Skip to main content

``முட்டை விலையில் குளறுபடி" இரவு முழுவதும் போராட்டம் செய்த கோழிப் பண்ணையாளர்கள்... காரணம் என்ன?

முட்டை விலையை தொடர்ந்து குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மண்டல அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு, அகில இந்திய அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) மண்டல வாரியாக செயல்பட்டு வருகிறது. கோழிப் பண்ணையாளர்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டைஒருங்கிணைப்புக் குழுவிற்கு (என்இசிசி), நாடு முழுவதும் மொத்தம் 23 இடங்களில் மண்டல அலுவலங்கள் உள்ளன. இவற்றில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. இதில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் வாரந்தோறும் திங்கள், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் முட்டையின் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும்.

கடந்த மாதம் அதிகபட்சமாக முட்டை விலை ரூ.5.65 க்கு விற்பனையானது. அடுத்த சில வாரங்களில் முட்டை விலை சரியத் தொடங்கி ரூ.1.25 காசுகள் குறைந்தது. இப்போது ஒரு முட்டையின் விலை ரூ.4.40-ஆக விற்பனையாகிறது.

இரவு என்இசிசி அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள்

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில்,

``என்இசிசி அறிவிக்கும் முட்டை விலையில் இருந்து 50 காசுகள் குறைவாக வைத்தே, கோழிப்பண்ணையாளர்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதே சமயம், என்இசிசி அறிவித்த விலையை விட, கடைகளில் கூடுதலாக 50 பைசா உயர்த்தி விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளுக்கான முட்டை மைனஸ் விலையை நிர்ணயிப்பதற்கு நெஸ்பேக் என்ற கூட்டமைப்பு உள்ளது.

சில சமயங்களில் நெஸ்பேக் அறிவிக்கும் விலையைவிட குறைந்த விலைக்கு முட்டைகளை கொள்முதல் செய்கின்றனர்.இப்படி முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

மேலும் முட்டைக்கான உற்பத்தி செலவு ரூ.4.25 காசுகளாகிறது. முட்டை விலை குறையும்போதும், வியாபாரிகள் நெருக்கடியாலும், மேலும் 40 காசுகளை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இதனால் வங்கியில் வாங்கிய கடனையும் செலுத்த முடிவதில்லை, கோழிகளுக்கான தீவனங்களும் வாங்க முடியாமல் சிறிய பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, முட்டை விலையை தங்கள் இஷ்டத்திற்கு நிர்ணயம் செய்வதுடன், கோழிப் பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இரவு என்இசிசி அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள்

இந்நிலையில், 50- க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள்  என்.இ.சி.சி மண்டல தலைவர் மற்றும் விலை நிர்ணய குழு உறுப்பினர்களை சந்தித்து முறையிட, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு என்இசிசி மண்டல தலைவர் டாக்டர். செல்வராஜ் மற்றும் விலை நிர்ணயக் குழு உறுப்பினர்கள் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை, மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் மட்டும் இருந்தனர். இதனால் அலுவலத்திலே உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நீண்ட நேரம் ஆகியும் வராததால், என்இசிசி அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து பண்ணையாளர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இரண்டாவது நாளாகவும் தங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர். தற்போது, என்இசிசி மண்டல அலுவலர்கள் தர்ணா போராட்டடம் செய்யும் கோழிப் பண்ணையாளர்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...