Skip to main content

``ஏக்நாத் ஷிண்டே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு பில்லி சூனியம் வைத்திருப்பார்!" - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. சிவசேனாவிலிருந்து வந்தவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக வைத்துக்கொண்டு பா.ஜ.க மாநிலத்தில் ஆட்சி செய்கிறது. அதேசமயம் அடிக்கடி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிகள் மோதிக்கொள்கின்றன. தற்போது இரு அணிகளும் கட்சியின் அலுவலகத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன.

உத்தவ் தாக்கரே

ஏற்கெனவே சில இடங்களில் கட்சி அலுவலகத்தை இரு அணிகளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், புதிய திருப்பமாக நாக்பூரில் உள்ள சட்டமன்ற கட்டடத்தில் சிவசேனாவுக்கு ஒதுக்கி இருந்த அலுவலகத்தை திடீரென ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்கள் அபகரித்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் சிவசேனா அலுவலகத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். எனவே உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து மும்பை மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று சிவசேனா அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.

நேற்று திடீரென ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.பி-யான ராகுல் ஷெவாலே தனது ஆதரவாளர்களுடன் சென்று மும்பை மாநகராட்சியில் இருக்கும் சிவசேனா அலுவலகத்தை அபகரிக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அந்நேரம் அங்கு உத்தவ் தாக்கரே கட்சியினரும் வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.

ஏக்நாத் ஷிண்டே

நேற்று அதிகாரிகள் அந்த சிவசேனா அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். ஏற்கெனவே கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இது குறித்து பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, ``எங்கள் தலைவர்களை திருடினார்கள். எங்கள் கட்சியை திருடினார்கள். இப்போது எங்கள் கட்சி அலுவலகத்தையும் திருடப்பார்க்கிறார்கள். அரசாங்கம் இப்படித்தான் வளர்கிறது என்று மக்கள் மனதில் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. எதையும் செய்யத்துணிவு இல்லாதவர்கள் அலுவலகத்தை திருடுகிறார்கள். மும்பை மாநகராட்சியில் இருக்கும் எங்கள் அலுவலகத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உரிமை கோருகிறார். அவர்(ஷிண்டே) ஆர்.எஸ்.எஸ் அலுவலம் சென்றதாக கேள்விப்பட்டேன். ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கும் உரிமை கொண்டாடுவார்.

மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளையும் நன்றாகப் பார்க்கவேண்டும். எங்காவது எலுமிச்சம் பழத்தை வீசிவிட்டுச் சென்றிருப்பார். பில்லி சூனியம் வைத்தாலும் வைத்திருப்பார். அவரது (ஷிண்டே) கண் எப்படி என்று எங்களுக்கு தெரியும். அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர் ஊழலில் ஈடுபடுகிறார்" என்று குற்றம்சாட்டினார். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...