Skip to main content

`பாஜக எண்ணங்களை நிறைவேற்றுகிறதா திமுக அரசு?' - சீமான் குற்றச்சாட்டு... ஒரு பார்வை!

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே கூட்டணியில் இருந்துவரும் நிலையில், இப்படியொரு கருத்தை சி.வி.சண்முகம் கூறியதற்கு, பா.ஜ.க-விலிருந்தே கண்டனம் எழுந்தது. பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார்.

சி.வி.சண்முகம்

தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், `வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் ‘பி டீம்’ என்று தி.மு.க-வினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். ‘என் அளவுக்கு பா.ஜ.க-வை யாரும் விமர்சிப்பதில்லை’ என்று கூறி, தி.மு.க-வினரின் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துவரும் சீமான், ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தற்போது கூறியிருக்கிறார். இப்போது மட்டுமல்ல, இந்த கருத்தை சீமான் தொடர்ந்து சொல்லிவருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

சமீபத்தில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த நேரத்தில், ‘நீதிமன்றத்தில் தி.மு.க அரசு சரியாக வாதிடவில்லை. அதனால்தான், பேரணிக்கு அனுமதி கிடைத்தது. அ.தி.மு.க காலத்தில்கூட கூட்டணியின் அடிப்படையில் அவர்கள் பா.ஜ.க-வுடன் இணைந்திருந்தனர். ஆனால், தி.மு.க மறைமுகமாக பா.ஜ.க-வுடன் இணைப்பில் இருந்து அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது’ என்று சீமான் குற்றம்சாட்டினார்.

தற்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று கூறும் சீமான், “திடீரென பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் அது விகாரமாகத் தெரியும் என்பதால், இப்போதே பா.ஜ.க-விடம் சரணடைந்து தமிழக அரசு வேலை செய்கிறது. பா.ஜ.க ஆளவேண்டிய அவசியம் இல்லாமல், பா.ஜ.க என்ன நினைக்கிறதோ அதை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது” என்கிறார்.

சீமான்

தி.மு.க அரசின் சில திட்டங்களைக் குறிப்பிட்டு, அவற்றை பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார் சீமான். மத்திய பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று கூறும் சீமான், தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கம்தான் என்கிறார்.

தமிழ்நாட்டில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கட்டாயமாக்கிவிட்டது. அதைக் குறிப்பிடும் சீமான், ‘பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்கூட இப்படி ஆதாரை இணைக்கச் சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் தி.மு.க அரசு ஆதாரை இணைக்கச் சொல்கிறது. இப்படியாக, பா.ஜ.க-வின் திட்டங்களை பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களே விஞ்சும் வகையில், தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று சீமான் விமர்சிக்கிறார். பா.ஜ.க-வுக்கும், ஆர்.எஸ்.எஸுக்கும் தி.மு.க அரசு விசுவாசமான நடந்துகொள்கிறது என்றும் சீமான் விமர்சித்திருக்கிறார்.

மோடி - ஸ்டாலின்

இல்லம் தேடிக் கல்வி, ஆதார் இணைப்பு கட்டாயம் போன்ற சில திட்டங்களை தி.மு.க அரசின் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர்கூட விமர்சிக்கிறார்கள். அதை, சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. இப்படி விமர்சிப்பவர்கள், பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்ற கருத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., வி.சி.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை தி.மு.க உறுதியாக வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணிதான் தங்கள் வெற்றிக்கு கைகொடுக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.

அதே நேரத்தில், மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தி.மு.க அரசிடம் எந்தத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில், இங்கு பணியாற்றும் பா.ஜ.க ஆதரவு அதிகாரிகளின் பங்கு முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. சீமான் உள்ளிட்ட தி.மு.க எதிர்ப்பு நிலை கொண்ட அரசியல்வாதிகள் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கு, அதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...