Skip to main content

கேஷ் ஆன் டெலிவரி: 800 ரூபாய் உணவு 200 ரூபாய்தான்… ஸொமெட்டோவில் தில்லாலங்கடி!

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்குப் பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப, ஆன்லைனிலோ அல்லது கையில் பணமாகவோ பணம் செலுத்துவதுண்டு. ஆனால் ஸொமெட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் கையில் பணம் கொடுத்தால், 800 ரூபாய் உணவுகள் கூட, 200 ரூபாய்க்கு வழங்குவதாகக் கூறிய சம்பவம், தற்போது `ஸொமெட்டோவில் என்ன ஊழல் நடக்கிறது' என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஸொமெட்டோ

தொழில்முனைவோராக பணிபுரிந்து வரும் வினய் சடி என்பவர் ஸொமெட்டோவில் நடந்த  தன்னுடைய விநோத அனுபவத்தைக் குறித்து லிங்க்ட்இன்னில் பகிர்ந்துள்ளார். அதில், ``ஸொமேட்டோவில் பர்கர் ஆர்டர் செய்து, அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினேன்.

30- 40 நிமிடங்கள் கழித்து வந்த டெலிவரி பையன், அடுத்த முறை ஆன்லைனில் பணம் அனுப்பாதீர்கள் என்றான். நான் ஏன் செய்யக்கூடாது தம்பி எனக் கேள்வி எழுப்பினேன். அதற்கு அடுத்த முறை கேஷ் ஆன் டெலிவரி மூலம் கையில் பணம் தந்தால் 700 முதல் 800 ரூபாய் மதிப்பிலான உணவுகளுக்கு 200 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். நீங்கள் உணவை வாங்கவில்லை என்பதை ஸொமெட்டோவில் காட்டிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த உணவையும் உங்களுக்குத் தந்து விடுகிறேன்'' என்றிருக்கிறார். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், தன்னுடைய அனுபவத்தைக் குறித்து விளக்கமாக எழுதி, ஸொமேட்டோவின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான  தீபிந்தர் கோயலை டேக் செய்து, ``இபடியெல்லாம் நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது எனச் சொல்லாதீர்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும் உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், உங்கள் ஐ.ஐ.எம் ஆள்கள் என்ன செய்கிறார்கள்'' எனக் கேள்வி எழுப்பி உள்ளார். 

``அதோடு எனக்கு இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தது. முதலில் அந்த ஆஃபரை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருப்பது. இல்லையென்றால் இந்த ஊழலை வெளிக்கொண்டு வருவது. நான் ஒரு தொழில்முனைவோர் என்பதால், இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்தேன்'' எனப் பதிவிட்டுள்ளார். 

இதற்குப் பதிலளித்துள்ள ஸொமேட்டோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல், `இது குறித்து அறிந்திருக்கிறேன். இவற்றைச் சரிசெய்ய வேலை செய்கிறேன்’ எனப் பதிலளித்துள்ளார். 

ஸொமேட்டோவில் இப்படியொரு ஊழல் நிகழ்ந்துவருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...