Skip to main content

``எங்கள் குடும்பம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை ரத்தத்தால் வளர்த்திருக்கிறது!" - பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில், டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பவன் குமார் பன்சால், சக்திசிங் கோஹில், பிரதிபா சிங், மணீஷ் சத்ரத் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள், காலை 10 மணி முதல் சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இந்தப் போராட்டத்துக்குச் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், ஏராளமான கட்சித் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ராகுல் காந்திக்கு ஆதரவாக நாங்கள் அவருடன் நிற்கிறோம். அதே சமயம் இது போன்ற நூற்றுக்கணக்கான சத்தியாகிரகப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கின்றன. யாராவது எங்களை நசுக்க முயன்றால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க, ஜனநாயகத்தைக் காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி போராடுகிறார். கர்நாடகாவில் தேர்தல் நேரத்தில் பேசியதற்கு குஜராத்தின் சூரத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ராகுல் காந்திக்கு எதிராக எந்த அவதூறு வழக்கும் இல்லை. மேலும், எதிர்க்கட்சியில் வலிமையான ராகுல் காந்தி இருப்பதால், அவரது வாயை அடைக்க முயல்கிறார்கள். ஒரு நபர் பாரத் ஜோடோ யாத்ரா மூலம் கோடிக்கணக்கான மக்களை இணைத்தார். அதனால் அவர்கள் பயப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாரும் பேசக் கூடாது என்று பிரதமர் மோடி எப்போதும் விரும்புகிறார். ஆனால், ராகுல் காந்தி 'நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உண்மையுடன் நடப்பேன். காந்திஜியின் வழியில் நடப்பேன்' என்று கூறியிருக்கிறார்.அதானி - மோடி ஓ.பி.சி-கள் எனக் குறிப்பிடப்படும் மெகுல் சோக்சியும், லலித் மோடியும், நாட்டின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டனர். தப்பியோடியவர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது.... நாட்டைக் காக்கப் பாடுபடும் அவரைச் சிறைக்கு அனுப்புகிறீர்கள், நாட்டை கொள்ளையடிப்பவரை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் ராகுல் காந்தியுடன் இணைந்து நிற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு 100 முறை நன்றி கூறுகிறேன்" என்றார். ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பேசுகையில், ``காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ததற்காக வெட்கப்பட வேண்டுமா? உயிர்த் தியாகம் செய்த எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ரத்தம் நம் நாட்டு மண்ணில் இருக்கிறது. அவர்களின் ரத்தம் நமது நாட்டின் ஜனநாயகத்தை வளர்த்திருக்கிறது. ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய இரண்டு உயர் பல்கலைக்கழகங்களில் தனது கல்வியை முடித்திருந்தும் ராகுல் காந்தியை ஒரு 'பப்பு' என்று சித்திரிக்கிறார்கள். சமீபத்தில் ராகுல் காந்தியால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் கூட்டம் அவர் உண்மையில் ஒரு ‘பப்பு’ அல்ல என்பதைக் காவி கட்சிக்கு உணர்த்தியிருக்கிறது. பா.ஜ.க அமைச்சர்கள், நிர்வாகிகள் எங்கள் குடும்பத்தை பலமுறை அவமதித்திருக்கின்றனர். ஆனால், நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்கள் தந்தையை, தாயை அவதூறாகப் பேசியிருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.ராகுல் காந்தி: `அவதூறு வழக்குக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை மிக அதிகம்!' - பிரசாந்த் கிஷோர்
http://dlvr.it/SlXNDP

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...