Skip to main content

`பாஜக எண்ணங்களை நிறைவேற்றுகிறதா திமுக அரசு?' - சீமான் குற்றச்சாட்டு... ஒரு பார்வை!

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே கூட்டணியில் இருந்துவரும் நிலையில், இப்படியொரு கருத்தை சி.வி.சண்முகம் கூறியதற்கு, பா.ஜ.க-விலிருந்தே கண்டனம் எழுந்தது. பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார்.

சி.வி.சண்முகம்

தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், `வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் ‘பி டீம்’ என்று தி.மு.க-வினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். ‘என் அளவுக்கு பா.ஜ.க-வை யாரும் விமர்சிப்பதில்லை’ என்று கூறி, தி.மு.க-வினரின் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துவரும் சீமான், ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தற்போது கூறியிருக்கிறார். இப்போது மட்டுமல்ல, இந்த கருத்தை சீமான் தொடர்ந்து சொல்லிவருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

சமீபத்தில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த நேரத்தில், ‘நீதிமன்றத்தில் தி.மு.க அரசு சரியாக வாதிடவில்லை. அதனால்தான், பேரணிக்கு அனுமதி கிடைத்தது. அ.தி.மு.க காலத்தில்கூட கூட்டணியின் அடிப்படையில் அவர்கள் பா.ஜ.க-வுடன் இணைந்திருந்தனர். ஆனால், தி.மு.க மறைமுகமாக பா.ஜ.க-வுடன் இணைப்பில் இருந்து அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது’ என்று சீமான் குற்றம்சாட்டினார்.

தற்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று கூறும் சீமான், “திடீரென பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் அது விகாரமாகத் தெரியும் என்பதால், இப்போதே பா.ஜ.க-விடம் சரணடைந்து தமிழக அரசு வேலை செய்கிறது. பா.ஜ.க ஆளவேண்டிய அவசியம் இல்லாமல், பா.ஜ.க என்ன நினைக்கிறதோ அதை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது” என்கிறார்.

சீமான்

தி.மு.க அரசின் சில திட்டங்களைக் குறிப்பிட்டு, அவற்றை பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார் சீமான். மத்திய பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று கூறும் சீமான், தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கம்தான் என்கிறார்.

தமிழ்நாட்டில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கட்டாயமாக்கிவிட்டது. அதைக் குறிப்பிடும் சீமான், ‘பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்கூட இப்படி ஆதாரை இணைக்கச் சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் தி.மு.க அரசு ஆதாரை இணைக்கச் சொல்கிறது. இப்படியாக, பா.ஜ.க-வின் திட்டங்களை பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களே விஞ்சும் வகையில், தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று சீமான் விமர்சிக்கிறார். பா.ஜ.க-வுக்கும், ஆர்.எஸ்.எஸுக்கும் தி.மு.க அரசு விசுவாசமான நடந்துகொள்கிறது என்றும் சீமான் விமர்சித்திருக்கிறார்.

மோடி - ஸ்டாலின்

இல்லம் தேடிக் கல்வி, ஆதார் இணைப்பு கட்டாயம் போன்ற சில திட்டங்களை தி.மு.க அரசின் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர்கூட விமர்சிக்கிறார்கள். அதை, சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. இப்படி விமர்சிப்பவர்கள், பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்ற கருத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., வி.சி.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை தி.மு.க உறுதியாக வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணிதான் தங்கள் வெற்றிக்கு கைகொடுக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.

அதே நேரத்தில், மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தி.மு.க அரசிடம் எந்தத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில், இங்கு பணியாற்றும் பா.ஜ.க ஆதரவு அதிகாரிகளின் பங்கு முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. சீமான் உள்ளிட்ட தி.மு.க எதிர்ப்பு நிலை கொண்ட அரசியல்வாதிகள் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கு, அதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...