Skip to main content

மின்சார திருத்த சட்டம்: மாதந்தோறும் மின் கட்டணம் உயருமா... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து பல தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றில் மாதந்தோறும் மின்சார கட்டணம் மாறும் என்பதும் ஒன்றாக இருக்கிறது. இந்தத் தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின்சார திருத்தச் சட்டம்

நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்துவருவதற்கு ஏற்ப கூடவே மின் ஆற்றல் உற்பத்தி தொடர்பான சவால்களும் அதிகரித்துவருகின்றன. மின் விநியோக நிறுவனங்களின் கடன்கள் மலைபோல் இருக்கின்றன. தொடர்ந்து பாரம்பரிய ஆற்றல் ஆதாரங்களை நம்பி இருக்க முடியாது என்பதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்தத் திருத்த சட்டம் மின் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு சார்ந்து மாநிலங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் ``ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தில் மாற்றங்கள் வரலாம், தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் என மாற்றப்பட்டு, கட்டணமும் மாதந்தோறும் மாறும் என்ற வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து கூறும் போது, "மின் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா பற்றியும், அதனால் மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்றும் தகவல்கள் பரவுவதைப் பார்க்க முடிகிறது.

மின்வாரியம் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துகள் இருந்தால் என்னிடமோ அல்லது துறை அதிகாரிகளிடமோ கேட்டு விட்டு தகவல்களை வெளியிட்டால் சரியாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கும் உண்மை என்ன என்பது தெரியும். மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் உயரும் என்ற கருத்து மிகவும் தவறானது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வந்த போதே திமுக சார்பில் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதையடுத்து புதிய திருத்த சட்ட மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக ஒருபோதும் ஏற்காது. மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்பது போன்ற தவறான தகவல்களை பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...