Skip to main content

திருவாரூர்: நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பாட்டில் வீசிய திமுக-வினர்?! - போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசியதால் தி.மு.க.வினர் மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.கவினர் போராட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பது குறித்தும், தி.மு.க ஆட்சியையும் விமர்சனம் செய்தும் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.கவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது திருவாரூரிலும் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் கட்சியின் மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் தி.மு.க கட்சி அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானை புகழ்ந்தும் தி.மு.க ஆட்சி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து பேசினர். இதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இருதரப்புக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்தனர். அப்போது தி.மு.கவினர் நின்ற பகுதியிலிருந்து மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் உருவானது. நிலமையை சமாளிக்க மேலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த தி.மு.கவினரை போலீஸார் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தி.மு.கவினரை தடுக்கும் போலீஸ்

அப்போது சாலையில் அமர்ந்த தி.மு.கவினர், ``ஆட்சியை விமர்சனம் செய்து பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அழைத்து சென்றனர். அத்துடன் பாட்டில் வீசியது தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது. அப்போது கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பிற்கு நின்றனர். இதனால் சித்தமல்லி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பிற்கு ஏராளமான போலீஸர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...