Skip to main content

தமிழக பாஜக-விடம் ஒரு முகம்; டெல்லியிடம் ஒரு முகம்... எடப்பாடி - அமித் ஷா  சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பெரிய பட்டாளத்துடன் டெல்லி சென்று திரும்பியிருக்கிறார்.

'எடப்பாடி' பழனிசாமி

பொதுச் செயலாளரான பின்னர், முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணி குறித்து விவாதித்து இருக்கிறார் என்று தகவல் நமக்கு கிடைக்கிறது. அத்தோடு, அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க தலைவர்களிடம் அமித் ஷா பேசியது புதிய விவாதங்களை கிளப்பிவிட்டு இருக்கிறது.
இதுகுறித்து எடப்பாடியுடம் டெல்லி சென்ற சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

``அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அச்சாரம் போட்டு இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக, தமிழ்நாடு அரசியல் களத்தில் கொழுந்துவிட்டு எரியும் பி.டி.ஆர் ஆடியோ, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீதான ஐ.டி ரெய்டு உள்ளிட்டவை குறித்த பைல்களை, அமித் ஷாவிடம் வழங்கினார் எடப்பாடி. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அவரது வார் ரூமின் செயல்பாடுகள் குறித்தும் கூட விவாதிக்கப்பட்டது. எங்களுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசுகிறார்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

இதனால், கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதோடு, தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு அதிகமாகியிருக்கிறது. அ.தி.மு.க எதிர்க்கட்சியாக செயல்பட தடையாக இருப்பதே தமிழக பா.ஜ.க-வும், ஓ.பி.எஸ்-ஸும்தான். அதை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என்று அமித் ஷாவிடம் தெரிவித்தோம்.  ஆனால், அதுகுறித்து எதுக்குமே அமித் ஷா பெரிய அளவில் ரியாக்‌ஷன் செய்யவில்லை. மாறாக, அண்ணாமலையை அறைக்குள் அழைத்து, அமர வைத்தார் அமித் ஷா.

இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே, அண்ணாமலையின் செயல்பாடு, தலைமைக்கு தெரியாமலா இருக்கும் என்ற எங்களின் சந்தேகம், அமித் ஷாவின் செயலில், உறுதியாகிவிட்டது. அண்ணாமலையின் செயல்பாடுதான் கூட்டணியை பாதிக்கும் வகையில் இருக்கிறதென்று நாங்கள் சொன்னபோது, அவரை தலைமை கண்டித்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. அதேநேரத்தில், அரை மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், அண்ணாமலை ஒரு வார்த்தைக்கூட பேச அனுமதிக்கவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா 'பழைய கதையை விடுங்கள். தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது. இந்நிலையில், கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பங்களை இருதரப்புமே தவிர்க்க வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான், தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும்' என இறங்கி வந்து பேசியதால், அதற்கு மேல் எங்களால் பேச முடியவில்லை.

எடப்பாடி - அமித்ஷா

தொடர்ந்து, சீட் விவகாரங்கள் குறித்து மேலோட்டமாக பேசப்பட்டது. அமித் ஷாவே சமாதானப் புறாவை பறக்கவிட்டதால், மீண்டும் அண்ணாமலையிடனான பிரச்னை குறித்து பேச வேண்டாம் என்ற முடிவோடு தான் வெளியில் வந்தோம். அதைதான் எடப்பாடி பிரஸ்மீட்டில் தெளிவுபடுத்தினார். அமித் ஷாவின் பேச்சுக்கு மதிப்பளித்து நாங்கள் சமாதானத்துக்கு முன் வந்துவிட்டோம்.  டெல்லிக்கு ஒருமுகம் இங்கு ஒரு முகம் என்பதெல்லாம் இல்லை. எதற்காக வந்தோம் என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம். ஆனால், அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க-வை மீண்டும் சீண்டினால், இனி தலைமையிடம் போய் நிற்க போவதில்லை. நாங்களே நேரடியாக களத்தில் இறங்குவோம் என்ற முடிவையும் எங்கள் தலைமை எடுத்து இருக்கிறது." என்றார் விரிவாக...  


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...