Skip to main content

Doctor Vikatan: மெனோபாஸ் அவதிகளை டயட் மூலம் சமாளிக்க முடியுமா?

Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு மாற்றம்தான். சினைப்பையானது தான் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வரும். இது பெரிமெனோபாஸ் பருவம் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய நாள்களிலேயே ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பானது முழுமையாக நின்று, பீரியட்ஸும் முற்றுப்பெறும். இதைத்தான் நாம் மெனோபாஸ் என்கிறோம்.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் எலும்புகளின் அடர்த்தியும் குறையும். கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். எதுவுமே சாப்பிடாவிட்டாலும் எளிதில் எடை கூடும். அதேபோல மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இதய நோய் பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

மெனோபாஸ் வந்தவர்களுக்கு கொழுப்பு குறைவான தாவர உணவுகள் ஏற்றவை. கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், யோகர்ட் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் டி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்றவையும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். தூக்கத்துக்கும் உதவும்.

இந்தப் பருவத்தில் ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியம். கொழுப்பு என்றாலே ஆபத்தானது என நினைக்க வேண்டாம். மீன்கள், சியா சீட்ஸ், ஆளி விதை, வால்நட்ஸ், சோயா போன்றவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மெனோபாஸ் பருவத்தில் ஏற்படும் வியர்வை, உடல் சூடாவது போன்றவற்றைக் குறைக்கும்.

மெனோபாஸ்

பாலிஷ் செய்யாத தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை எடுப்பதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும். வைட்டமின் பி சத்தும் கிடைக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறையும்.

காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து மட்டுமன்றி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் என்பதால் அவையும் இந்தப் பருவத்தில் அவசியம். நெல்லிக்காய், கறுப்பு திராட்சை, நாவல் பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை உடல் சூடாவதைக் குறைக்கும். காய்கறிகளில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரொக்கோலி போன்றவை சிறந்தவை. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.

பைட்டோஈஸ்டரோஜென் அதிகமுள்ள சோயா பீன்ஸ், வேர்க்கடலை, ஆளி விதை, க்ரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம், ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் ஏற்படும் அவதிகளை ஓரளவு குறைக்க முடியும்.

அடுத்தது உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுக்கப்பட வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவர், தினமும் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன், பால் உணவுகளில் புரதச்சத்து கிடைக்கும். இரண்டு கைப்பிடி அளவு காய்கறிகளும் ஒரு கைப்பிடி அளவு பழங்கள் மற்றும் தானியங்களும் போதும். அசைவ உணவுகளை உள்ளங்கை அளவுக்கு மட்டுமே எடுக்க வேண்டும்.

சிறுதானிய உணவு!

சீஸ் என்றால் இரண்டு விரல் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் எடுக்கும்போது கட்டைவிரலில் பாதி அளவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை சேர்த்த, அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பேக்கரி உணவுகள் வேண்டாம். ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். காபி அளவு குறைக்கப்பட வேண்டும். இவற்றுடன் தினமும் சிறிது நேரம் வெயில் படும்படி இருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவையும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...