Skip to main content

பிடிஎஸ் பாடகரை போல் மாற விரும்பிய நடிகர் - அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சோகம்!

தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS. உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஏழு பேர் கொண்ட இந்தக் குழு பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். இவர்களின் பாடல் வரிகள் சமூகவலைதளங்களில் மிக பிரபலம். இவர்களின் படைப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தக் குழு உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் பாடல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். BTS இந்நிலையில் இந்தக் குழுவைச் சேர்ந்த பாடகரான ஜிமினை போல தோற்றமளிக்க விரும்பிய கனடாவை சேர்ந்த நடிகர் செயின்ட் வான், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதனால் ஏற்பட்ட விளைவுகளால் தற்போது உயிரிழந்துள்ளார். 22 வயதான செயின்ட் வான், கனடாவில் பிறந்து, தன் இசைத்துறை மற்றும் தொழிலுக்காக தென்கொரியாவுக்கு குடிபெயர்ந்தார். கடந்தாண்டு, தன் முகத்தை மாற்றுவதற்காக இவர் 12 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இதில் மூக்கை அழகாக்குதல், முகம், புருவம், கண்களை உயர்த்ததல், உதடு குறைப்பு ஆகியன அடங்கும். இதற்காக அவர் 2,20,000 டாலர் செலவிட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ. 1.80 கோடி. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, தாடை வடிவமைப்பை மாற்ற இவருக்குப் புதிதாக ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, ஊசி போட வேண்டியிருந்தது. நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையிலேயே செயின்ட் உயிரிழந்தார். செயின்ட் வானின் உயிரிழப்பைப் பற்றி பேசியுள்ள அவரது விளம்பரதாரர் எரிக் பிளேக், `இது மிகவும் சோகமானது மற்றும் துரதிஷ்டவசமானது. செயின்ட் தனது தோற்றத்தில் மிகவும் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருந்தார். அவருக்கு சதுரமான தாடை மற்றும் கன்னம் இருந்தது. அது மிகவும் அகலமானதான இருப்பதாக நினைத்து தன் முக அமைப்புப் பிடிக்காமல் இருந்தார் செயின்ட். மேலும் பல நடிகர்களை போலவே தானும் `வி’ வடிவிலான முக அமைப்பை பெற விரும்பினார். அவர் தென்கொரியாவுக்கு வந்த பிறகு இங்கு அவருக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. அவர் தனது மேற்கத்திய தோற்றத்துக்கு எதிராக மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக உணர்ந்தார். இதனையடுத்து செயின்ட் மிகக் கடினமாக உழைத்தார், மிகவும் உற்சாகமாக இருந்தார்.செயின்ட் வானின் பழைய முக தோற்றம்BTS: பிரிகிறது உலகப் புகழ்பெற்ற இசைக் கூட்டணி... மீண்டும் இணைவது எப்போது? 2019-ல் ஒரு தென்கொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்து செயின்டின் வீடு, போக்குவரத்து மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் செய்து வந்தது. யு.எஸ் ஸ்ட்ரீமிங் நெட்வொர்க்கிற்காக பிடிஎஸ் பாடகர் ஜினினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதுதான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. செயின்ட் வான் கடந்த வருடம் ஜூன் மாதம் கொரிய நாடகமான ‘பிரட்டி லைஸின்’ படப்பிடிப்பை தொடங்கி டிசம்பரில் முடித்தார். எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. ஆனால் அதற்குள் அவருக்கு இந்த நிலை உருவாகிவிட்டது" என, எரிக் வேதனை தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/Sn84g6

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...