Skip to main content

`கூகுள் ஊழியர்கள் 12,000 பேர் பணிநீக்கம்; முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன்!' - சுந்தர் பிச்சை

தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். மைக்ரோசாஃப்ட் 10,000 ஊழியர்களையும், அமேசான் 18,000 ஊழியர்களையும், மெட்டா 11,000 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

பணிநீக்கம்

இந்த மாதத்தில் மட்டும் தொழில்நுட்ப ஊழியர்கள் 48,000 பேர் நீக்கப்பட உள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது பணியாளர்களில் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பணி நீக்க நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்குக் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை ஜனவரி 20-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில், ``உலகம் முழுவதுமுள்ள மொத்த பணியாளர்களில் 6 சதவிகிதத்தினர், 12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டோம். அந்த வளர்ச்சியை அடையும் வகையில் புதிதாக வேலைக்கு பணியமர்த்தினோம். ஆனால், நாம் தற்போது மாறுபட்ட பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகிறோம். பணிநீக்க நடவடிக்கைகளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

கூகுள் - சுந்தர் பிச்சை

இந்த நடவடிக்கை ஊழியர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பாதிக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகளுக்கான எங்களது முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

தொழில்நுட்ப நிறுவனங்கள் பலரும் தொடர்ச்சியாக ஆட்குறைப்பு செய்து வருவது ஊழியர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வேலையின் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. 


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...