Skip to main content

பைடன் விசிட்... புதின் அதிரடி - ஓராண்டைக் கடந்தும் ஓயாத போர் - பின்னணி என்ன?!

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதுதான் உலக மக்களின் வேண்டுகோளாக இருந்துவருகிறது. ஆனால், போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதே உண்மை. என்ன நடக்கிறது உக்ரைன் - ரஷ்யா போரில்? உக்ரைன் சென்ற பைடன்! கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென உக்ரைனுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்தார் பைடன். போலந்து தலைநகர் வார்சாவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ``ஒரு மாதமாகவே இது தொடர்பான திட்டமிடல் இருந்தாலும், மூன்று நாள்களுக்கு முன்புதான் பைடனின் உக்ரைன் பயணம் உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தகவல் வெளியே கசிந்துவிடாமல் ரகசியமாக வைத்திருந்தோம். பைடனுடன் சில பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள் மட்டுமே உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டனர். அவர் உக்ரைனுக்குச் செல்லும் தகவலை, சில மணி நேரங்களுக்கு முன்னரே ரஷ்யாவுக்குத் தெரிவித்தோம்'' என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. உக்ரைன் தலைநகர் கீவில், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜோ பைடன். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் குறித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஜெலன்ஸ்கியுடன் பைடன் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டன. இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ``இந்தப் போர் தொடங்கும்போது `உக்ரைன் பலவீனமாக இருக்கிறது; மேற்குலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன' என்றுதான் ரஷ்ய அதிபர் புதின் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் நினைத்தது இன்று பொய்யாகிவிட்டது'' என்று கூறியிருக்கிறார் பைடன். உக்கிரமான புதின்! அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணம் ரஷ்ய அதிபர் புதினைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பைடனின் வருகைக்கு முன்னதாகவே நாட்டு மக்களிடம் பேசிய புதின், ``ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனைப் பகடைக்காயாக மாற்றியிருக்கின்றன மேற்கத்திய நாடுகள். இந்தப் போருக்கு முழுப் பொறுப்பு மேற்கத்திய நாடுகள்தான். அவர்கள்தான் போரைத் தொடங்கினர். நாங்கள் போரை நிறுத்தவே எங்கள் பலத்தைப் பயன்படுத்துகிறோம்'' என்று மொத்தப் பழியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்மீது தூக்கிப்போட்டிருந்தார். புதின் இந்த நிலையில், ஜோ பைடனின் உக்ரைன் வருகை ரஷ்யாவைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. இதனால், இந்தப் போர் இன்னும் உக்கிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். `அமெரிக்காவுடனான New START அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறோம்' என்பதுதான் அந்த அதிரடி முடிவு. New START ஒப்பந்தம்! கடந்த 2010-ம் ஆண்டு, அணு ஆயுத இருப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், `நியூ ஸ்டார்ட்’ என்ற அணு ஆயுத ஒப்பந்தத்தை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலக அளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என நம்பப்பட்டது. இந்த ஒப்பந்தம், கடந்த 2021, பிப்ரவரி மாதத்தோடு காலாவதியானது. இதைப் புதுப்பிக்க அமெரிக்கா தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துவந்தது. ஆனால், உக்ரைன் போர் காரணமாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா மறுத்துவந்தது. இந்த நிலையில்தான், அந்த ஒப்பந்தத்திலிருந்து முழுவதுமாக வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. உக்ரைன் - ரஷ்யா ரஷ்யா - உக்ரைன் போர்... ராணி எலிசபெத் மறைவு... மஸ்க் சம்பவங்கள்... | `ரீவைண்ட்’ உலகம் 2022 இது தொடர்பாகப் பேசிய புதின், ``உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். ஆகையால், நாங்களும் இந்தப் போரைக் கைவிடுவதாக இல்லை. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுகிறது. ரஷ்யாவின் அணு ஆயுத பலத்தை ஐரோப்பிய நாடுகள் பறிக்க நினைக்கின்றன. இனிமேல் அமெரிக்கா அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், ரஷ்யாவும் சோதனை மேற்கொள்ளும்'' என்றிருக்கிறார். ``அமெரிக்க அதிபரின் உக்ரைன் வருகையும், ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பும், இந்தப் போர் கூடிய விரைவில் முடியாது என்பதையே உணர்த்துகின்றன. ஆனால், இந்தப் போர் விரைவில் முடிந்தால் மட்டுமே உலக நாடுகளுக்கு அது நன்மை பயக்கும்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
http://dlvr.it/Sk1Q3G

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...