Skip to main content

Sports Round Up: ஜடேஜாவின் அதிரடி முதல் ரொனால்டோவின் தோல்வி வரை!

சேப்பாக்கத்தில் தூள் கிளப்பிய ஜடேஜா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், தமிழ்நாடு அணியும் சவுராஷ்டிரா அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி, தமிழ் நாடு அணியை 133 ரன்களில் சுருட்டியது.

ஜடேஜா

இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விடுமுறை தினம் என்பதால் மைதானத்திலும் அதிகப்படியான ரசிகர்கள் கூடி ஜடேஜாவுக்காக்ந் ஆரவாரம் செய்திருந்தனர்.

கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு!

ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும்  விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தினை புகைப்படம் எடுக்க, திருமணத்திற்கு சென்ற பட்டு வேட்டி சட்டையுடன் V.V. சுப்ரமணியம் என்ற புகைப்படக்காரர் வந்திருந்தார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பருடைய மகனின் திருமணத்திலிருந்து உப்பல் மைதானத்திற்கு ரஞ்சி போட்டிக்காக வருகிறேன். வித்தியாசமான அனுபவமாக உள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.

ஏமாற்றமளித்த சானியா மிர்சா!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - சானியா மிர்சா இணை 6-7, 2-6 என்ற செட் கணக்கில், பிரேசிலின் ஸ்டெஃபனி - மாட்டோஸ் இணையிடம் வீழ்ந்தது. இதுவே சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.

சானியா மிர்சா

போட்டிக்கு பின்னர் பேசிய சானியா மிர்சா, 'என்னுடைய விளையாட்டு கரியர் மெல்போர்னில் தான் தொடங்கியது. எனது கிராண்ட்ஸ்லாம் கரியரை நிறைவு செய்ய, இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை.' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

சவுதி கோப்பையைத் தவறவிட்ட ரொனால்டோ.!

நேற்று சவுதி சூப்பர் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸீர் அணியும் அல் இட்டிஹாட் அணியும் ரியாத் மைதானத்தில் மோதின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அல் இட்டிஹாட் அணி வெற்றி பெற்றது. FIFA உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுக்கல் அணி வெளியறியதை தொடர்ந்து, இந்த சவுதி சூப்பர் கோப்பையிலும் ரொனால்டோவின் அணி சாதிக்காமல் வெளியேறியுள்ளது. 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...