Skip to main content

அதானி தொடர் பங்கு வெளியீடு: அதிக முதலீடு செய்ய முன்வந்த அபுதாபி நிறுவனம்... பின்னணி என்ன?

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு  வெளியீடு (FPO) ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் அந்தப் பங்கிற்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு அந்த எஃப்.பி.ஓ பணத்தை திருப்பி அளித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய முன்வந்த அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட ஐஹெச்சி  (International Holding Company)  அபுதாபி நிறுவனம் தாம் முதலீடு செய்ய விண்ணப்பித்த தொகை மீண்டும் தமது வங்கிக் கணக்கிற்கு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

அதானி போர்ட்ஸ்

ஐஹெச்சி நிறுவனம் அமரீக (Emirates)  அரசர் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது, அந்த நாட்டிலுள்ள ஐந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். 2019 -ம் ஆண்டு வரை 130 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்துகளை வைத்திருந்த இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 20 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.  தற்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 872 பில்லியன் அமரீக திர்காம் ஆக உள்ளது. இது அமரீக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

 விவசாயம், ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக சென்ற ஆண்டு இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு அதானி குழுமத்தில் முதலீடு செய்தது. அதானி குழுமத்தை சார்ந்த அதானி கிரீன்,  அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களில் அந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் அதானி நிறுவன பங்குகள் பத்து மடங்கிற்கு மேல் லாபம் அளித்துள்ளதால் அந்த நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை தனது முதல் முதலீட்டில் அடைந்துள்ளது.

அதானி குழுமம்

இதன் தொடர்ச்சியாக அதானி என்டர்ப்ரைசஸ் எஃப்.பி.ஓ வெளியீடு மூலம் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்த போது மிக அதிக அளவில் 400 மில்லியன் டாலர் அளவிற்கு பங்குகள் வேண்டி விண்ணப்பித்தது. 20,000 கோடி ரூபாய் வேண்டி திரட்டப்பட்ட மூலதனத்தில் இந்த நிறுவனம் மட்டும் 16% பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியிட்டுக்கு மிக அதிக தொகையை முதலீடு செய்த முன்வந்த நிறுவனமாக ஐஹெச்சி திகழ்கிறது.

 ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை காரணமாக தொடர் பங்கு வெளியீடு தோல்வி அடையும் என்ற பயத்திற்கு மத்தியிலும் ஐஹெச்சி நிறுவனம் தனது முதலீட்டு முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. பெருமுதலீட்டாளர்கள் பிரிவில் மீண்டும் அதிக தொகை முதலீடு செய்ய இருப்பதாக கூறி அனைவரையும் வியக்க வைத்தது. 

கௌதம் அதானி

இது பற்றி முன்பு கருத்து தெரிவித்த அந்த நிறுவனம் தமக்கு அதானி நிறுவனங்களின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், அதானி நிறுவனங்களின் நிதி நிலைமை மிகவும் வலிமையான நிலையில் இருப்பதால் மேலும் முதலீடு செய்ய முன் வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஐஹெச்சி மட்டுமன்றி இந்திய பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி), சுனில் மெட்டல் (Airtel), சஜன் ஜிந்தல் (JSW Energy) போன்ற நமது நாட்டின் பெரும் பணக்காரர்களும் இந்த நிறுவனத்தின்  தொடர் பங்கு வெளியீட்டிருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்றாலும் அந்த நிறுவனத்தின் மறுபங்கு மூலதன ஆய்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவருக்கும் பணம் திரும்ப அளிக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...