Skip to main content

ஆடியோ லீக் விவகாரம்; தாக்கப்பட்ட சுயேச்சை கவுன்சிலர்! - களேபரமான பள்ளப்பட்டி நகராட்சி கூட்டம்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முனவர்ஜான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையர், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்களது பகுதியில் உள்ள குறைகளை கூட்டத்தில் பேசினர். இதில், கூட்டத்துக்கு வந்த பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் பஷீர் அகமது மற்றும் 26-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோவில், துணைத் தலைவர் தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி பெண் தலைவரை ஆபாசமாகப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால், நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், பள்ளப்பட்டி நகராட்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ஆதரவு கவுன்சிலர்கள், அவரை எதிர்த்துப் பேச முடியாமல் இருப்பதாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த துணைத் தலைவர் ஆதரவு தி.மு.க கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

பள்ளப்பட்டி நகராட்சி

மேலும், நகராட்சி கூட்டத்திலேயே இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சுயேச்சை கவுன்சிலரிடம், ஆடியோ வெளியிட்டது குறித்து, பள்ளப்பட்டி தி.மு.க துணைத் தலைவர் ஆதரவாளர்கள் மற்றும் நகராட்சி தி.மு.க உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுயேச்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சுயேச்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் இஸ்மாயிலின் மகன்.

சாகுல் ஹமீது (சுயேச்சை கவுன்சிலர்)

பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க-வைச் சேர்ந்த தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையில் நீருபூத்த நெருப்பாக இருக்கும் பிரச்னை, சுயேச்சை கவுன்சிலரை தாக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக தி.மு.க-வினரே விமர்சனம் செய்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் சுயேச்சை கவுன்சிலரிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், துணைத் தலைவர் பஷீர் அகமது தரப்பில், "எங்கள் தரப்பில் யாரும் அவர்மீது தாக்குதல் நடத்தவில்லை. அவராக மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டு, நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவிக்கின்றனர். பள்ளப்பட்டி நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...