Skip to main content

வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்!

வீடு வாங்க, மனை வாங்க வீட்டை மேம்படுத்துவதற்கு, வீட்டைச் சீரமைப்பதற்கு இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்நிறுவனம் அதன் பயனர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.   கடனுக்கான வட்டி தொகையை இந்நிறுவனம் முதன்மை கடன் வட்டி விகிதத்தை வைத்தே  நிர்ணயிக்கிறது. இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் `வீட்டு கடன்களுக்கான முதன்மை கடன் வட்டி விகிதத்தில்’ (Prime Lending Rate) மாற்றம்செய்துள்ளதாக அறிவித்துள்ளது. loanவீட்டுக் கடன் வட்டி... நிர்ணயம் செய்யும் 7 காரணிகள்..! எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் இணையதளத்தின் படி, சம்பளம் வாங்குபவர்களுக்கும், ப்ரோபெஷனல் நபர்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில், 15 கோடி வரையிலான கடனுக்கு, வட்டி விகிதமானது 8.30 சதவிகிதத்தில் இருந்து விதிக்கப்படும். 750 முதல் 799 கிரெடிட் ஸ்கோர் கொண்ட சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் ப்ரோபெஷனல் நபர்களுக்கு, 5 கோடி கடனுக்கு 8.40 சதவிகிதம் வரை கடன் வட்டியும், 5 கோடிக்கு மேல் 15 கோடி வரையிலான கடனுக்கு, 8.60 சதவிகிதம் வட்டி விகிதம் தொடங்கும். 700 முதல் 749 சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 50 லட்ச கடனுக்கு, வட்டி விகிதம் 8.70 சதவிகிதம் வரையும், 50 லட்சத்தில் இருந்து 2 கோடி வரையிலான கடனுக்கு 8.90 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது, எல்.ஐ.சி.   இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் முதன்மை கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.ஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது?உயரும் வீட்டுக்கடன் வட்டி... நாம் கவலைப்பட வேண்டுமா? இது குறித்து எல்.ஐ.சி ஹெச்.எஃப்.எல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்தியாவின் முன்னணி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் அதன் முதன்மை கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான முதன்மை வட்டி விகிதம் 8.65 சதவிகிதத்தில் இருந்து துவங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதம் 2022 டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/Sg2TLD

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...