருக்கக்கூடாது. அதனாலும் கிருமிகள் உண்டாகி தொற்று ஏற்படும்.

வயதான ஆண்களுக்கு விதைப்பையில் தொற்று அல்லது Bladder தளர்ந்து போவதால் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும். எப்போது சிறுநீர் வரும் என்கிற பயத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை இருக்கிறது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை சிறுநீர்ப் பாதையை அழுத்துவதால் கூட சரியாக சிறுநீர் வெளியேறாமல் இருக்கும். அதை கவனத்தில் கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

மருந்து மாத்திரைகளால் இத்தொற்றுக்கு ஆளாகுபவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் மருந்துகள் இருக்கின்றன. ஆக, சிறுநீர்ப்பாதைத் தொற்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்னை அல்ல என்பதால் அனைவரும் இதை கவனமாகக் கையாள வேண்டும்” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...