Skip to main content

காதலர்களுக்கு குட் நியூஸ்; ரியல் முத்தத்தை உணர்த்தும் Kissing Device - சீனாவில் கண்டுபிடிப்பு!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தொலைதூர காதலர்களுக்கான `முத்த சாதனம்’ (kissing device) ஒன்றை உருவாக்கியுள்ளது. இது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் சலசலப்பையும் உண்டாக்கி  இருக்கிறது. `நீ கொடுக்கும் முத்தங்கள் அனைத்தையும், போனே வாங்கிக் கொள்கிறது. அந்த முத்தத்தை என்னால் முழுமையாக உணர முடியவில்லை’ எனத் தொலைதூர காதலர்கள் வருத்தம் கொள்வதுண்டு. இவர்களுக்கு உதவும் வகையில், சீன பல்கலைக்கழகம் `Kissing Device’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சாதனம் சிலிக்கான் உதடுகள், பிரஷர் சென்சார் மற்றும் ஆக்சுவேட்டர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  தொலைதூரக் காதலர்கள், இதற்கான செயலியை தங்களது மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செல்போனில் இந்தச் சாதனத்தைப் பொருத்திய பின், பார்ட்னரை ஆப்பில் இணைக்க வேண்டும்.  அதன்பின் சிலிக்கான் உதடுகளில் முத்தமிட்டால், முத்தமிடுபவர் களின் அழுத்தம், வெப்பம் என உண்மையான முத்த உணர்வை, மறுபுறத்தில் இருப்பவரால் உணர முடியும். இதுமட்டுமல்லாமல் இந்தச் சாதனத்தை உபயோகிப்பவர் எழுப்பும் ஒலியையும் மற்றவருக்கு அனுப்ப முடியும் எனக் கூறுகின்றனர்.இசைஞானி என் ஜீவன்! - இசையின் காதலி பகிரும் பாடல் பட்டியல் | My Vikatan இந்தச் சாதனத்தின் முன்னணி கண்டுபிடிப்பாளரான ஜியாங் ஜாங்லி கூறுகையில், ``எனது பல்கலைக்கழகத்தில் நான் என் காதலியுடன் தொலைதூர உறவில் இருந்தேன், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொண்டோம். இந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கும் உத்வேகம் இங்குதான் உருவானது" எனத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி வைரலான நிலையில், இதெல்லாம் இப்ப தேவையா என, சிங்கிள்ஸ் ஆதங்கத்துடன் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
http://dlvr.it/Sk6W1P

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...