Skip to main content

சைலன்ட்டான சென்னை சென்ட்ரல் - குரல் அறிவிப்புகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிக்கலா?

சென்னையின் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், “பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்று தொடங்கி ரயில் வண்டியின் விவரங்களைச் சொல்லும் அறிவிப்பு குரல்கள் இனி ஒலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் மட்டுமின்றி, விளம்பர ஒலிபரப்புகளையும் நிறுத்துவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் சோதனை முறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலி அறிவிப்புகளுக்குப் பதிலாக, வழிகாட்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும், விமான நிலையங்களில் இருப்பது போல, பெரிய திரையில் அறிவிப்புகளைக் காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே, வழிகாட்டு மையங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பால், மக்களைச் சமாளிக்க முடியாமல் மேலும் சில வழிகாட்டி மையங்களை அவசர அவசரமாக அதிகாரிகள் உருவாக்கினர். பல ஆண்டுகளாக ஒலிக்கப்பட்டு வந்த இந்த அறிவிப்புகள் நிறுத்தப்பட்டதால், பல பயணிகள் குழப்பத்துக்கு ஆளாக, இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது மாற்றுத்திறனாளிகள்தான் என்கின்றனர். 

DRA India (Disability Rights Alliance), "இந்தத் திட்டத்தை மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் கேட்காமல் முடிவு செய்ததிருக்கின்றனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைப்பிடம் இந்தத் திட்டம் கலந்தாலோசிக்கப்பட்டதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்துப் பேசிய டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர், பேராசிரியர் தீபக்நாதன், ”ஏற்கெனவே தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது மேலும் சிரமத்தைத்தான் அளித்துள்ளது. தென் இந்திய ரயில்வே, இதைச் சோதனை முறையில் இயக்கினாலுமே, இதை நிச்சயம் நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை.

அதிகாரிகள் சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி, ஒலிபெருக்கிகள் உண்டாக்கும் இரைச்சலைத் தடுத்து ‘சைலன்ட்-ஜோனாக’ பொது இடங்களை மாற்ற இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், காது கேளாதோருக்குச் சைகை மொழியில் அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் அறிவித்தாலும், பார்வையற்றோருக்கும், வரிசையில் காத்திருந்து வழிகாட்டி மையத்தை அணுகும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இது மிகுந்த சிரமத்தையே உண்டாக்கும். 

டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர், பேராசிரியர் தீபக்நாதன்

நாங்கள் எல்லா இடத்திலும் எல்லோரையும் உள்ளடக்கிய (Inclusive) தொடர்புமுறையை வலியுறுத்தி வருகிறோம். அதாவது விடியோ, ஆடியோ, சைகை மொழி, ப்ரெய்லி உட்பட அனைத்து விதமான தொடர்புமுறையையும் பொது இடங்களில் நிறுவ வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமில்லாமல், வயதானவர்கள், மொழி தெரியாதவர்கள் என எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய ஆடியோ அறிவிப்புகளைத் தென் இந்திய ரயில்வே அமைச்சகம் நீக்கியுள்ளது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது” என்றார். 


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...