Skip to main content

"என்ன, நீங்களும் கறுப்பு உடையா..." - சட்டமன்ற வளாகத்தில் வானதியிடம் கலகலத்த விஜயதரணி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கறுப்பு உடையில் தமிழக சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கு. செல்வபெருந்தகை கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சட்டமன்றத்துக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாம் ஆதரவாக இருக்கிறோம் என்ற பதாகைகளையும் ஏந்தி குழுவாகச் சட்டமன்றத்துக்கு வர வேண்டும்.

ராகுல் காந்திக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேச வேண்டும். சட்டமன்றத்தைவிட்டு வெளியே வராமல் இரவு உள்ளிருப்புப் போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, இன்று காலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடையில் சட்டமன்றத்துக்கு வருகை தந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

கறுப்பு உடையில் வானதி சீனிவாசன் - விஜயதரணி

அந்தச் சமயத்தில் சட்டமன்றத்துக்கு சிறிது தாமதமாக வந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் யதேச்சையாக கறுப்பு நிற உடையில் வந்திருந்தார். அவர் உள்ளே வரும்போது எதிர்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி, வானதி சீனிவாசனிடம், "என்ன நீங்களும் கறுப்பு உடையா..." என விளையாட்டாகப் பேச.... "அய்யய்யோ.... இல்லைங்க அதற்காக நான் கறுப்பு உடையில் வரவில்லை" என்று சிரித்துக்கொண்டே அவர்களைக் கடந்திருக்கிறார். இதனால் அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் கலகலப்பு ஏற்பட்டது. வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்களும் வானதியிடம் கறுப்பு உடை குறித்து கேள்விகளை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அதைச் சிரித்தபடியே கடந்து சென்றார்.

தொடர்ந்து சட்டமன்றத்துக்குள் சபாநாயகர் அப்பாவு வானதிக்கு பேச அனுமதி அளிக்கும்போது, ``மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்களே காங்கிரஸ்காரர்கள்தான் யூனிஃபார்பில் (கறுப்பு உடை) வந்திருக்கிறார்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்திருப்பதுபோல் தெரிகிறது” என்றார், நகைச்சுவையாக. அதற்கு பதிலளித்த வானதி, ``எமெர்ஜென்சி காலத்தில் தமிழத்தில் ஆளும்கட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நினைவூட்ட கறுப்பு உடையில் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...