Skip to main content

``எங்கள் குடும்பம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை ரத்தத்தால் வளர்த்திருக்கிறது!" - பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில், டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பவன் குமார் பன்சால், சக்திசிங் கோஹில், பிரதிபா சிங், மணீஷ் சத்ரத் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள், காலை 10 மணி முதல் சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இந்தப் போராட்டத்துக்குச் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், ஏராளமான கட்சித் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ராகுல் காந்திக்கு ஆதரவாக நாங்கள் அவருடன் நிற்கிறோம். அதே சமயம் இது போன்ற நூற்றுக்கணக்கான சத்தியாகிரகப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கின்றன. யாராவது எங்களை நசுக்க முயன்றால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க, ஜனநாயகத்தைக் காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி போராடுகிறார். கர்நாடகாவில் தேர்தல் நேரத்தில் பேசியதற்கு குஜராத்தின் சூரத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ராகுல் காந்திக்கு எதிராக எந்த அவதூறு வழக்கும் இல்லை. மேலும், எதிர்க்கட்சியில் வலிமையான ராகுல் காந்தி இருப்பதால், அவரது வாயை அடைக்க முயல்கிறார்கள். ஒரு நபர் பாரத் ஜோடோ யாத்ரா மூலம் கோடிக்கணக்கான மக்களை இணைத்தார். அதனால் அவர்கள் பயப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாரும் பேசக் கூடாது என்று பிரதமர் மோடி எப்போதும் விரும்புகிறார். ஆனால், ராகுல் காந்தி 'நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உண்மையுடன் நடப்பேன். காந்திஜியின் வழியில் நடப்பேன்' என்று கூறியிருக்கிறார்.அதானி - மோடி ஓ.பி.சி-கள் எனக் குறிப்பிடப்படும் மெகுல் சோக்சியும், லலித் மோடியும், நாட்டின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டனர். தப்பியோடியவர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது.... நாட்டைக் காக்கப் பாடுபடும் அவரைச் சிறைக்கு அனுப்புகிறீர்கள், நாட்டை கொள்ளையடிப்பவரை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் ராகுல் காந்தியுடன் இணைந்து நிற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு 100 முறை நன்றி கூறுகிறேன்" என்றார். ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பேசுகையில், ``காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ததற்காக வெட்கப்பட வேண்டுமா? உயிர்த் தியாகம் செய்த எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ரத்தம் நம் நாட்டு மண்ணில் இருக்கிறது. அவர்களின் ரத்தம் நமது நாட்டின் ஜனநாயகத்தை வளர்த்திருக்கிறது. ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய இரண்டு உயர் பல்கலைக்கழகங்களில் தனது கல்வியை முடித்திருந்தும் ராகுல் காந்தியை ஒரு 'பப்பு' என்று சித்திரிக்கிறார்கள். சமீபத்தில் ராகுல் காந்தியால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் கூட்டம் அவர் உண்மையில் ஒரு ‘பப்பு’ அல்ல என்பதைக் காவி கட்சிக்கு உணர்த்தியிருக்கிறது. பா.ஜ.க அமைச்சர்கள், நிர்வாகிகள் எங்கள் குடும்பத்தை பலமுறை அவமதித்திருக்கின்றனர். ஆனால், நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்கள் தந்தையை, தாயை அவதூறாகப் பேசியிருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.ராகுல் காந்தி: `அவதூறு வழக்குக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை மிக அதிகம்!' - பிரசாந்த் கிஷோர்
http://dlvr.it/SlXNDP

Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...