Skip to main content

அமெரிக்கா: போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்த கறுப்பின இளைஞர்; கொதித்துப் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

அமெரிக்காவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, கறுப்பின இளைஞர் ஒருவர் ஐந்து போலீஸாரால் சரமாரியாகத் தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸாரால் உயிரிழந்த கறுப்பின இளைஞர்

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து போலீஸாரும் கறுப்பினத்தவர்கள்தான். இது தொடர்பாக வெளியான வெளியான தகவலின்படி, ஜனவரி 7-ம் தேதியன்று அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) எனும் கறுப்பின இளைஞரை மடக்கிப்பிடித்த டடாரியஸ் பீன், டெமட்ரியஸ் காலி, எம்மிட் மார்டின், டெஸ்மாண்ட் மில்ஸ் ஜூனியர், ஜஸ்டின் ஸ்மித் ஆகிய ஐந்து போலீஸார், அவரைத் தாக்கத்தொடங்கினர்.

வலி தாங்கமுடியாமால், கதறிய டயர் நிக்கோல்ஸை போலீஸார் இன்னும் சாராமரியாகத் தாக்கினர். இதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு போலீஸாரால் தாக்குதலுக்குள்ளான டயர் நிக்கோல்ஸ், ஜனவரி 10-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கறுப்பின இளைஞரை தாக்கிக் கொன்ற 5 அமெரிக்க போலீஸார்

இந்த நிலையில், டயர் நிக்கோல்ஸின் மரணத்துக்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதேசமயம், டயர் நிக்கோல்ஸை போலீஸார் தாக்கும் வீடியோ அவர்கள் அணிந்திருந்த போலீஸ் உடை கேமிராவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் டயர் நிக்கோல்ஸ் `அம்மா' எனக் கதறும் காட்சி பலரையும் பதறவைக்கிறது.

இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஐந்து அதிகாரிகளும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே 2020-ல் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...