Skip to main content

Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்

ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறதோ, பக்கவாத பாதிப்பிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகளவு ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கு பக்கவாதம் பாதிக்கும் அபாயம் அதிகம்தான்.

ஸ்ட்ரெஸ் இருக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அதீத ஸ்ட்ரெஸ்ஸில் உள்ள நபரின் மூளை அமைதியாக வேலை செய்யாது. சரியாகத் தூங்க மாட்டார். அதனால் அவரது மூளைக்கு ஓய்வு கிடைத்திருக்காது. அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அளவு உடலில் அதிகரிக்கும். ரத்தச் சர்க்கரை அளவும் உயரும். கூடவே கொலஸ்ட்ரால் அளவும் கூடும்.

ஸ்ட்ரெஸ் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அந்த நபர் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ செய்வார். இந்த இரண்டும் இன்னும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது பக்கவாத பாதிப்புக்கான ரிஸ்க்கை இன்னும் அதிகரிக்கும்.

கடந்த வருடம் இது குறித்து ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. வேலையிடத்தில் பலருக்கும் டெட்லைனை முடிக்க வேண்டிய கட்டாயமும், டாஸ்க்குகளை முடிக்க வேண்டிய கட்டாயமும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு காரணமாகின்றன. அடுத்ததாக, செய்கிற வேலையில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கட்டுப்பாடு இருக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

stress

டெட்லைன் நெருக்கடிகள் இல்லாத துறைகளில் வேலை பார்த்தவர்களிடம் பக்கவாத பாதிப்பு குறைவாக இருந்தது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டாரன்ட்டுகளில் வெயிட்டர்களாக பணிபுரிவோருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படும் ரிஸ்க் அதிகம் என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.

மற்ற எந்த வேலையைவிடவும் இவர்களுக்கு ஓய்வில்லாத பணி சுழற்சி, வாடிக்கையாளர்களின் அணுகுமுறை, அவர்களுக்கான சேவையில் காட்ட வேண்டிய அவசரம் காரணமாக உச்சகட்ட ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறதாம். அதே போல செவிலியர் பணியிலும் இந்த ரிஸ்க் அதிகமாம்.

எனவே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் பக்கவாதத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்ட்ரெஸ் என்பதை உங்களுக்கான எக்ஸ்கியூஸாக சொல்லிக் கொள்ளாதீர்கள். நம் வேலை நமக்கு ஸ்ட்ரெஸ்ஸை தருகிறது என்றால் நாம்தான் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். வேலையை மாற்றிக்கொள்ள முடியாத சூழலில் அந்த வேலையை இலகுவாக, மகிழ்ச்சியாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம்

எனவே உங்களுடைய ஸ்ட்ரெஸ் அளவை நீங்கள்தான் உணர்ந்து அதிலிருந்து விடுபட முயல வேண்டும். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது அந்தச் சூழலில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...