Skip to main content

விருதுநகர்: சீனாவிலிருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதி!

சீனா உட்பட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பி வரும் பயணிகளுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்த 'ஏர்லங்கா' விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களில், சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த தாய், மகள் இருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த பெண், அவரின் 6 வயது மகள் இருவரும் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.ஆய்வு அவர்களிடம், சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் , கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்துவந்ததும், மனைவி, மகளுடன் மூன்று பேரும் சீனாவில் வசித்துவந்ததும் தெரியவந்தது. மேலும், பணி நிமித்தமாக சுப்பிரமணியம் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற நிலையில், சுப்பிரமணியத்தின் மனைவி, மகள் இருவரும் சொந்த ஊரில் தங்கியிருப்பதற்காகத் தமிழகத்துக்குத் திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், தாய், மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர்களின் சொந்த ஊரான இலந்தைகுளத்தில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டில் தாய், மகள் இருவரும் 15 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குநர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வுசெய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடி சளி பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்குள்ளான தாய், மகளை‌ச் சந்தித்த நபர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், உருமாறிய பிஎஃப்.7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய தாய், மகளின் சளி பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சிவகாசி துணை இயக்குநர் கழுசிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பரவலைத் தடுக்க கர்நாடகா அரசு அதிரடி முடிவு!
http://dlvr.it/Sg52QN

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...