Skip to main content

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து | 8 மாதங்களில் 1,000 நிலநடுக்கங்கள் பதிவு - உலகச் செய்திகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 1,000 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவுசெய்யப்பட்டதாக, Seismological Research Letters ஜர்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கயிர்பூர் என்ற இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் தீப்பிடித்தது. இதில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். புகழ்பெற்ற விளையாட்டு சேனலான ESPN -ன் தொகுப்பாளர் Marly Rivera, ஒரு நிகழ்ச்சியின்போது சக தொகுப்பாளரான Ivón Gaete -யிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் இந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சூடானின் தலைநகரான கார்ட்டூமில், ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன. இதுவரை, இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 512-ஆக உயர்ந்திருக்கிறது. புகழ்பெற்ற 'ஜெரி ஸ்ப்ரிங்கர் ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், சின்சினாட்டியின் முன்னாள் மேயருமான Jerry Springer காலமானார். அவருக்கு வயது 79. அமெரிக்காவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய பெற்றோரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். குழந்தைகளை டாட்டூ போட அவர்கள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவால்ல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க , உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் அறிவித்தப்படி, 1,550 ஆயுத வாகனங்களையும், 230 டாங்குகளையும் வழங்கியிருப்பதாக நேட்டோவின் தலைவரான Jens Stoltenberg அறிவித்திருக்கிறார். புகழ்பெற்ற 'குயின் ' இசைக்குழுவின் பாடகரும், பாடலாசிரியருமான ஃபிரெடி மெர்குரியின் 'ஷாட்பேண்ட்ஸ்' (Hotpants) ஒன்று ஏலத்தில் சுமார் 18,000 பவுண்டுகளுக்குப் பிரிட்டனில் விற்கப்பட்டது. 1703-ல் தொடங்கப்பட்ட உலகின் பழைமையான நாளிதழ்களில் ஒன்றான Wiener Zeitung, அதன் அச்சுப் பதிப்பகத்தை நிறுத்திவிட்டு, இணையவழி சேவையைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறது. இதுவே உலகின் பழைமையான நாளிதழ். இரண்டாம் உலகப் போரின்போது, நாசி முகாம்களில் காவலாளியாக இருந்த Josef Schuetz தன்னுடைய 102-வது வயதில் காலமானார். கடந்த ஆண்டுதான், இவரின் போர்க் குற்றங்களுக்காக ஐந்து வருடங்கள் இவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
http://dlvr.it/SnG0KC

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...