Skip to main content

காவல் அதிகாரிகள்மீது கொலை வழக்கு முதல் ஜோகோவிக் வேதனை வரை... உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

வடக்கு சோமாலியாவில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழுவால் அந்த நாட்டின் முக்கிய இஸ்லாமிய அமைப்பு அதிகாரியும், 10 பயங்கரவாதச் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டதாக பைடன் அரசு அறிவித்தது. கொல்லப்பட்ட அதிகாரி உலகளாவிய பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிதி உதவியாளர் பிலால் அல்-சூடானி என்று கூறப்படுகிறது. டயர் நிக்கோல்ஸ் என்ற ஆப்ரிக்க அமெரிக்க வாகன ஓட்டிக்கும், போக்குவரத்து நிறுத்தத்தின்போது அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது காவலர்களால் அவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஐந்து காவல் அதிகாரிகளின்மீது கொலை வழக்கு பாய்ந்திருக்கிறது. முஸ்லிம்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கனடா, இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான தனது முதல் சிறப்புப் பிரதிநிதியை நியமித்திருக்கிறது. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் அமிரா எல்கவாபி இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்பைத் தவிர்க்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கொடிய ஆயுதப் படைகளின் (CAF) பட்டியலிலிருந்து உக்ரைனுக்கு நான்கு போர் டாங்கிகளை வழங்குவதாக கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்திருக்கிறார். இந்த டாங்குகளின் பயன்பாடு குறித்த பயிற்சியும் அளிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்குப் பரிந்துரை செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. ராஜா சாரி தற்போது க்ரூ-3 கமாண்டராக டெக்ஸாஸ் விண்வெளி மையத்தில் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்திலுள்ள ஆர்வலர்களால் இஸ்லாத்தின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தான், ஈராக் மற்றும் லெபனான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. ஜெருசலம் ஆலயத்துக்கு வெளியே ஒரு பாலஸ்தீன நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் வெஸ்ட் பாங்கில் பாலஸ்தீனர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதையடுத்து, 21 வயது நபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தகவல் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக், ஆஸ்திரேலியா ஓபனில் தன் தந்தை, ரஷ்ய அதிபர் புதின் முகமுடைய கொடியைப் பிடித்து போஸ் கொடுக்கும் படங்கள் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் கராச்சியின் கெமாரி பகுதியில் மர்மமான நோயால் 18 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இதில் 14 பேர் குழந்தைகளே. இறப்புக்கான காரணங்களை அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
http://dlvr.it/ShcBs6

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...