Skip to main content

அதானி தொடர் பங்கு வெளியீடு: அதிக முதலீடு செய்ய முன்வந்த அபுதாபி நிறுவனம்... பின்னணி என்ன?

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு  வெளியீடு (FPO) ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் அந்தப் பங்கிற்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு அந்த எஃப்.பி.ஓ பணத்தை திருப்பி அளித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய முன்வந்த அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட ஐஹெச்சி  (International Holding Company)  அபுதாபி நிறுவனம் தாம் முதலீடு செய்ய விண்ணப்பித்த தொகை மீண்டும் தமது வங்கிக் கணக்கிற்கு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

அதானி போர்ட்ஸ்

ஐஹெச்சி நிறுவனம் அமரீக (Emirates)  அரசர் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது, அந்த நாட்டிலுள்ள ஐந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். 2019 -ம் ஆண்டு வரை 130 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்துகளை வைத்திருந்த இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 20 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.  தற்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 872 பில்லியன் அமரீக திர்காம் ஆக உள்ளது. இது அமரீக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

 விவசாயம், ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக சென்ற ஆண்டு இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு அதானி குழுமத்தில் முதலீடு செய்தது. அதானி குழுமத்தை சார்ந்த அதானி கிரீன்,  அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களில் அந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் அதானி நிறுவன பங்குகள் பத்து மடங்கிற்கு மேல் லாபம் அளித்துள்ளதால் அந்த நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை தனது முதல் முதலீட்டில் அடைந்துள்ளது.

அதானி குழுமம்

இதன் தொடர்ச்சியாக அதானி என்டர்ப்ரைசஸ் எஃப்.பி.ஓ வெளியீடு மூலம் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்த போது மிக அதிக அளவில் 400 மில்லியன் டாலர் அளவிற்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தது. 20,000 கோடி ரூபாய் வேண்டி திரட்டப்பட்ட மூலதனத்தில் இந்த நிறுவனம் மட்டும் 16% பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியிட்டுக்கு மிக அதிக தொகையை முதலீடு செய்த முன்வந்த நிறுவனமாக ஐஹெச்சி திகழ்கிறது.

 ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை காரணமாக தொடர் பங்கு வெளியீடு தோல்வி அடையும் என்ற பயத்திற்கு மத்தியிலும் ஐஹெச்சி நிறுவனம் தனது முதலீட்டு முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. பெருமுதலீட்டாளர்கள் பிரிவில் மீண்டும் அதிக தொகை முதலீடு செய்ய இருப்பதாக கூறி அனைவரையும் வியக்க வைத்தது. 

கௌதம் அதானி

இது பற்றி முன்பு கருத்து தெரிவித்த அந்த நிறுவனம் தமக்கு அதானி நிறுவனங்களின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், அதானி நிறுவனங்களின் நிதி நிலைமை மிகவும் வலிமையான நிலையில் இருப்பதால் மேலும் முதலீடு செய்ய முன் வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஐஹெச்சி மட்டுமன்றி இந்திய பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி), சுனில் மெட்டல் (Airtel), சஜன் ஜிந்தல் (JSW Energy) போன்ற நமது நாட்டின் பெரும் பணக்காரர்களும் இந்த நிறுவனத்தின்  தொடர் பங்கு வெளியீட்டிருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்றாலும் அந்த நிறுவனத்தின் மறுபங்கு மூலதன ஆய்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவருக்கும் பணம் திரும்ப அளிக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...