Skip to main content

கேஷ் ஆன் டெலிவரி: 800 ரூபாய் உணவு 200 ரூபாய்தான்… ஸொமெட்டோவில் தில்லாலங்கடி!

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்குப் பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப, ஆன்லைனிலோ அல்லது கையில் பணமாகவோ பணம் செலுத்துவதுண்டு. ஆனால் ஸொமெட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் கையில் பணம் கொடுத்தால், 800 ரூபாய் உணவுகள் கூட, 200 ரூபாய்க்கு வழங்குவதாகக் கூறிய சம்பவம், தற்போது `ஸொமெட்டோவில் என்ன ஊழல் நடக்கிறது' என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஸொமெட்டோ

தொழில்முனைவோராக பணிபுரிந்து வரும் வினய் சடி என்பவர் ஸொமெட்டோவில் நடந்த  தன்னுடைய விநோத அனுபவத்தைக் குறித்து லிங்க்ட்இன்னில் பகிர்ந்துள்ளார். அதில், ``ஸொமேட்டோவில் பர்கர் ஆர்டர் செய்து, அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினேன்.

30- 40 நிமிடங்கள் கழித்து வந்த டெலிவரி பையன், அடுத்த முறை ஆன்லைனில் பணம் அனுப்பாதீர்கள் என்றான். நான் ஏன் செய்யக்கூடாது தம்பி எனக் கேள்வி எழுப்பினேன். அதற்கு அடுத்த முறை கேஷ் ஆன் டெலிவரி மூலம் கையில் பணம் தந்தால் 700 முதல் 800 ரூபாய் மதிப்பிலான உணவுகளுக்கு 200 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். நீங்கள் உணவை வாங்கவில்லை என்பதை ஸொமெட்டோவில் காட்டிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த உணவையும் உங்களுக்குத் தந்து விடுகிறேன்'' என்றிருக்கிறார். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், தன்னுடைய அனுபவத்தைக் குறித்து விளக்கமாக எழுதி, ஸொமேட்டோவின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான  தீபிந்தர் கோயலை டேக் செய்து, ``இபடியெல்லாம் நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது எனச் சொல்லாதீர்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும் உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், உங்கள் ஐ.ஐ.எம் ஆள்கள் என்ன செய்கிறார்கள்'' எனக் கேள்வி எழுப்பி உள்ளார். 

``அதோடு எனக்கு இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தது. முதலில் அந்த ஆஃபரை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருப்பது. இல்லையென்றால் இந்த ஊழலை வெளிக்கொண்டு வருவது. நான் ஒரு தொழில்முனைவோர் என்பதால், இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்தேன்'' எனப் பதிவிட்டுள்ளார். 

இதற்குப் பதிலளித்துள்ள ஸொமேட்டோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல், `இது குறித்து அறிந்திருக்கிறேன். இவற்றைச் சரிசெய்ய வேலை செய்கிறேன்’ எனப் பதிலளித்துள்ளார். 

ஸொமேட்டோவில் இப்படியொரு ஊழல் நிகழ்ந்துவருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...