Skip to main content

மின்சார திருத்த சட்டம்: மாதந்தோறும் மின் கட்டணம் உயருமா... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து பல தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றில் மாதந்தோறும் மின்சார கட்டணம் மாறும் என்பதும் ஒன்றாக இருக்கிறது. இந்தத் தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின்சார திருத்தச் சட்டம்

நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்துவருவதற்கு ஏற்ப கூடவே மின் ஆற்றல் உற்பத்தி தொடர்பான சவால்களும் அதிகரித்துவருகின்றன. மின் விநியோக நிறுவனங்களின் கடன்கள் மலைபோல் இருக்கின்றன. தொடர்ந்து பாரம்பரிய ஆற்றல் ஆதாரங்களை நம்பி இருக்க முடியாது என்பதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்தத் திருத்த சட்டம் மின் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு சார்ந்து மாநிலங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் ``ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தில் மாற்றங்கள் வரலாம், தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் என மாற்றப்பட்டு, கட்டணமும் மாதந்தோறும் மாறும் என்ற வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து கூறும் போது, "மின் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா பற்றியும், அதனால் மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்றும் தகவல்கள் பரவுவதைப் பார்க்க முடிகிறது.

மின்வாரியம் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துகள் இருந்தால் என்னிடமோ அல்லது துறை அதிகாரிகளிடமோ கேட்டு விட்டு தகவல்களை வெளியிட்டால் சரியாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கும் உண்மை என்ன என்பது தெரியும். மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் உயரும் என்ற கருத்து மிகவும் தவறானது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வந்த போதே திமுக சார்பில் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதையடுத்து புதிய திருத்த சட்ட மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக ஒருபோதும் ஏற்காது. மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்பது போன்ற தவறான தகவல்களை பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...