Skip to main content

காதலர்களுக்கு குட் நியூஸ்; ரியல் முத்தத்தை உணர்த்தும் Kissing Device - சீனாவில் கண்டுபிடிப்பு!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தொலைதூர காதலர்களுக்கான `முத்த சாதனம்’ (kissing device) ஒன்றை உருவாக்கியுள்ளது. இது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் சலசலப்பையும் உண்டாக்கி  இருக்கிறது. `நீ கொடுக்கும் முத்தங்கள் அனைத்தையும், போனே வாங்கிக் கொள்கிறது. அந்த முத்தத்தை என்னால் முழுமையாக உணர முடியவில்லை’ எனத் தொலைதூர காதலர்கள் வருத்தம் கொள்வதுண்டு. இவர்களுக்கு உதவும் வகையில், சீன பல்கலைக்கழகம் `Kissing Device’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சாதனம் சிலிக்கான் உதடுகள், பிரஷர் சென்சார் மற்றும் ஆக்சுவேட்டர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  தொலைதூரக் காதலர்கள், இதற்கான செயலியை தங்களது மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செல்போனில் இந்தச் சாதனத்தைப் பொருத்திய பின், பார்ட்னரை ஆப்பில் இணைக்க வேண்டும்.  அதன்பின் சிலிக்கான் உதடுகளில் முத்தமிட்டால், முத்தமிடுபவர் களின் அழுத்தம், வெப்பம் என உண்மையான முத்த உணர்வை, மறுபுறத்தில் இருப்பவரால் உணர முடியும். இதுமட்டுமல்லாமல் இந்தச் சாதனத்தை உபயோகிப்பவர் எழுப்பும் ஒலியையும் மற்றவருக்கு அனுப்ப முடியும் எனக் கூறுகின்றனர்.இசைஞானி என் ஜீவன்! - இசையின் காதலி பகிரும் பாடல் பட்டியல் | My Vikatan இந்தச் சாதனத்தின் முன்னணி கண்டுபிடிப்பாளரான ஜியாங் ஜாங்லி கூறுகையில், ``எனது பல்கலைக்கழகத்தில் நான் என் காதலியுடன் தொலைதூர உறவில் இருந்தேன், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொண்டோம். இந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கும் உத்வேகம் இங்குதான் உருவானது" எனத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி வைரலான நிலையில், இதெல்லாம் இப்ப தேவையா என, சிங்கிள்ஸ் ஆதங்கத்துடன் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
http://dlvr.it/Sk6W1P

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...