Skip to main content

சைலன்ட்டான சென்னை சென்ட்ரல் - குரல் அறிவிப்புகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிக்கலா?

சென்னையின் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், “பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்று தொடங்கி ரயில் வண்டியின் விவரங்களைச் சொல்லும் அறிவிப்பு குரல்கள் இனி ஒலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் மட்டுமின்றி, விளம்பர ஒலிபரப்புகளையும் நிறுத்துவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் சோதனை முறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலி அறிவிப்புகளுக்குப் பதிலாக, வழிகாட்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும், விமான நிலையங்களில் இருப்பது போல, பெரிய திரையில் அறிவிப்புகளைக் காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே, வழிகாட்டு மையங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பால், மக்களைச் சமாளிக்க முடியாமல் மேலும் சில வழிகாட்டி மையங்களை அவசர அவசரமாக அதிகாரிகள் உருவாக்கினர். பல ஆண்டுகளாக ஒலிக்கப்பட்டு வந்த இந்த அறிவிப்புகள் நிறுத்தப்பட்டதால், பல பயணிகள் குழப்பத்துக்கு ஆளாக, இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது மாற்றுத்திறனாளிகள்தான் என்கின்றனர். 

DRA India (Disability Rights Alliance), "இந்தத் திட்டத்தை மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் கேட்காமல் முடிவு செய்ததிருக்கின்றனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைப்பிடம் இந்தத் திட்டம் கலந்தாலோசிக்கப்பட்டதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்துப் பேசிய டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர், பேராசிரியர் தீபக்நாதன், ”ஏற்கெனவே தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது மேலும் சிரமத்தைத்தான் அளித்துள்ளது. தென் இந்திய ரயில்வே, இதைச் சோதனை முறையில் இயக்கினாலுமே, இதை நிச்சயம் நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை.

அதிகாரிகள் சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி, ஒலிபெருக்கிகள் உண்டாக்கும் இரைச்சலைத் தடுத்து ‘சைலன்ட்-ஜோனாக’ பொது இடங்களை மாற்ற இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், காது கேளாதோருக்குச் சைகை மொழியில் அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் அறிவித்தாலும், பார்வையற்றோருக்கும், வரிசையில் காத்திருந்து வழிகாட்டி மையத்தை அணுகும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இது மிகுந்த சிரமத்தையே உண்டாக்கும். 

டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர், பேராசிரியர் தீபக்நாதன்

நாங்கள் எல்லா இடத்திலும் எல்லோரையும் உள்ளடக்கிய (Inclusive) தொடர்புமுறையை வலியுறுத்தி வருகிறோம். அதாவது விடியோ, ஆடியோ, சைகை மொழி, ப்ரெய்லி உட்பட அனைத்து விதமான தொடர்புமுறையையும் பொது இடங்களில் நிறுவ வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமில்லாமல், வயதானவர்கள், மொழி தெரியாதவர்கள் என எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய ஆடியோ அறிவிப்புகளைத் தென் இந்திய ரயில்வே அமைச்சகம் நீக்கியுள்ளது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது” என்றார். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...