Skip to main content

''பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதா?'' மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி!

தாராளமயமாக்கப்பட்ட பென்ஷன் விதி (Liberalized Pension) 1964 முதல் 2003 வரை நடைமுறையில் இருந்த நிலையில், ஜனவரி 2004 முதல் பணியில் சேருவோர்க்கு ‘நேஷனல் பென்ஷன் சிஸ்டம்’ எனும் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு.

பென்ஷன்

ஓய்வூதிய நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDAI) நிர்வகித்துவரும் இந்த பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை மேற்கு வங்கம், தமிழ்நாடு தவிர அனைத்து இந்திய மாநிலங்களும் என்.பி.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தின. மேற்கு வங்கம் இன்றளவும் பழைய பென்ஷன் (OPS) திட்டத்தில் தொடர்கிறது. தமிழ்நாடு ஏப்ரல் 2003-லேயே சி.பி.எஸ். எனும் பங்களிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

2003-க்குமுன் பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எந்தவித பங்களிப்பும் செலுத்தாமல் மாதம் தோறும் பென்ஷன் பெற்று வருகின்றனர். இவர்களது எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஆனால், 2004-க்குப்பிறகு வேலையில் சேர்ந்த அரசு ஊழியர்கள் தனது ஓய்வுக்கால நிதியத்துக்காக தனது அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 10% தொகையை மாதம்தோறும் செலுத்துகின்றனர். அரசு தரப்பு பங்களிப்பு 10% மற்றும் 14% என இருவகையாக உள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது.

பென்ஷன்

மீண்டும் பழைய பென்ஷன்

இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநில அரசு, மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைக்குக் கொண்டுவந்ததும், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் பழைய பென்ஷனுக்குத் திருபம்பி விட்டன. சமூகப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாங்களும் பழைய பென்ஷனுக்குத் திரும்பிவிட்டதாக அறிவித்துள்ளது தற்போது அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச அரசு.

எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி...

இந்த நிலையில், ஓய்வூதிய நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம், நிதி ஆயோக் உள்ளிட்டவை, ‘மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைப்படுத்துவது வருங்காலத்தில் நிதிப்பேரிடரை எற்படுத்திவிடும்’ என எச்சரித்துள்ள நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும், பழைய பென்ஷனுக்குத் திரும்ப முயற்சி செய்யும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

NPS

‘பழைய பென்ஷன் திட்டத்தை ஏன் மீண்டும் கொண்டுவரப்படக் கூடாது!’ என்பதற்கு கீழ்க்காணும் காரணிகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறது ரிசர்வ் வங்கி. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

  • நிதி ஆதாரங்களின் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் சேமிப்பு நாளடைவில் கரைந்து காணாமல் போய்விடும்.

  • பங்களிப்பு இல்லாத (Unfunded) பென்ஷன் செலவு காரணமாக, நடப்புச் செலவுகளை (Current Expentiture) ஒத்திவைக்க நேரிடும். இது எதிர்காலத்தில் பெரும் சுமையாகிவிடும்.

  • இந்திய மாநிலங்களின் 2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பிடு (Budget Estimate ) 2021-22 நிதியாண்டைக் காட்டிலும் 16% அதிகரித்து உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் பென்ஷனுக்கான கூட்டு வளர்ச்சி (Compounded annual Growth Rate – CAGR) 34% அதிகமாகி உள்ளது. (பாரத அரசு வங்கி ஆய்வறிக்கையின்படி) உலக நாடுகள் பலவற்றிலும் இருந்துவந்த ‘பழைய பென்ஷன்’ திட்டம் 1990-க்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. காரணம், பழைய பென்ஷன் காரணமாக ஏற்பட்ட கடன் சுமை.

அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ‘புதிய பென்ஷனை ரத்து செய்து பழைய பென்ஷனைக் கொண்டு வருவோம்’ என்பது கவர்ச்சிகரமான வாக்குறுதியாக உள்ளது. காரணம், தற்போதைய புதிய தலைமுறை ஊழியர்கள் பென்ஷன் பெறுவதற்கு எந்தவித பங்களிப்பையும் செலுத்தாமல் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் பெற முடியும்.

NPS

என்.பி.எஸ் பெஸ்ட்...

புதிதாக பணியில் சேருவோருக்கு என்.பி.எஸ். கட்டாயம். இதுதான் சிறந்தது. ஓய்வுக் காலத்தில் போதுமான நிதியத்தைப் பெறுவதற்கு நிலையான வழி இதுதான் என்பது ரிசர்வ் வங்கியின் வாதம். தற்போதைய நிலையில் 59,78,000 மாநில அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தில் உள்ளனர். இன்றைய தேதியில் ரூ.4.27 லட்சம் கோடி அளவிலான மாநில அரசுகளின் நிதியத்தை இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வாகம் செய்து வருகிறது.

பழைய பென்ஷன் - நிதிச்சுமை கணக்கீடு

1996 முதல் பணியில் உள்ளவர்களுக்கு இணையாக பழைய பென்ஷன் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஒய்வு பெற்ற ஊழியர் பெற்றிருந்த கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 50% தொகை மாதாந்தர பென்ஷனாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், இன்றைக்குப் பணியில் சேர்ந்து 30,000 சம்பளத்துடன் பணியைத் தொடர்பவர், தனது 30 வருடப் பணிக்குப்பிறகு சுமார் 7.5 லட்சம் ரூபாயை தனது கடைசி சம்பளமாக பெறக்கூடும். இதன் 50% தொகையான 3.75 லட்சம் ரூபாய், இவரது மாதாந்தர பென்ஷனாக ஆகிவிடும். மேலும், இந்த பென்ஷனானது 8% கூட்டு வளர்ச்சியில், 20 வருடங்களுக்குப் பிறகு அதாவது, இவரது 80-வது வயதில் 17,47,875 ரூபாய் என்ற மாதாந்தர பென்ஷனாக அதிகரிக்கலாம் என்பது தற்போதைய நிலவரப்படியான (குறைந்தபட்ச) கணக்கீடு.

கடன் சுமை

இதுவே இவர் என்.பி.எஸ். திட்டத்தில் இருக்கும்பட்சத்தில் இவருக்கான அரசுத் தரப்பு (14%) மாதாந்திர பென்ஷன் பங்களிப்பு 4200 ரூபாயில் துவங்கி, 1,05,000 ரூபாயில் நிறைவு பெறக்கூடும். இதனால் அரசுத் தரப்பு செலவு வெகுவாக குறையும்.

அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்ஷன் திட்டமானது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அந்த ஆசையை மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...