Skip to main content

''பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதா?'' மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி!

தாராளமயமாக்கப்பட்ட பென்ஷன் விதி (Liberalized Pension) 1964 முதல் 2003 வரை நடைமுறையில் இருந்த நிலையில், ஜனவரி 2004 முதல் பணியில் சேருவோர்க்கு ‘நேஷனல் பென்ஷன் சிஸ்டம்’ எனும் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு.

பென்ஷன்

ஓய்வூதிய நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDAI) நிர்வகித்துவரும் இந்த பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை மேற்கு வங்கம், தமிழ்நாடு தவிர அனைத்து இந்திய மாநிலங்களும் என்.பி.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தின. மேற்கு வங்கம் இன்றளவும் பழைய பென்ஷன் (OPS) திட்டத்தில் தொடர்கிறது. தமிழ்நாடு ஏப்ரல் 2003-லேயே சி.பி.எஸ். எனும் பங்களிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

2003-க்குமுன் பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எந்தவித பங்களிப்பும் செலுத்தாமல் மாதம் தோறும் பென்ஷன் பெற்று வருகின்றனர். இவர்களது எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஆனால், 2004-க்குப்பிறகு வேலையில் சேர்ந்த அரசு ஊழியர்கள் தனது ஓய்வுக்கால நிதியத்துக்காக தனது அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 10% தொகையை மாதம்தோறும் செலுத்துகின்றனர். அரசு தரப்பு பங்களிப்பு 10% மற்றும் 14% என இருவகையாக உள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது.

பென்ஷன்

மீண்டும் பழைய பென்ஷன்

இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநில அரசு, மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைக்குக் கொண்டுவந்ததும், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் பழைய பென்ஷனுக்குத் திருபம்பி விட்டன. சமூகப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாங்களும் பழைய பென்ஷனுக்குத் திரும்பிவிட்டதாக அறிவித்துள்ளது தற்போது அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச அரசு.

எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி...

இந்த நிலையில், ஓய்வூதிய நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம், நிதி ஆயோக் உள்ளிட்டவை, ‘மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைப்படுத்துவது வருங்காலத்தில் நிதிப்பேரிடரை எற்படுத்திவிடும்’ என எச்சரித்துள்ள நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும், பழைய பென்ஷனுக்குத் திரும்ப முயற்சி செய்யும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

NPS

‘பழைய பென்ஷன் திட்டத்தை ஏன் மீண்டும் கொண்டுவரப்படக் கூடாது!’ என்பதற்கு கீழ்க்காணும் காரணிகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறது ரிசர்வ் வங்கி. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

  • நிதி ஆதாரங்களின் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் சேமிப்பு நாளடைவில் கரைந்து காணாமல் போய்விடும்.

  • பங்களிப்பு இல்லாத (Unfunded) பென்ஷன் செலவு காரணமாக, நடப்புச் செலவுகளை (Current Expentiture) ஒத்திவைக்க நேரிடும். இது எதிர்காலத்தில் பெரும் சுமையாகிவிடும்.

  • இந்திய மாநிலங்களின் 2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பிடு (Budget Estimate ) 2021-22 நிதியாண்டைக் காட்டிலும் 16% அதிகரித்து உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் பென்ஷனுக்கான கூட்டு வளர்ச்சி (Compounded annual Growth Rate – CAGR) 34% அதிகமாகி உள்ளது. (பாரத அரசு வங்கி ஆய்வறிக்கையின்படி) உலக நாடுகள் பலவற்றிலும் இருந்துவந்த ‘பழைய பென்ஷன்’ திட்டம் 1990-க்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. காரணம், பழைய பென்ஷன் காரணமாக ஏற்பட்ட கடன் சுமை.

அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ‘புதிய பென்ஷனை ரத்து செய்து பழைய பென்ஷனைக் கொண்டு வருவோம்’ என்பது கவர்ச்சிகரமான வாக்குறுதியாக உள்ளது. காரணம், தற்போதைய புதிய தலைமுறை ஊழியர்கள் பென்ஷன் பெறுவதற்கு எந்தவித பங்களிப்பையும் செலுத்தாமல் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் பெற முடியும்.

NPS

என்.பி.எஸ் பெஸ்ட்...

புதிதாக பணியில் சேருவோருக்கு என்.பி.எஸ். கட்டாயம். இதுதான் சிறந்தது. ஓய்வுக் காலத்தில் போதுமான நிதியத்தைப் பெறுவதற்கு நிலையான வழி இதுதான் என்பது ரிசர்வ் வங்கியின் வாதம். தற்போதைய நிலையில் 59,78,000 மாநில அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தில் உள்ளனர். இன்றைய தேதியில் ரூ.4.27 லட்சம் கோடி அளவிலான மாநில அரசுகளின் நிதியத்தை இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வாகம் செய்து வருகிறது.

பழைய பென்ஷன் - நிதிச்சுமை கணக்கீடு

1996 முதல் பணியில் உள்ளவர்களுக்கு இணையாக பழைய பென்ஷன் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஒய்வு பெற்ற ஊழியர் பெற்றிருந்த கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 50% தொகை மாதாந்தர பென்ஷனாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், இன்றைக்குப் பணியில் சேர்ந்து 30,000 சம்பளத்துடன் பணியைத் தொடர்பவர், தனது 30 வருடப் பணிக்குப்பிறகு சுமார் 7.5 லட்சம் ரூபாயை தனது கடைசி சம்பளமாக பெறக்கூடும். இதன் 50% தொகையான 3.75 லட்சம் ரூபாய், இவரது மாதாந்தர பென்ஷனாக ஆகிவிடும். மேலும், இந்த பென்ஷனானது 8% கூட்டு வளர்ச்சியில், 20 வருடங்களுக்குப் பிறகு அதாவது, இவரது 80-வது வயதில் 17,47,875 ரூபாய் என்ற மாதாந்தர பென்ஷனாக அதிகரிக்கலாம் என்பது தற்போதைய நிலவரப்படியான (குறைந்தபட்ச) கணக்கீடு.

கடன் சுமை

இதுவே இவர் என்.பி.எஸ். திட்டத்தில் இருக்கும்பட்சத்தில் இவருக்கான அரசுத் தரப்பு (14%) மாதாந்திர பென்ஷன் பங்களிப்பு 4200 ரூபாயில் துவங்கி, 1,05,000 ரூபாயில் நிறைவு பெறக்கூடும். இதனால் அரசுத் தரப்பு செலவு வெகுவாக குறையும்.

அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்ஷன் திட்டமானது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அந்த ஆசையை மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...