Skip to main content

மீண்டும் தலைதூக்கும் `துப்பாக்கி கலாசாரம்' - அமெரிக்காவில் நடப்பது என்ன?!

11 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலிருக்கும் மாண்ட்ரே பார்க் நகரின் கார்வே அவென்யூ பகுதியில் கடந்த 21-ம் தேதி இரவு சீன புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இங்கு சீன வம்சாவளியினருக்குச் சொந்தமாக நடன விடுதி ஒன்று இருக்கிறது. இதில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிநவீன துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா

மேலும் பலர் படுகாயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி, (21-ம் தேதி) சனிக்கிழமை இரவு 10:20 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் ஆசிய-அமெரிக்க சமூகத்தின் மையமான இந்தப் பகுதியில் வன்முறை நடந்தது, இனரீதியாக தூண்டப்பட்டிருக்கலாம் என்ற கவலையை ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. இதையடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சந்தேகப்படும் வகையில் நின்ற வேன்

இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட காவல் அதிகாரிகள், "மர்ம நபர் பொதுமக்கள்மீது கண் மூடித்தனமாகச் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் சந்தேகப்படும் வகையில் வேன் ஒன்று நின்றது. அந்த வேனை சுற்றி வளைத்து நெருங்கியபோது, அந்த வேனிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.

வேனை திறந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் இறந்துகிடந்தார். அவர் 72 வயதான ஹூ கேன் டிரான் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர்தான் கார்வே அவென்யூவில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

185 துப்பாக்கிச்சூடுகள் பதிவு

இந்தச் சம்பவம்தான், இந்தப் பகுதியில் இதுவரை நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடு எனக் கூறப்படுகிறது. கடந்த 1984-ல் சான் டியாகோவிலுள்ள 'மெக்டொனால்டு' உணவகத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது கலிஃபோர்னியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மிகப்பெரிய உயிரிழப்பாகும்.

துப்பாக்கிச்சூடு

கடந்த 2015-ம் ஆண்டில், சான் பெர்னார்டினோவில், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களால் ஈர்க்கப்பட்ட தீவிரவாத தம்பதியால், 14 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பல மணி நேரம் கழித்து அவர்கள் கொல்லப்பட்டனர். 1966-2022-க்கு இடையில் 185 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியிருக்கின்றன" என்றனர்.

48 மணி நேரத்துக்குள்

கடந்தாண்டும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், இதே பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் முடிந்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் கடலோர வடக்கு கலிஃபோர்னியா நகரமான 'ஹாஃப் மூன் பே'-வில் இருக்கும் காளான் பண்ணையில் கடந்த 23-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலிருக்கும் லாரி போக்குவரத்துச் சேவை நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கி

காரில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

இது தொடர்பாக சன்னி ஸாவோ (67) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரின் காரில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஏற்கெனவே சம்பந்தப்பட்ட இடத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி வன்முறைக் காப்பகத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் 21 நாள்களில் அமெரிக்காவில் 39 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட வெகுஜன துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `வெகுஜன துப்பாக்கிச்சூடு' என்பதற்கு அமெரிக்கா ஒரு வரையறையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறைக் காப்பகம் ஒரு வெகுஜன துப்பாக்கிச்சூட்டை நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த/கொல்லப்பட்ட சம்பவமாக வரையறுக்கிறது.

100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள்

துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீடுகளிலும், பொது இடங்களிலும் நடக்கும் துப்பாக்கிச்சூடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் கொலைகளைவிட கணிசமாக பெரிய விகிதமாகும். ஸ்விட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முன்னணி தனியார் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள தனியார் கைகளில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில், 390 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடுகிறது. அமெரிக்காவில் 100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள் என்ற விகிதம் மற்ற நாடுகளைவிட அதிகமாக இருக்கிறது.

கடந்த பல வருடங்களாக துப்பாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிப்ரவரியில் 'அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' நடத்திய ஓர் ஆய்வில், ஜனவரி 2019 - ஏப்ரல் 2021-க்கு இடையில் 7.5 மில்லியன் அமெரிக்க வயது வந்தோர் புதிய துப்பாக்கி உரிமையாளர்களாக மாறியிருக்கின்றனர். இதையொட்டி, 5 மில்லியன் குழந்தைகள் உட்பட 11 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் துப்பாக்கியால் தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில் புதிய துப்பாக்கி உரிமையாளர்களில் பாதி பேர் பெண்கள் ஆவர்.

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

பொதுமக்களிடம் கருத்து கேட்பு

எனவே இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, 57% அமெரிக்கர்கள் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை விரும்புவதாகவும், 32% பேர் தாங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். 10% பேர் சட்டங்கள் குறைவாகக் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக கடுமையான சட்டங்களை இயற்றுவதில் கட்சிகளுக்கு இடையேயும் முரண்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், "கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய ஒருமனதாக இருக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 91% கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மறுபுறம் இதை 24% குடியரசுக் கட்சியினரும், 45% சுயேச்சையினரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்கள் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையை தடைசெய்ய அல்லது கண்டிப்பாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றன. சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஆனால் கலிஃபோர்னியா, எடுத்துக்காட்டாக, வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையை தடைசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

எதிர்ப்பது யார்?

தேசிய துப்பாக்கிச் சங்கம் அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கி லாபியாக இருக்கிறது. இந்த அமைப்பு துப்பாக்கி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தடைசெய்வதற்கான சட்டத்தை இயற்றுமாறு அதிபர் பைடன் அமெரிக்க காங்கிரஸை வலியுறுத்தியிருக்கிறார். தடைக்கான அவரின் முறையீடு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் நிறைவேற்றப்பட்டதைப் போன்றது. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிட்டது .

ஜோ பைடன் இது தொடர்பாக தன்னுடைய அறிக்கையில், "அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறைக்கு வலுவான நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் அறிவோம். காங்கிரஸின் இரு அவைகளும் விரைவாகச் செயல்பட வேண்டும். இந்த தாக்குதல் ஆயுதத் தடையை எனக்கு உடனடியாக வழங்க வேண்டும். அமெரிக்க சமூகங்கள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவும் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...