Skip to main content

ஆடியோ லீக் விவகாரம்; தாக்கப்பட்ட சுயேச்சை கவுன்சிலர்! - களேபரமான பள்ளப்பட்டி நகராட்சி கூட்டம்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முனவர்ஜான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையர், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்களது பகுதியில் உள்ள குறைகளை கூட்டத்தில் பேசினர். இதில், கூட்டத்துக்கு வந்த பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் பஷீர் அகமது மற்றும் 26-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோவில், துணைத் தலைவர் தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி பெண் தலைவரை ஆபாசமாகப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால், நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், பள்ளப்பட்டி நகராட்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ஆதரவு கவுன்சிலர்கள், அவரை எதிர்த்துப் பேச முடியாமல் இருப்பதாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த துணைத் தலைவர் ஆதரவு தி.மு.க கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

பள்ளப்பட்டி நகராட்சி

மேலும், நகராட்சி கூட்டத்திலேயே இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சுயேச்சை கவுன்சிலரிடம், ஆடியோ வெளியிட்டது குறித்து, பள்ளப்பட்டி தி.மு.க துணைத் தலைவர் ஆதரவாளர்கள் மற்றும் நகராட்சி தி.மு.க உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுயேச்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சுயேச்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் இஸ்மாயிலின் மகன்.

சாகுல் ஹமீது (சுயேச்சை கவுன்சிலர்)

பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க-வைச் சேர்ந்த தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையில் நீருபூத்த நெருப்பாக இருக்கும் பிரச்னை, சுயேச்சை கவுன்சிலரை தாக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக தி.மு.க-வினரே விமர்சனம் செய்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் சுயேச்சை கவுன்சிலரிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், துணைத் தலைவர் பஷீர் அகமது தரப்பில், "எங்கள் தரப்பில் யாரும் அவர்மீது தாக்குதல் நடத்தவில்லை. அவராக மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டு, நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவிக்கின்றனர். பள்ளப்பட்டி நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...