Skip to main content

திருவாரூர்: நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பாட்டில் வீசிய திமுக-வினர்?! - போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசியதால் தி.மு.க.வினர் மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.கவினர் போராட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பது குறித்தும், தி.மு.க ஆட்சியையும் விமர்சனம் செய்தும் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.கவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது திருவாரூரிலும் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் கட்சியின் மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் தி.மு.க கட்சி அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானை புகழ்ந்தும் தி.மு.க ஆட்சி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து பேசினர். இதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இருதரப்புக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்தனர். அப்போது தி.மு.கவினர் நின்ற பகுதியிலிருந்து மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் உருவானது. நிலமையை சமாளிக்க மேலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த தி.மு.கவினரை போலீஸார் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தி.மு.கவினரை தடுக்கும் போலீஸ்

அப்போது சாலையில் அமர்ந்த தி.மு.கவினர், ``ஆட்சியை விமர்சனம் செய்து பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அழைத்து சென்றனர். அத்துடன் பாட்டில் வீசியது தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது. அப்போது கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பிற்கு நின்றனர். இதனால் சித்தமல்லி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பிற்கு ஏராளமான போலீஸர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...