Skip to main content

ஜனாதிபதி மாளிகையிலுள்ள முகலாய தோட்டம், `அம்ரித் உத்யான' எனப் பெயர்மாற்றம்!

டெல்லியில் அமைந்திருக்கும், ராஷ்டிரபதி பவன் என்றழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகையில் வரலாற்றை நினைவுகூரும் விதமாக அங்குள்ள தோட்டங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், பல ஆண்டுகளாக முகல் தோட்டம் என்று அழைக்கப்பட்டுவந்த `முகலாயர் தோட்டம்'.

ஜனாதிபதி மாளிகை

இந்த நிலையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டமான `ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' எனப்படும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் முகலாயர் தோட்டம் உட்பட பல்வேறு தோட்டங்களுக்கு `அம்ரித் உத்யன்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஜனாதிபதியின் துணை ஊடகச் செயலாளர் நவிகா குப்தா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் இந்த தருணத்தில், ஜனாதிபதி மாளிகையிலுள்ள தோட்டங்களுக்கு அம்ரித் உத்யன் என ஜனாதிபதி பெயர் சூட்டியிருக்கிறார். மேலும், கடந்த ஆண்டுகளைப்போலவே ஜனாதிபதி மாளிகையிலுள்ள தோட்டங்கள், வரும் 31-ம் தேதிமுதல் மார்ச் 26-ம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்படுகின்றன.

ஜனாதிபதி மாளிகையிலுள்ள தோட்டம்

அதோடு அனைத்து திங்கள்கிழமைகள், மார்ச் 8-ல் (ஹோலி பண்டிகை) தோட்டங்கள் திறந்துவைக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அரசின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

அந்த வரிசையில் திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்றக் குழு தலைவர் டெரிக் ஓபிரையன், ``யாருக்குத் தெரியும், அவர்கள் இப்போது ஈடன் கார்டனின் பெயரை மாற்றி மோடி கார்டன் என்றுகூட அழைக்க விரும்பலாம். ஆனால் இதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றின் விலைமதிப்பற்ற வளங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

டி.ராஜா

அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ``இந்தப் பெயர் மாற்றம் என்பது நீண்ட காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது" என்று விமர்சித்திருக்கிறார். இருப்பினும் காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு எதிர்ப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...