Skip to main content

Doctor Vikatan: மெனோபாஸ் அவதிகளை டயட் மூலம் சமாளிக்க முடியுமா?

Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு மாற்றம்தான். சினைப்பையானது தான் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வரும். இது பெரிமெனோபாஸ் பருவம் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய நாள்களிலேயே ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பானது முழுமையாக நின்று, பீரியட்ஸும் முற்றுப்பெறும். இதைத்தான் நாம் மெனோபாஸ் என்கிறோம்.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் எலும்புகளின் அடர்த்தியும் குறையும். கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். எதுவுமே சாப்பிடாவிட்டாலும் எளிதில் எடை கூடும். அதேபோல மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இதய நோய் பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

மெனோபாஸ் வந்தவர்களுக்கு கொழுப்பு குறைவான தாவர உணவுகள் ஏற்றவை. கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், யோகர்ட் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் டி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்றவையும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். தூக்கத்துக்கும் உதவும்.

இந்தப் பருவத்தில் ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியம். கொழுப்பு என்றாலே ஆபத்தானது என நினைக்க வேண்டாம். மீன்கள், சியா சீட்ஸ், ஆளி விதை, வால்நட்ஸ், சோயா போன்றவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மெனோபாஸ் பருவத்தில் ஏற்படும் வியர்வை, உடல் சூடாவது போன்றவற்றைக் குறைக்கும்.

மெனோபாஸ்

பாலிஷ் செய்யாத தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை எடுப்பதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும். வைட்டமின் பி சத்தும் கிடைக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறையும்.

காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து மட்டுமன்றி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் என்பதால் அவையும் இந்தப் பருவத்தில் அவசியம். நெல்லிக்காய், கறுப்பு திராட்சை, நாவல் பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை உடல் சூடாவதைக் குறைக்கும். காய்கறிகளில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரொக்கோலி போன்றவை சிறந்தவை. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.

பைட்டோஈஸ்டரோஜென் அதிகமுள்ள சோயா பீன்ஸ், வேர்க்கடலை, ஆளி விதை, க்ரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம், ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் ஏற்படும் அவதிகளை ஓரளவு குறைக்க முடியும்.

அடுத்தது உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுக்கப்பட வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவர், தினமும் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன், பால் உணவுகளில் புரதச்சத்து கிடைக்கும். இரண்டு கைப்பிடி அளவு காய்கறிகளும் ஒரு கைப்பிடி அளவு பழங்கள் மற்றும் தானியங்களும் போதும். அசைவ உணவுகளை உள்ளங்கை அளவுக்கு மட்டுமே எடுக்க வேண்டும்.

சிறுதானிய உணவு!

சீஸ் என்றால் இரண்டு விரல் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் எடுக்கும்போது கட்டைவிரலில் பாதி அளவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை சேர்த்த, அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பேக்கரி உணவுகள் வேண்டாம். ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். காபி அளவு குறைக்கப்பட வேண்டும். இவற்றுடன் தினமும் சிறிது நேரம் வெயில் படும்படி இருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவையும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...