Skip to main content

Sports RoundUp: முரளி விஜய் எடுத்த திடீர் முடிவு முதல் சச்சின் முன்னிலையில் பாராட்டு வரை!

18 ஆண்டுகால கனவு நிறைவேறியது:

2005-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து இந்திய அணி ரன்னர் அப் ஆகியிருந்தது. அந்த அணியில் நூஸின் அல் காதீரும் ஒருவர். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு அப்போது நிறைவேறாமல் போனது. இப்போது அதே தென்னாப்பிரிக்காவில் இந்திய U19 அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் நூஸின் அல் காதீர்தான். இந்த வெற்றியின் மூலம் தனது 18 ஆண்டுக் கால கனவை நினைவாக்கியுள்ளார் நூஸின்.

ஒலிம்பிக் நாயகன் விலகல்:

உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரீட், 2019ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் பயிற்சியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் அணியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார் ரீட்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் முன்னிலையில் பாராட்டு விழா!

U 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணிக்குப் பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் நடக்கும் இவ்விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ தகவல்.

ஓய்வுபெறும் முரளி விஜய்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இருக்கும் பதிய வாய்ப்புகளையும், அதன் வணிக பக்கத்தையும் ஆராய உள்ளதாகக் கூறியுள்ளார். இவர் இறுதியாக இந்திய அணிக்காக 2018 டிசம்பரில் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய்

தொடங்கியது கேலோ:

27 விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டுள்ள கேலோ இந்தியா யூத் கேம்ஸ் கோலாகலமாகத் துவங்கியது. ஜனவரி 30 -ல் தொடங்கி, பிப்ரவரி 11 வரை, 13 நாட்கள் நடக்கும் இந்த போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர் துவக்கிவைத்தனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...