Skip to main content

``ஏக்நாத் ஷிண்டே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு பில்லி சூனியம் வைத்திருப்பார்!" - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. சிவசேனாவிலிருந்து வந்தவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக வைத்துக்கொண்டு பா.ஜ.க மாநிலத்தில் ஆட்சி செய்கிறது. அதேசமயம் அடிக்கடி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிகள் மோதிக்கொள்கின்றன. தற்போது இரு அணிகளும் கட்சியின் அலுவலகத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன.

உத்தவ் தாக்கரே

ஏற்கெனவே சில இடங்களில் கட்சி அலுவலகத்தை இரு அணிகளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், புதிய திருப்பமாக நாக்பூரில் உள்ள சட்டமன்ற கட்டடத்தில் சிவசேனாவுக்கு ஒதுக்கி இருந்த அலுவலகத்தை திடீரென ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்கள் அபகரித்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் சிவசேனா அலுவலகத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். எனவே உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து மும்பை மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று சிவசேனா அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.

நேற்று திடீரென ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.பி-யான ராகுல் ஷெவாலே தனது ஆதரவாளர்களுடன் சென்று மும்பை மாநகராட்சியில் இருக்கும் சிவசேனா அலுவலகத்தை அபகரிக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அந்நேரம் அங்கு உத்தவ் தாக்கரே கட்சியினரும் வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.

ஏக்நாத் ஷிண்டே

நேற்று அதிகாரிகள் அந்த சிவசேனா அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். ஏற்கெனவே கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இது குறித்து பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, ``எங்கள் தலைவர்களை திருடினார்கள். எங்கள் கட்சியை திருடினார்கள். இப்போது எங்கள் கட்சி அலுவலகத்தையும் திருடப்பார்க்கிறார்கள். அரசாங்கம் இப்படித்தான் வளர்கிறது என்று மக்கள் மனதில் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. எதையும் செய்யத்துணிவு இல்லாதவர்கள் அலுவலகத்தை திருடுகிறார்கள். மும்பை மாநகராட்சியில் இருக்கும் எங்கள் அலுவலகத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உரிமை கோருகிறார். அவர்(ஷிண்டே) ஆர்.எஸ்.எஸ் அலுவலம் சென்றதாக கேள்விப்பட்டேன். ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கும் உரிமை கொண்டாடுவார்.

மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளையும் நன்றாகப் பார்க்கவேண்டும். எங்காவது எலுமிச்சம் பழத்தை வீசிவிட்டுச் சென்றிருப்பார். பில்லி சூனியம் வைத்தாலும் வைத்திருப்பார். அவரது (ஷிண்டே) கண் எப்படி என்று எங்களுக்கு தெரியும். அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர் ஊழலில் ஈடுபடுகிறார்" என்று குற்றம்சாட்டினார். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...