Skip to main content

வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்!

வீடு வாங்க, மனை வாங்க வீட்டை மேம்படுத்துவதற்கு, வீட்டைச் சீரமைப்பதற்கு இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்நிறுவனம் அதன் பயனர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.   கடனுக்கான வட்டி தொகையை இந்நிறுவனம் முதன்மை கடன் வட்டி விகிதத்தை வைத்தே  நிர்ணயிக்கிறது. இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் `வீட்டு கடன்களுக்கான முதன்மை கடன் வட்டி விகிதத்தில்’ (Prime Lending Rate) மாற்றம்செய்துள்ளதாக அறிவித்துள்ளது. loanவீட்டுக் கடன் வட்டி... நிர்ணயம் செய்யும் 7 காரணிகள்..! எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் இணையதளத்தின் படி, சம்பளம் வாங்குபவர்களுக்கும், ப்ரோபெஷனல் நபர்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில், 15 கோடி வரையிலான கடனுக்கு, வட்டி விகிதமானது 8.30 சதவிகிதத்தில் இருந்து விதிக்கப்படும். 750 முதல் 799 கிரெடிட் ஸ்கோர் கொண்ட சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் ப்ரோபெஷனல் நபர்களுக்கு, 5 கோடி கடனுக்கு 8.40 சதவிகிதம் வரை கடன் வட்டியும், 5 கோடிக்கு மேல் 15 கோடி வரையிலான கடனுக்கு, 8.60 சதவிகிதம் வட்டி விகிதம் தொடங்கும். 700 முதல் 749 சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 50 லட்ச கடனுக்கு, வட்டி விகிதம் 8.70 சதவிகிதம் வரையும், 50 லட்சத்தில் இருந்து 2 கோடி வரையிலான கடனுக்கு 8.90 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது, எல்.ஐ.சி.   இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் முதன்மை கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.ஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது?உயரும் வீட்டுக்கடன் வட்டி... நாம் கவலைப்பட வேண்டுமா? இது குறித்து எல்.ஐ.சி ஹெச்.எஃப்.எல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்தியாவின் முன்னணி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் அதன் முதன்மை கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான முதன்மை வட்டி விகிதம் 8.65 சதவிகிதத்தில் இருந்து துவங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதம் 2022 டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/Sg2TLD

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...