Skip to main content

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்?

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே... அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே... கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை

சீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல் உதிர்வுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பரைத் தன்மை, ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஏற்படக்கூடிய வழுக்கைப் பிரச்னை, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம், மெனோபாஸ், ஸ்ட்ரெஸ், அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை, அதிக ரத்த இழப்பு, கீமோதெரபி, கருத்தடை மாத்திரை பயன்பாடு, சிலவகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும்.

வைட்டமின் சி, இரும்புச்சத்துக் குறைபாடு, கொழுப்புச்சத்தே இல்லாதது, துத்தநாகக் குறைபாடு என சத்துக் குறைபாடுகளும் கூந்தல் உதிர்வுக்கு காரணமாகலாம். எனவே காரணமறிந்துதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மினாக்ஸிடில் எஃப்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டதுதான். உதிர்ந்த கூந்தலை மீண்டும் வளரச் செய்கிற ஒருவகை மருந்துதான். இது ரத்தநாள விரிவூக்கியாகச் செயல்பட்டு, ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால், கூந்தலுக்கு ரத்தத்தின் வழியே அதிக ஆக்ஸிஜன் கிடைக்க வழி செய்கிறது. அதனால் கூந்தல் அடர்த்தியாக, வேகமாக வளரத் தொடங்கும்.

கூந்தலானது வளரும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம், உதிரும் பருவம் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. கூந்தலை வளரும் பருவத்தில் நீண்ட காலத்துக்கு வைத்திருப்பதில் மினாக்ஸிடில் முக்கியப் பங்காற்றுகிறது. மினாக்ஸிடில் பயன்படுத்தத் தொடங்கும்போது முதலில் லேசான முடி உதிர்வு இருக்கும். ஓய்வெடுக்கும் பருவத்தைக் குறுக்கி, வளரும் பருவத்தை நீட்டிக்கும். புதிய முடிகள் வளர உதவும்.

கூந்தல்

மினாக்ஸிடில் என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டியது. அதை யார், எத்தனை சதவிகிதம் பயன்படுத்த வேண்டும் என ஒரு கணக்கு இருக்கிறது. அதைத் தாண்டி உபயோகிக்கும்போது முடி உதிர்வு அதிகமாக இருக்கலாம். மினாக்ஸிடில் பயன்படுத்தத் தொடங்கி 8 வாரங்களில் முடி வளர்ச்சியைப் பார்க்க முடியும். 4 மாத முடிவில் முடி உதிர்வு முற்றிலும் நின்று, புதிய முடி வளர்ச்சி இருப்பதையும் பார்க்கலாம்.

மினாக்ஸிடிலை போலவே கூந்தல் வளர்ச்சிக்கு உதவ பல வகையான சீரம்கள் கிடைக்கின்றன. மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணம் அறிந்து, அதற்கேற்ற சீரம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். கூந்தலுக்கான சீரம்களில் தலையில் தடவி, மசாஜ் செய்யும் வகை, முடிக்கற்றைகளில் மட்டும் தடவுவது என இருவகை உண்டு. இதில் முதல் வகை கூந்தல் வளர்ச்சிக்கும், அடுத்தது கூந்தலை ஸ்டைலாக்கவும் உதவுபவை.

மினாக்ஸிடில் போலவே ஃபினாஸ்ட்டரைடு கலந்த சீரமும் கூந்தல் வளர்ச்சிக்குப் பரிந்துரைக்கப்படும். இவை தவிர கஃபைன், ரிடென்சில் என பல மூலக்கூறுகள் அடங்கிய சீரம்கள் கிடைக்கின்றன.

Serum

சீரம் தவிர்த்து, சில வகை எண்ணெய்களும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுபவை. ரோஸ்மெர்ரி ஆயில், பூசணிவிதை ஆயில், அவகாடோ ஆயில், க்ரீன் டீ, பெப்பர்மின்ட் ஆயில் போன்றவை சில உதாரணங்கள்.

கூந்தலைப் பளபளப்பாக்கி, வறட்சியைப் போக்கி, சிக்கு இன்றி வைக்க உதவும் சீரம்களும் கிடைக்கின்றன. இந்த வகை சீரத்தை, தலைக்குக் குளித்த பிறகு, கூந்தல் 75 சதவிகிதம் உலர்ந்ததும், சில துளிகள் மட்டுமே எடுத்து உள்ளங்கைகளால் தேய்த்து முடியின் நுனி முதல் மத்தியப் பகுதிவரை உபயோகித்து அப்படியே விட வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...