Skip to main content

Sports Round Up: ஜடேஜாவின் அதிரடி முதல் ரொனால்டோவின் தோல்வி வரை!

சேப்பாக்கத்தில் தூள் கிளப்பிய ஜடேஜா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், தமிழ்நாடு அணியும் சவுராஷ்டிரா அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி, தமிழ் நாடு அணியை 133 ரன்களில் சுருட்டியது.

ஜடேஜா

இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விடுமுறை தினம் என்பதால் மைதானத்திலும் அதிகப்படியான ரசிகர்கள் கூடி ஜடேஜாவுக்காக்ந் ஆரவாரம் செய்திருந்தனர்.

கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு!

ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும்  விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தினை புகைப்படம் எடுக்க, திருமணத்திற்கு சென்ற பட்டு வேட்டி சட்டையுடன் V.V. சுப்ரமணியம் என்ற புகைப்படக்காரர் வந்திருந்தார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பருடைய மகனின் திருமணத்திலிருந்து உப்பல் மைதானத்திற்கு ரஞ்சி போட்டிக்காக வருகிறேன். வித்தியாசமான அனுபவமாக உள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.

ஏமாற்றமளித்த சானியா மிர்சா!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - சானியா மிர்சா இணை 6-7, 2-6 என்ற செட் கணக்கில், பிரேசிலின் ஸ்டெஃபனி - மாட்டோஸ் இணையிடம் வீழ்ந்தது. இதுவே சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.

சானியா மிர்சா

போட்டிக்கு பின்னர் பேசிய சானியா மிர்சா, 'என்னுடைய விளையாட்டு கரியர் மெல்போர்னில் தான் தொடங்கியது. எனது கிராண்ட்ஸ்லாம் கரியரை நிறைவு செய்ய, இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை.' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

சவுதி கோப்பையைத் தவறவிட்ட ரொனால்டோ.!

நேற்று சவுதி சூப்பர் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸீர் அணியும் அல் இட்டிஹாட் அணியும் ரியாத் மைதானத்தில் மோதின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அல் இட்டிஹாட் அணி வெற்றி பெற்றது. FIFA உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுக்கல் அணி வெளியறியதை தொடர்ந்து, இந்த சவுதி சூப்பர் கோப்பையிலும் ரொனால்டோவின் அணி சாதிக்காமல் வெளியேறியுள்ளது. 


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...