Skip to main content

நோய் அறிகுறிகளை உணர்த்தும் வாய்...| வாய் சுகாதாரம் - 8

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார்.

கடந்த வாரம், பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் முறைகள் குறித்து பார்த்தோம். இந்த வாரம், உடலில் நோய் இருப்பின், அதன் அறிகுறிகளை வாய் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா

வாய் சுகாதாரம் தொடரின் முதலாவது வாரத்தில் கூறியதை, நான் மீண்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வாய் என்பது பற்களோடு சேர்ந்து நாக்கு, உதடு, கன்னத்தின் உள் சதைப்பகுதி, அணணம் மற்றும் ஈறு போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.

அது போலவே நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகள், அமைப்புகளில் ஏதேனும் நோயோ அல்லது செயலிழக்கும் தன்மையோ ஏற்படும்போது, அது கட்டாயம் வாயில் பிரதிபலிக்கும். அதனால்தான் மிக நுட்பமாக `வாய் நம் உடலின் நிலையைக் காட்டும் கண்ணாடி' என்று கூறுகிறோம்.

என்ன நோய்... எத்தகைய அறிகுறி?

உதாரணத்திற்கு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் பற்களைச் சுற்றி உள்ள ஈறுகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஏனென்றால் கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வாய் சுகாதாரம் (Oral hygiene) நன்றாக இல்லையென்றால் ஈறுகள் பலவீனமடைந்து பற்கள் ஆட்டம் காணும் ஆபத்து உண்டு.

ஆகையால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு அதோடு பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பற்கள் ஆடி, விழுவதைத் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பு | வாய் சுகாதாரம்

அதுபோல், வைட்டமின் சத்து மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, ரத்தச்சோகை ( Anemia) உள்ளவர்களுக்கு வாயில் சில பாதிப்புகள் ஏற்படும். அதை வைத்தே அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் என்று ஊகித்துவிடலாம். உதடுகளின் ஓரங்களில் காய்ந்து வெடிப்புகள் போல காட்சியளிக்கும். அதோடு நாக்கின் மேல் பகுதி வழவழப்பாக இருக்கும்.

வைட்டமின் பி12 குறைபாட்டால் நாக்கில் ஒருவித எரிச்சல் தன்மை இருக்கும். வாய் முழுவதுமே நமநமப்பு போல உணர்வு இருக்கும். வைட்டமின் சி குறைபாடு இருப்பவர்களுக்கு ஈறுகளில் ரத்தக்கசிவும் பல் ஆட்டமும் இருக்கும். சத்துக் குறைபாட்டை சரி செய்தாலே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ரத்தப்புற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கும்

அடுத்ததாக, வயிற்றில் புண் மற்றும் அல்சர் பிரச்னைகள் இருந்தால், கன்னத்தின் உள்சதை பகுதியில் ஓரளவுக்கு பெரியதாகப் பார்க்க முடியும். அது போல ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் மற்றும் வயிற்றில் அல்சர் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

சில நோயாளிகள் வருடக்கணக்கில் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்வர். அதன் பக்கவிளைவுகளாக ஈறுகள் பாதிக்கப்படும். மருத்துவரிடம் காண்பித்து வேறு மாத்திரைகளை உட்கொள்ளலாம். அதற்காக வலிப்புநோய் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது.

ரத்தப் புற்று நோயின் வெளிப்பாடு | வாய் சுகாதாரம்

ரத்தப் புற்றுநோய் இருக்கும் நோயாளிகளுக்கு ஈறுகளில் இருந்து அசாதாரணமாக ரத்தப்போக்கு இருக்கும். இப்பகுதி மிகுந்த வீக்கத்தோடு காணப்படும். கர்ப்ப காலத்திலும் வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்தாவிட்டால், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதைக் காணலாம். வீக்கமும் இருக்கும்.

வாயைச் சுத்தமாக வைத்திருந்தால் இந்தப் பிரச்னை வராது. மஞ்சள் காமாலை நோய் அறிகுறி இருப்பின் நாக்கு, நகக்கண்கள் மற்றும் கண்களின் வெள்ளைப்பகுதி ஆகியவை மஞ்சளாகக் காணப்படும். இதுவும் வாயில் இருக்கும் நோயின் வெளிப்பாடுதான்.

சரும நோய்கள் பாதிக்கும்போது, வாய்ப் பகுதியிலும் பாதிப்பு ஏற்படும். எடுத்துக்காட்டாக Lichen planus என்னும் சரும நோய், சரும பாதிப்பை ஏற்படுத்துவதோடு வாயிலும் அதன் விளைவுகளைக் காட்டும்.

வாயில் எரிச்சல், சிவந்து போதல் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வெளிப்பாடுகள் தெரியலாம். மன அழுத்தத்தினால் பல நோய்கள் வாயில் ஏற்படலாம். இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிகக்குறைவாகவே இருக்கிறது.

வாயில் தோன்றும் சரும நோயின் வெளிப்பாடு

வாய் சுகாதாரம் மிக முக்கியம்!

நிறைவாக, ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு Candidiasis என்ற பூஞ்சை நோய் பெரும்பாலும் வாயில் நாக்கு மற்றும் அண்ணம் இவ்விரண்டு பகுதிகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். சில நேரங்களில் உடலில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாமல் வாயில் மட்டுமே அந்த நோயின் அறிகுறி தெரியலாம். அந்த நேரத்தில் பல் மருத்துவரின் அறிவுரையின் பேரில் பொது மருத்துவரைச் சந்திப்பது மிக அவசியமானது.

நான் நிறைவாகக் குறிப்பிட விரும்புவது, வாயின் ஆரோக்கியமும் உடலின் நலனும் ஒன்றோடொன்று அறிவியல்பூர்வமாகவே இணைந்தவை. சீரிய இடைவெளியில் பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் பல் நோயிலிருந்து மட்டும் இல்லாமல் உடலின் மற்ற முக்கியமான பிரச்னைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றுப்புண்ணினால் ஏற்படும் பாதிப்பு

தொடக்க நிலையிலேயே மற்ற ஆபத்தான நோய்களைக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ள உதவும்.

பலமுறை நீங்கள் கேட்டு அலுத்துப் போயிருந்தாலும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்... `நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...