Skip to main content

திருவாரூர்: நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பாட்டில் வீசிய திமுக-வினர்?! - போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசியதால் தி.மு.க.வினர் மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.கவினர் போராட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பது குறித்தும், தி.மு.க ஆட்சியையும் விமர்சனம் செய்தும் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.கவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது திருவாரூரிலும் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் கட்சியின் மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் தி.மு.க கட்சி அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானை புகழ்ந்தும் தி.மு.க ஆட்சி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து பேசினர். இதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இருதரப்புக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்தனர். அப்போது தி.மு.கவினர் நின்ற பகுதியிலிருந்து மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் உருவானது. நிலமையை சமாளிக்க மேலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த தி.மு.கவினரை போலீஸார் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தி.மு.கவினரை தடுக்கும் போலீஸ்

அப்போது சாலையில் அமர்ந்த தி.மு.கவினர், ``ஆட்சியை விமர்சனம் செய்து பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அழைத்து சென்றனர். அத்துடன் பாட்டில் வீசியது தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது. அப்போது கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பிற்கு நின்றனர். இதனால் சித்தமல்லி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பிற்கு ஏராளமான போலீஸர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...