Skip to main content

`ரொனால்டோ அணியில் பயிற்சி பெற்ற சென்னை இளைஞர் பிரியரஞ்சன்!' - ஒரு சுவாரஸ்யப் பகிர்வு

இன்றைய தேதியில், மாணவர்கள் கல்வி பயிலும் வயதிலேயே அவர்களின் அடுத்த கட்டத்திற்கான திட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதற்கான வாய்ப்புகளும் பல மேடைகளில் பரந்து விரிந்திருக்கின்றன. திறமையுடன் அந்த மேடையைச் சரியாகப் பயன்படுத்திய மாணவர்கள் பல அனுபவங்களைக் கற்றுத் தேர்ந்திருப்பார்கள்.

அதுபோல தனது இளம் பருவத்திலேயே `யுனைடெட் வீ பிளே' என்கிற திட்டத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்குச் சென்று கால்பந்து விளையாடி இந்தியா திரும்பியிருக்கிறார் 17 வயதான பிரியரஞ்சன். அவரை சந்திக்க ஓர் அந்தி சாய்ந்த பொழுதில் அவரது வீட்டிற்குச் சென்றேன். மான்செஸ்டரில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை நம்மிடையே பகிரத் தொடங்கினார்.
Priya Ranjan | பிரியரஞ்சன்

"யுனைடெட் வீ பிளே என்கிற திட்டத்தின் மூலம் மான்செஸ்டருக்குச் சென்று திரும்பியிருக்கிறேன். விசா கிடைத்தவுடன் மான்செஸ்டருக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்தேன். அந்த ஒரு வாரம் எனக்கு அங்குப் பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது. 'யுனைடெட் வீ பிளே' திட்டத்தின் தேர்வு முறையில் முதலில் கால்பந்தாட்டத்தில் அடிப்படையில் சில நுணுக்கங்களை எதிர்பார்ப்பார்கள். அதன் பிறகு குழுக்களைப் பிரித்து விளையாடச் செய்வார்கள். இதிலிருந்து சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இறுதியில் தகுதிபெற்ற நால்வரை மான்செஸ்டருக்கு அழைத்துச் சென்றார்கள். மார்ச் 13-ம் தேதி இங்கிருந்து புறப்பட்டு மார்ச் 22-ம் தேதி இந்தியா திரும்பிவிட்டோம். மான்செஸ்டருக்கு சென்ற இரண்டாவது நாளிலேயே எங்களுக்கான பயிற்சி தொடங்கிவிட்டது. மான்செஸ்டரிலுள்ள விளையாட்டு அரங்கமே எங்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. அங்குள்ள பயிற்சிகள் முதலில் கடினமாக இருந்தன. அங்கு கற்றுக்கொடுக்கக்கூடிய நுணுக்கங்கள் முற்றிலும் வேறுபட்டவை.

அங்கு ரபேல் வரேன், டாலோட், சார்லி ஆகிய கால்பந்தாட்ட வீரர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடனான உரையாடல் பல அறிவுசார் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பதாக அமைந்தது.

மான்செஸ்டர் சென்றதுமே நாங்கள் முதலில் சந்தித்தது வெஸ்ப்ரவுண்தான். அவர் எப்போதும் மற்றவர்களை ஊக்கமளிப்பதற்குத் தவறியதில்லை. இந்த வயதில் அவரது ஃபிட்னஸ் வியக்கவைக்கிறது. ஒரு கால்பந்தாட்ட வீரருக்குக் கடின உழைப்பு, விளையாட்டில் திறமையாக இருப்பது மட்டும் போதுமானதல்ல... ஒழுக்கமாக, ஆரோக்கியமாக இருப்பதுதான் ஒரு வீரரை மேம்படுத்தும் என்பதை எனக்குப் புரிய வைத்தது அவர்தான். 90களில் திகழ்ந்த முக்கியமான கால்பந்தாட்ட வீரரான அவருக்குப் பல அனுபவங்கள் இருக்கும். அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எங்களை அவரிடம் பலவற்றை உரையாட அழைத்துச் சென்றது. கேட்டவை அனைத்துக்கும் சலிக்காமல் பதிலளித்தார்.

Priya Ranjan | பிரியரஞ்சன்

அங்குள்ள வானிலை முற்றிலும் வேறுபட்டது. காலையில் 10 மணிக்குப் பயிற்சி தொடங்கும். முதலில் 20 நிமிடங்கள் வார்ம் அப் செய்வோம். அங்குள்ள குளிர் வானிலைக்கு நமது உடல் எளிதாகத் தயாராகிவிடாது. அங்குப் பல சவால்களைச் சந்தித்தேன். முதலில் அங்கு மொழி தடையாக இருக்கும். அங்குள்ள அனைவரும் ஆங்கிலம் மட்டும் பேசமாட்டார்கள். ஸ்பானிஷ், பிரெஞ்ச் வீரர்களும் அங்கே இருப்பார்கள்" என்றவர், தனது பயிற்சிக்காலம் குறித்தும் அவரது கால்பந்தாட்ட கரியர் குறித்தும் பகிரத் தொடங்கினார்.

"ஒரு கால்பந்தாட்ட வீரருக்குக் காலை 2 மணி நேரப் பயிற்சி மட்டும் போதுமானதல்ல. மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவேன். எனக்குப் பள்ளிப் பருவத்தில்தான் கால்பந்தாட்டம் மீது ஆசை வந்தது. 9 வயதிலிருந்து பள்ளியிலுள்ள கால்பந்தாட்ட அணிக்கு விளையாடி வருகிறேன்.
Priya Ranjan | பிரியரஞ்சன்

இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அகாடமியில் சேர்ந்தேன். அதன் பிறகு சென்னையின் எப்.சியில் இணைவதற்குப் பல முயற்சிகளை முன்னெடுத்தேன். அந்த முயற்சி வெற்றிகரமானதாக அமைந்தது. எனது 11 வயதிலிருந்து சென்னையின் எப்.சிக்காக விளையாடி வருகிறேன். அண்டர் 13, 15 ஆகிய அணிகளைத் தொடர்ந்து இப்போது அண்டர் 17-ல் விளையாடி வருகிறேன். குறைந்த வயதிலேயே சென்னையின் எப்.சிக்கு கீ-பிளேயராக இருக்கிறேன்" என்றார்.

பிரியரஞ்சனுக்கு அவரது தந்தைதான் கால்பந்தாட்டத்தில் முதல் ஆசானாம். பிரியரஞ்சனின் தந்தையும் கால்பந்தாட்ட வீரர்தான். அவரிடம் பேசுகையில்,

தந்தையுடன் பிரியரஞ்சன்

"நான் ஒய்.எம்.சி.ஏ ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில்தான் படித்தேன். முதலில் என் மகன் பள்ளியிலுள்ள கால்பந்தாட்ட அணியில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்குத் தொடக்கப்புள்ளியாக நான் இருந்தேன், அதன் பிறகு அவராகவே அவரை வளர்த்துக் கொண்டார். இப்போது சென்னையின் எப்.சி அணிக்கும் விளையாடி வருகிறார். மான்செஸ்டருக்குச் சென்று திரும்பியிருக்கிறார்" என்று பேசியவரின் கண்களில் அவ்வளவு பெருமிதம். தந்தை பேசும்போதே பிரியரஞ்சன், "அப்பாதான் எனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷன்" எனக் கூறி விடைபெற்றார்.

பிரியரஞ்சனின் கனவுகள் பலிக்கட்டும்!

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...