Skip to main content

``சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது; அதிமுக பாதுகாப்பான கரங்களில் இல்லை!" - சசிகலா

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை உறுதி செய்தது. அதனால், அதிமுக முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றிருக்கிறது. இந்த நிலையில், சசிகலா `இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில் பேசிய சசிகலா, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், அவர் உயிரோடு இல்லை என தோன்றவில்லை. எப்போதும் என்னுடன் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும், தமிழக மக்களுடன், அ.தி.மு.க தொண்டர்களுடன் இருக்கிறார். எப்போதும் என்னுடன் இருப்பது போல்தான் உணர்கிறேன்.

ஜெயலலிதா, சசிகலா

உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்தவரையில், அது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையிலான பூசல்கள் பற்றியது. சிவில் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கும் அவர்களின் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது. அதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த முயற்சி செய்வோம். செப்டம்பர் 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் நீடிக்க அனுமதித்திருக்கிறது அவ்வளவுதான்.

அத்துடன் அ.தி.மு.க தற்போது பாதுகாப்பான கரங்களில் இல்லை. ஒரு கட்சிக்கு அதன் தொண்டர்களின் பலம்தான் முக்கியம். நூறு, இருநூறு பேர் கொண்ட குறிப்பிட்ட குழுவால் வழிநடத்த முடியாது. ஏழைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அனுபவிக்காவிட்டாலும், ஜெயலலிதா பொறுப்பேற்ற காலத்திலிருந்து அதனை புரிந்து கொண்டே செயலாற்றி வந்தார். நான் அவருடன் இருந்ததால் நானும் அதை வழியில் சென்றேன்.

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு - ஓபிஎஸ் - இபிஎஸ்

இப்போது செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஜெயலலிதாவும் நானும் பேசும்போதெல்லாம் நாங்கள் செய்த விஷயங்களையும், செய்ய வேண்டிய விஷயங்களையும் பற்றி விவாதிப்போம். அவர் விட்டுச் சென்ற விஷயங்களை முடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க முயல்கிறேன். தமிழக மக்களை காக்க வேண்டும் அது நிச்சயம் நடக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

News Source: (India Today)


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...