Skip to main content

வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்!

வீடு வாங்க, மனை வாங்க வீட்டை மேம்படுத்துவதற்கு, வீட்டைச் சீரமைப்பதற்கு இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்நிறுவனம் அதன் பயனர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.   கடனுக்கான வட்டி தொகையை இந்நிறுவனம் முதன்மை கடன் வட்டி விகிதத்தை வைத்தே  நிர்ணயிக்கிறது. இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் `வீட்டு கடன்களுக்கான முதன்மை கடன் வட்டி விகிதத்தில்’ (Prime Lending Rate) மாற்றம்செய்துள்ளதாக அறிவித்துள்ளது. loanவீட்டுக் கடன் வட்டி... நிர்ணயம் செய்யும் 7 காரணிகள்..! எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் இணையதளத்தின் படி, சம்பளம் வாங்குபவர்களுக்கும், ப்ரோபெஷனல் நபர்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில், 15 கோடி வரையிலான கடனுக்கு, வட்டி விகிதமானது 8.30 சதவிகிதத்தில் இருந்து விதிக்கப்படும். 750 முதல் 799 கிரெடிட் ஸ்கோர் கொண்ட சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் ப்ரோபெஷனல் நபர்களுக்கு, 5 கோடி கடனுக்கு 8.40 சதவிகிதம் வரை கடன் வட்டியும், 5 கோடிக்கு மேல் 15 கோடி வரையிலான கடனுக்கு, 8.60 சதவிகிதம் வட்டி விகிதம் தொடங்கும். 700 முதல் 749 சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 50 லட்ச கடனுக்கு, வட்டி விகிதம் 8.70 சதவிகிதம் வரையும், 50 லட்சத்தில் இருந்து 2 கோடி வரையிலான கடனுக்கு 8.90 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது, எல்.ஐ.சி.   இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் முதன்மை கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.ஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது?உயரும் வீட்டுக்கடன் வட்டி... நாம் கவலைப்பட வேண்டுமா? இது குறித்து எல்.ஐ.சி ஹெச்.எஃப்.எல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்தியாவின் முன்னணி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் அதன் முதன்மை கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான முதன்மை வட்டி விகிதம் 8.65 சதவிகிதத்தில் இருந்து துவங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதம் 2022 டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/Sg2TLD

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...