Skip to main content

விருதுநகர்: சீனாவிலிருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதி!

சீனா உட்பட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பி வரும் பயணிகளுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்த 'ஏர்லங்கா' விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களில், சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த தாய், மகள் இருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த பெண், அவரின் 6 வயது மகள் இருவரும் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.ஆய்வு அவர்களிடம், சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் , கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்துவந்ததும், மனைவி, மகளுடன் மூன்று பேரும் சீனாவில் வசித்துவந்ததும் தெரியவந்தது. மேலும், பணி நிமித்தமாக சுப்பிரமணியம் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற நிலையில், சுப்பிரமணியத்தின் மனைவி, மகள் இருவரும் சொந்த ஊரில் தங்கியிருப்பதற்காகத் தமிழகத்துக்குத் திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், தாய், மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர்களின் சொந்த ஊரான இலந்தைகுளத்தில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டில் தாய், மகள் இருவரும் 15 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குநர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வுசெய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடி சளி பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்குள்ளான தாய், மகளை‌ச் சந்தித்த நபர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், உருமாறிய பிஎஃப்.7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய தாய், மகளின் சளி பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சிவகாசி துணை இயக்குநர் கழுசிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பரவலைத் தடுக்க கர்நாடகா அரசு அதிரடி முடிவு!
http://dlvr.it/Sg52QN

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...