Skip to main content

மின்சார திருத்த சட்டம்: மாதந்தோறும் மின் கட்டணம் உயருமா... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து பல தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றில் மாதந்தோறும் மின்சார கட்டணம் மாறும் என்பதும் ஒன்றாக இருக்கிறது. இந்தத் தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின்சார திருத்தச் சட்டம்

நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்துவருவதற்கு ஏற்ப கூடவே மின் ஆற்றல் உற்பத்தி தொடர்பான சவால்களும் அதிகரித்துவருகின்றன. மின் விநியோக நிறுவனங்களின் கடன்கள் மலைபோல் இருக்கின்றன. தொடர்ந்து பாரம்பரிய ஆற்றல் ஆதாரங்களை நம்பி இருக்க முடியாது என்பதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்தத் திருத்த சட்டம் மின் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு சார்ந்து மாநிலங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் ``ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தில் மாற்றங்கள் வரலாம், தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் என மாற்றப்பட்டு, கட்டணமும் மாதந்தோறும் மாறும் என்ற வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து கூறும் போது, "மின் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா பற்றியும், அதனால் மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்றும் தகவல்கள் பரவுவதைப் பார்க்க முடிகிறது.

மின்வாரியம் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துகள் இருந்தால் என்னிடமோ அல்லது துறை அதிகாரிகளிடமோ கேட்டு விட்டு தகவல்களை வெளியிட்டால் சரியாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கும் உண்மை என்ன என்பது தெரியும். மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் உயரும் என்ற கருத்து மிகவும் தவறானது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வந்த போதே திமுக சார்பில் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதையடுத்து புதிய திருத்த சட்ட மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக ஒருபோதும் ஏற்காது. மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்பது போன்ற தவறான தகவல்களை பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...