Skip to main content

``எங்கள் உறவை முன்னெடுத்து செல்வோம்" - உத்தவ் தாக்கரேயை சந்தித்த பின் அர்விந்த் கெஜ்ரிவால்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இழந்து நிற்கிறார். சுப்ரீம் கோர்ட்டும் இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயை கைவிட்டுவிட்டது. இந்த நிலையில் தான், உத்தவ் தாக்கரேயை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மும்பை வந்து சந்தித்து பேசினார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா ஆகியோரும் வந்திருந்தனர். உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதில் உத்தவ், ஆதித்ய தாக்கரே ஆகிய இருவரையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அர்விந்த் கெஜ்ரிவால், ``தாக்கரேயின் கட்சி மற்றும் சின்னம் திருடப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் உத்தவ் தாக்கரே மிகப்பெரிய வெற்றி பெறுவார். மகாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரேயுடன் இருக்கிறார்கள். தாக்கரேயுடன் நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தோம். நீண்ட நாள்களாக உத்தவ் தாக்கரேயை சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் இந்த உறவை முன்னெடுத்துச்செல்வோம். உத்தவ் தாக்கரே பால் தாக்கரேயின் மகன். உத்தவ் தாக்கரேயிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாஜக கோழைத்தனமாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை மட்டும் பயன்படுத்துகிறது. பாஜக மட்டும்தான் 24 மணி நேரமும் தேர்தலை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் விவசாயிகள், நாடு பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எங்களைக்கண்டு பயப்படுகிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

`வரும் சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி வைத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டதற்கு, `தேர்தல் வரும் போது சொல்கிறேன். நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். எங்களது இந்த உறவை முன்னெடுத்துச்செல்வோம்.’ என்றார்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...