Skip to main content

``சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது; அதிமுக பாதுகாப்பான கரங்களில் இல்லை!" - சசிகலா

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை உறுதி செய்தது. அதனால், அதிமுக முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றிருக்கிறது. இந்த நிலையில், சசிகலா `இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில் பேசிய சசிகலா, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், அவர் உயிரோடு இல்லை என தோன்றவில்லை. எப்போதும் என்னுடன் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும், தமிழக மக்களுடன், அ.தி.மு.க தொண்டர்களுடன் இருக்கிறார். எப்போதும் என்னுடன் இருப்பது போல்தான் உணர்கிறேன்.

ஜெயலலிதா, சசிகலா

உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்தவரையில், அது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையிலான பூசல்கள் பற்றியது. சிவில் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கும் அவர்களின் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது. அதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த முயற்சி செய்வோம். செப்டம்பர் 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் நீடிக்க அனுமதித்திருக்கிறது அவ்வளவுதான்.

அத்துடன் அ.தி.மு.க தற்போது பாதுகாப்பான கரங்களில் இல்லை. ஒரு கட்சிக்கு அதன் தொண்டர்களின் பலம்தான் முக்கியம். நூறு, இருநூறு பேர் கொண்ட குறிப்பிட்ட குழுவால் வழிநடத்த முடியாது. ஏழைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அனுபவிக்காவிட்டாலும், ஜெயலலிதா பொறுப்பேற்ற காலத்திலிருந்து அதனை புரிந்து கொண்டே செயலாற்றி வந்தார். நான் அவருடன் இருந்ததால் நானும் அதை வழியில் சென்றேன்.

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு - ஓபிஎஸ் - இபிஎஸ்

இப்போது செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஜெயலலிதாவும் நானும் பேசும்போதெல்லாம் நாங்கள் செய்த விஷயங்களையும், செய்ய வேண்டிய விஷயங்களையும் பற்றி விவாதிப்போம். அவர் விட்டுச் சென்ற விஷயங்களை முடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க முயல்கிறேன். தமிழக மக்களை காக்க வேண்டும் அது நிச்சயம் நடக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

News Source: (India Today)


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...