Skip to main content

``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. உக்ரைன், நேட்டோவில் சேர முடிவெடுத்தால் வந்த போரால், அமெரிக்கா இன்றும் தனது நிலையான ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. கடந்த வாரம், உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பைடன், 500 மில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதற்கடுத்த நாளே, ``உக்ரைனில் நடக்கும் அனைத்துக்கும் மேற்கத்திய நாடுகளே பொறுப்பு, சரியான வழியில் பதிலளிப்போம்" என புதின் கூறியிருந்தார்.ஜெலன்ஸ்கி - பைடன் - புதின் அதேசமயம், ரஷ்யாவுக்குச் சீனா தனது உச்சக்கட்ட ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நேட்டோ கூறியிருந்தது. ஆனால் சீனாவோ, ``எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சீன அதிபரைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். போரின் ஓராண்டு நிறைவையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவுக்குச் சீனா ஆயுதங்கள் வழங்காது என்று நான் நம்புகிறேன். என்னைப்பொறுத்தமட்டில், இது மிகவும் முக்கியமானது. அதோடு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். இது நமக்கும், உலகின் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஜெலன்ஸ்கி சீனாவுடன் எங்களுக்குப் பெரியளவில் வர்த்தகம் உள்ளது. சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. உக்ரைனைப் பற்றி சீனா பேச ஆரம்பித்திருப்பது தவறானதல்ல என்று நினைக்கிறேன். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின் என்ன இருக்கிறது, அதை அவர்கள் எங்கு கொண்டுசெல்வார்கள் என்பதுதான் கேள்வி" என்றார்.`ஓராண்டைக் கடந்தும் ஓயாத உக்ரைன் - ரஷ்யப் போர்!' - தொடக்கம் முதல் தற்போதுவரை | விரிவான அலசல்!
http://dlvr.it/SjzDPR

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...